Tuesday, August 5, 2008

"ப்ரிட்டிஷ் முறையில் அமைந்துள்ள சட்டத்தையும், நடைமுறைகளையும்.....

...... இந்திய நிலைமைக்கும், வழிமுறைகளுக்கும் ஏற்றார்ப்போல மாற்றி அமைக்க வேண்டும். சட்டம் சாதாரண மனிதன் கூட படித்து புரிந்து கொள்ளுமாறு இருக்க வேண்டும்"

என்று 04/08/1958 அன்று, ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டில் ஒரு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தபோது அவர் மேலும் சொன்னார்,

"நாட்டின் உடனடி தேவை, தாமதமில்லாமல் தீர்ப்பு வழங்குதலும், கோர்ட் செலவு அதிகமில்லாமலும் இருக்க வேண்டும். நாட்டின் ஒரு நிரந்தர உறுப்பாக விளங்கும் சட்டமுறைக்கும், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கும் எல்லா ஹைகோர்ட் நீதிபதிகளுக்கும் என் பாராட்டுக்கள்."
நன்றி- தி ஹிண்டு, 04/08/08

ஐம்பது ஆண்டுகள் ஆகியும் எந்த மாறுதலும் ஆனதாக தெரியவில்லையே. நாட்டின் ஒரு முதல்வருக்கெ அரசு நியமித்த சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள், உரிய காலத்தில் தகவல்
தராததால் சங்கடம்.

பொல்லாத் தனத்தை என்ன சொல்வேன் கண்ணா

இன்று கே டிவி பார்த்தீர்களா. பழைய படங்களை மிஸ் பண்ணாதீங்க. நல்ல பாடல்கள் கேட்கலாம். ஏவிஎம்மின் பெண் படம். அதில் எல்லா பாடல்களுமே நன்றாக இருக்கும். சுதர்சனம் இசை.

இந்த பாட்டை கேளுங்களேன் ஸாரி படியுங்கள்.

பொல்லாத் தனத்தை என்ன சொல்வேன் கண்னா
இனி போதும் மலர் கண்ணனே

புல்லாங்குழலில் உள்ளம் எல்லாம் மயக்கியே
புல்லாங்குழலில் உள்ளம் எல்லாம் மயக்கி
கண்ணைப் பொத்தி மெல்ல அழ வைக்காதடா
உனது பொல்லாத் தனத்தை......

பத்து ஜனங்கள் நடுவிலே உன்னை பாலனென்று தூக்கி எடுத்தால்
கட்டி முத்தமிட்டு வம்புகள் செய்வாய்
வெட்கக் கேட்டினை எவரிடம் சொல்வேன்

உன்னை காணாதிருந்தால் கணம் ஓர் யுகமாகுதே
காணாதிருந்தால் கணம் ஓர் யுகமாகுதே


கட்டிப் போடுவேன், எந்தன் அருகில் விரைந்து வருவையே
உன்னை கட்டி போடுவேன் எந்தன் அருகில் விரைந்து வருவையே

உனது பொல்லாத் தனத்தை என்ன சொல்வேன் கண்ணா
இனிபோதும் மலர் கண்ணனே.

சிட்டை ஸ்வரங்களுடன் டி.எஸ்.பகவதி அழகாக பாடியிருப்பார்.
அஞ்சலி தேவி பாட ஜெமினி கணேசன் வீணை வாசிப்பது போல காட்சி.

பாடல்களை ரீமிக்ஸ் என்று கெடுப்பதை விட அப்படியே இன்றைய பாடகி/பாடகர்களை பாட வைத்து காட்சிகள் எடுத்தால் எத்தனை நல்ல பாட்டுக்கள் கேட்கலாம்.

Saturday, August 2, 2008

கெட்டிக்காரன் யார்? ரோல் பிலிம் கேமராவா, டிஜிட்டல் கேமராவா?

பாக்ஸ் கேமரா, ஃபோல்டிங் கேமரா, ட்வின் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ், 35எம்.எம் கேமரா, ரேஞ்ச் ஃபைண்டர், எக்ஸ்போஷர் மீட்டர்,, சிங்கிள் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ், வைட் ஆங்கிள்/டெலிபோட்டோ லென்ஸ், ஜூம் லென்ஸ், இப்படி எல்லாம் புதுப் புது
கண்டுபிடிப்புகளுடன் கேமரா சென்ற நூற்றாண்டில் வளர்ச்சி அடைந்திருக்கிறது.
என்றாலும் அன்று போட்டோ நன்றாக அமைந்தது "க்ளிக்" செய்த
கெட்டிக்காரர்களால்தான்.

அப்படி ஒரு கெட்டிக்காரர் என் பெரிய அண்ணன்.

காஸ்ட்லி ஹாபி என்று கருதப்பட்ட அந்நாளில் தன் ரோலில் ஒரு ஃப்ரேம் கூட வீணாகாமல் அழகான படங்களை தன் Rolleiflex f 2.8 கேமராவில் எடுப்பார். 35எம் எம் கேமராவில் 36 படம் எடுக்கும் வரை காத்திருக்கக் கூடாது, அதற்காக படங்கள் எடுத்துத் தள்ளக் கூடாது என்றும் நெகட்டிவ் சின்னதானதால் என்லார்ஜ்மெண்ட் நன்றாக இராது என்பார். அதனால்
6cm*6cm ஸ்கொயர் நெகடிவ் தரும் 120 ரோல் தான் அவருக்குப் பிடிக்கும். ரோல் பிலிமில் இல்லாத மெகாபிக்ஸலா? தன் படங்களுக்கு பெரிய என்லார்ஜ்மெண்ட் போட்டு வாங்குவார்.

