Wednesday, December 31, 2008

அடுத்த 12 மாதங்கள், 52 வாரங்கள், 365 நாட்கள்

இவைதான் புது வருடம். என்ன வித்தியாசம்? நாளை காலையும் சூரியன் வழக்கம் போல கிழக்கில்தான் உதிக்கும். பால்காரர் வருவார், பேப்பர் வரும். டிவியில் குடியரசு தலைவி, பிரதமர், முதலமைச்சர், நடிகநடிகையர், மற்றும் பலர் வாழ்த்து சொல்வார்கள். இன்று இரவு 12 மணி வரை கொண்டாட்டம் என்று கூத்து நடக்கும். நாமும் பார்க்கும் எல்லோருக்கும் ஹாப்பி நியூ இயர் சொல்வோம். ஏன் வருடம் முழுதும் தினம், ஹாப்பி டுடே சொல்லக்கூடாது.

புத்தாண்டு தீர்மானம் என்று ஏதாவது நினைத்து மறுநாளே மறந்து விடுவோம். புது டைரி வாங்கி மார்ச் மாதம் வரை எழுதுவோம்.

என் தீர்மானங்கள்:

தினம் முடியாவிட்டாலும் வாரம் ஒரு பதிவு எழுத வேண்டும். விசேஷ வீடுகளில் மட்டுமே சந்திக்கும் உறவினர்கள் வீட்டுக்கு மாதம் ஒரு முறையாவது சென்று வரணும். கடிதம் எழுதும் பழக்கம் அடியோடு போய்விட்டது. நிறைய எழுதணும். நம்மிடம் வேலை பார்ப்பவர் யாரும் சொன்னதை செய்யவில்லை அல்லது தப்பாக செய்தாலோ கோபப் படக்கூடாது.இப்போது ஆள் கிடைப்பதே அரிது. தினம் குட் மார்னிங் போல ஹாப்பி டுடே சொல்லணும். இந்த தீர்மானங்களை நாளை மறந்துவிடக் கூடாது

ஹாப்பி டுடே

Monday, December 29, 2008

A reque$t and an ackNOwledgement




One day an employee sends a letter to his boss asking for a raise in his salary!

Dear Bo$$.
In thi$ life, we all need $omething
mo$t de$perately. I think you $hould
be under$tanding the need$ of u$.
We are worker$ who have given
$o much $upport including
$weat and $ervice
to your company.
I am $ure you will gue$$
what I mean and re$pond $oon.

Your$ $incerely,

The next day the employee received this letter of reply.

Dear,
I kNOw you have been working very hard.
NOwadays NOthing much has changed.
You must have NOticed that our company
is NOt doing NOticably well. NOw the
newspapers are saying the world’s leading
ecoNOmists are NOt sure if the United States
may go into aNOther recession.
After the NOvember presidency elections
things may turn bad. I have NOthing more
to add NOw. You kNOw what I mean.

Your boss.


courtesy: "Coral Voice" - weekly bulletin of Rotary Club of Pearl City,

Thoothukudi

Monday, December 15, 2008

P I T டிஸம்பர் போட்டியின் தலைப்புக்கேற்ற படம்

நிழல்கள்





இவர் படம் கிடைக்காதா என்று
எல்லா பத்திரிகைகளையும்
புரட்டிக்கொண்டிருந்தேன்.
மாலை K டிவியில் சிவசக்தி
படத்தில் ரவியும் இருந்தார்.
உடனே என் செல் காமெராவில்
க்ளிக் பண்ணி பதிந்து விட்டேன்.
இது நான் எடுத்த படம்தான்.
அதனால் போட்டிக்கு என் என்ட்ரி.
சகாதேவன்

Saturday, December 13, 2008

பெரிய திரையிலும் 2 மணி நேர கர்நாடக இசை.

"மார்கழி ராகம்" என்று ஒரு 2மணி நேர திரைப்படம் டிசம்பர் 18 அன்று உலகெங்கும் ரிலீஸாகுமாம். கர்நாடக இசைக்கென்று ஒரு தனி டிவி சானல் வராதா என நான் நினைத்துக் கொண்டிக்கையில் சினிமாவே வருகிறது என்று அறிய மகிழ்ச்சி.

விகடன் 10/12/08 இதழில் படித்தேன். இயக்குநர் ஜெயேந்திரா வழக்கமான சபா கச்சேரி போலவே பரிச்சயமான ராகங்களில் ஜனரஞ்சகமான பாடல்களுடன் தயாரித்திருக்கிறார்.
முன்னெல்லாம் எல்லா ஊர்களிலும் சபா கச்சேரிகள் எல்லா மாதங்களிலும் நடக்கும்.

பாடகர்கள் எல்லோரும் சென்னையில் இருப்பதாலும் அவர்கள் கேட்கும் சன்மானத்தால் சபா செயலாளர்களால் நிகழ்ச்சி நடத்த முடிவதில்லை. ஸ்பான்சரும் கிடைப்பதில்லை. டிவியில் கூட தொடர்ந்து நிகழ்ச்சி பார்க்க முடிவதில்லை. இடையிடையே கமெர்ஷியல், அடுத்த சானலில் என்ன என்று பார்க்கும் ஆர்வத்தால் இசையை ரசிக்க மாட்டோம். இப்போதெல்லாம் எப்போ கரண்ட் கட் ஆகும் தெரியாது. சினிமா என்றால் அப்படி இல்லை.

பாம்பே ஜெயஸ்ரீயும் டி,எம்.கிருஷ்ணாவும் பாடியிருக்கிறார்கள். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவாம். தூர்தர்ஷ்னில் தம்புராவை மேலிருந்து கீழ் வரை அடிக்கடி காட்டுவார்களெ, அது போல் இல்லாமல், மிக அழகாக பாடகர்களையும், பக்க வாத்தியக் காரர்களின் முகபாவம் கைவீச்சு எல்லாம் ரசிக்கும் படி படமாக்கியிருப்பார்.

18 அன்று நெல்லையில் எந்த தியேட்டரில் என்று பார்த்து அன்றே பார்த்துவிட வேண்டும் என்றிருக்கிறேன்.

Wednesday, December 3, 2008

இந்த காரைப் பார்த்திருக்கிறீர்களா?







1948ல் ஆஸ்டின் A 40 என்று ஒரு அழகிய கார் வந்தது.

49 - 50ல் என் சித்தப்பா ஒரு புது கார் வாங்கினார். அவர் மத்தியானம் தூங்கும்போது என் கஸின் அதை எடுத்துக்கொண்டு வருவான். நாங்கள் இருவரும் டிரைவர் ரவீந்திரனுடன் ஹைகிரொளண்ட் சென்று ஓட்டிப் பழகினோம். ஊரில் அது போல வேறு யாரிடமும் இருந்ததாக நினைவில்லை.

"காஞ்சனா" என்று ஒரு படம் வந்ததே அதில் ஒரு பாடல் காட்சியில் இந்த பெடல் கார் வரும். A 40 காரே குட்டி போட்டது போல அத்தனை அழகு. சித்தப்பாவும் நீண்ட நாள் தன் A40 காரை வைத்திருந்து பின் ஸ்பேர் சாமான்கள் கிடைக்காததால் விற்று விட்டார். அதன் பின் நான் அந்த காரை மறந்துவிட்டேன்.

நேற்று தினமணி நாளிதழில் செய்தி- "பெடல் கார்- உலகப்போருக்குப் பிறகு ஆஸ்டின் நிறுவனம் குழந்தைகளுக்காக வடிவமைத்த பெடல் கார் 'J40' தற்போது லண்டனில் உள்ள அருங்காட்சியத்தில் விற்பனைக்கு வந்துள்லது. ரூ 1.5 லட்சம் வரை இது ஏலம் போகும் என எதிபார்க்கப்படுகிறது".

ஆர்வத்துடன் கூகிளில் ஆஸ்டின் J 40 என்று அடித்து ப்ரொளஸ் செய்தால் கிடைத்த தகவல்:

1948 ஆஸ்டின் A 40 காரை அப்படியே ஸ்கேல் மாடலில் (நீளம் 5' 3"; அகலம் 2' 3 1/2" ; உயரம் 1' 10" ) 1949 லிருந்து 1971 வரை தயாரிப்பில் இருந்ததாம். அமெரிக்கா, டென்மார்க், கனடா நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதியானதாம். ஆரம்பத்தில் இதன் விலை 27 பவுண்டு.


இன்று ஏலத்தில் என்ன விலை போகுமோ?