எங்கள் வீட்டு கல்யாணம், பிற விசேஷங்களில் எல்லாம் போட்டோ எடுத்து, ரோலை தானே டெவலப் செய்வார். ப்ரிண்ட்/என்லார்ஜ்மெண்ட் மட்டும்தான் ஸ்டூடியோவில்.
திருநெல்வேலியில் அன்று பிரபலமான ஸ்டூடியோ அதிபர்கள் எல்லோரும் அண்ணனிடம் கருத்துக் கேட்டு தங்கள் போட்டோகிராபர்களிடம் சொல்வார்கள். எங்கள் வீட்டில் எல்லோருக்கும் போட்டோ எடுக்க கற்றுத் கந்தார். எனக்கு அவர் முதலில் வாங்கித் தந்தது கோடக் ப்ரொளனி பாக்ஸ் கேமரா. 620 ரோலில் 6*9cm சைஸில் 8 படம் எடுக்கும்.

போட்டோகிராபியை தொழிலாக எண்ணியிருந்தால், தீரஜ் செளடா (பம்பாய்), சந்தாமியான் (மெட்ராஸ்) போல புகழ் பெற்றிருப்பார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 1960களில் நடந்ததே (வருஷம் நினைவில்லை,1961- 65 இருக்கலாம்) அப்போது கும்பாபிஷேக சிறப்பு மலரை கோவில் போட்டோக்களுடன் வெளியிட, குழுவின் தலைவர் திரு.பி.டி.ராஜனிடம், கோவில் நிர்வாகத்தில் இருந்த திரு.பழனி(எங்களூர்க்காரர்) அண்ணன் பற்றி அவரிடம் சொல்ல, பி.டி.ஆரின் அழைப்பின் பேரில், இரண்டு கேமராக்கள், ஃப்ளட் லைட், ஃப்ளாஷ், B&W/கலர் ரோல் பிலிம்களுடன் golfer உடன் செல்லும் caddie போல அண்ணனுடன் நானும் சென்றேன்.
அன்று அவர் எடுத்த படங்களில் என்னிடம் உள்ள சிலவற்றைப் பாருங்கள்.






அவருடைய கேமராக்கள்- 8எம் எம் மூவி கேமரா கூட உண்டு- நெகட்டிவ் ஆல்பம். போட்டோ ஆல்பம் எல்லாவற்றையும் அண்னன் மகன் பத்திரமாக வைத்திருக்கிறான்.

இன்று எத்தனை டிஜிட்டல் கேமராக்கள், எத்தனை மாடல்கள். அவை என்னவெல்லாம் செய்கின்றன? ஷட்டர் ஸ்பீட், அபெர்ச்சர் எல்லாம் செலக்ட் செய்கிறது, பட்டனை தள்ளினால் ஜூம் ஆகிறது. பிலிம் ஸ்பீட்(I S O)லைட்டைப் பார்த்து அதுவே எடுத்துக்கொள்கிறது. படத்தை நாம் உடனே பார்த்துக்கொள்ளலாம். ரோல் பிலிம் வாங்க வேண்டியதே இல்லை. பாட்டரி சார்ஜ் நிலையில் 300 படங்கள் எடுக்கலாம்.

அன்று குரூப் போட்டோ எடுக்க நேர்கோடாக seat போட்டால் ஒரங்களில் உள்ளவர்கள் முகம் ஃபோகஸ் ஆகாது என்று வில் (arc) வடிவில் seat போடுவார்கள். கேமராவை tripod-ல் மாட்டி, போட்டோகிராபர் தன் மேல் கருப்புதுணியை போர்த்திக்கொண்டு, க்ரவுண்ட் க்ளாஸில் ஃபோகஸ் செய்து, ப்ளேட் பிலிமை சொருகிவிட்டு, லென்ஸில் அபெர்ச்சர் செட் பண்ணி, ஸ்மைல் சொல்லி, கையால் லென்ஸ் cap-ஐ எடுத்து மூடிவிடுவார்(ஷட்டர் ஸ்பீட் லென்ஸில் கிடையாது). அந்த படங்கள் இன்னும் எவ்வளவு அழகாக இருக்கிறது?

புதிய டிஜிட்டல் கேமரா சில, முகங்களை தனித்தனியாக ஃபோகஸ் செய்து விடுமாம். யாராவது அசைந்தால் கூட ஷேக் இல்லாமல் படம் தருமாம். சிரிப்பதை பார்த்து தானே க்ளிக் செய்து விடுமாம். கம்போஸ் செய்வது மட்டும் தான் நம் வேலை.

அப்படியானால் இப்ப டிஜிட்டல் கேமராதானே கெட்டிக்காரன்?

அண்ணன் இருந்தால் இன்று எந்த டிஜிட்டல் கேமரா வாங்குவார் என்று எண்ணினேன். கூகிளில் பார்த்தபோது எனக்கு ஆச்சரியம். அவருக்கு பிடித்த ட்வின் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ், ஸ்கொயார் ஃபார்மட் - ரோலீ பிரியர்களுக்காகவே செய்தது போல
rollei MINI DIGI உள்ளங்கை அளவில் இருக்கிறது. இதுதான் அவருக்கு ரொம்ப பிடிக்கும்.



இந்த மினிடிஜி, அண்ணனுக்கு என் சமர்ப்பணம்