மதராஸ் கந்தசாமி முதலியார் க்ரிஸ்டியன் காலேஜில் பி.ஏ ஆங்கில இலக்கியம் படித்தவர். கல்லூரி நாட்களிலேயே ஷேக்ஸ்பியர் நாடகங்களை ப்ரின்ஸிபல் மில்லருடைய மேற்பார்வையில் அழகாக ஆங்கிலத்தில் பேசி நடிப்பாராம். பின் தமிழ், ஆங்கில நாடகங்களை மேடைகளில் நடித்துப் புகழ் பெற்றார். நாடகம் எழுதுவதுலும், நடிப்பு சொல்லிக்கொடுத்து டைரக்ட் செய்வதிலும் வாத்தியார் என்று அழைக்கப் பட்டார்.
கந்தசாமி முதலியார் தன் ஒரே மகன் எம்.கே.ராதாவை தமிழ் நாடக மேடைக்கு அறிமுகம் செய்தார். தான் பார்க்கும் ஆங்கிலப் படங்களுக் கெல்லாம் ராதாவையும் அழைத்துச் சென்று மேடை நடிப்புக்கும் சினிமா நடிப்புக்கும் உள்ள வித்தியாசங்களை விளக்கி பின் ராதா சினிமாவில் வரக் காரணமானார். ராதா நடித்த முதல் படம் எல்லிஸ் ஆர்,டங்கன் டைரக்ட் செய்த சதி "லீலாவதி". எம்.ஜி.ஆர்., டி.எஸ்.பாலையா கூட இந்தப்படத்தில் புதியவர்கள். முதலியார் பற்றி ஹிந்து நாளிதழில் 15/02/08 அன்று ராண்டார் கை எழுதிய கட்டுரையில் படித்தேன்.
பிறகு எம்.கே.ராதா ஜெமினி ஸ்டூடியோவில் சேர்ந்து பல படங்களில் நடித்தார். 'சந்திரலேகா', 'அபூர்வ சகோதரர்கள்' (இரட்டை வேடம்- கமல் நடித்தது இல்லீங்க), 'சம்சாரம்' எல்லாம் ஜெமினியின் முத்திரைப் படங்கள்
கத்திச் சண்டை-இப்போது ஆ, ஊ என்று கத்தி சண்டை போடுகிறார்களே அது இல்லை.-வாள் சண்டை. சந்திரலேகா டைட்டிலில் "ஃபென்ஸிங்"-ஸ்டண்ட் சோமு என்று வரும். ரஞ்சனுடன் சந்திரலேகாவிலும், நாகேந்திர ராவுடன் அ.சகோதரர்களிலும் ராதா போட்ட ஃபென்சிங் போல அதற்குப் பிறகு எந்தப் படத்திலும் நான் பார்க்கவில்லை.ஆங்கிலப்படங்களில் எரால் ஃப்ளின் போட்டது போல.
சந்திரலேகா ரிலீஸ் க்கு முன் எங்கள் ஊர் கொட்டகையில் சிங்கிள் புரொஜெக்டர்தான். படம் 3 1/2 மணி நேரம் ஓடும்.அதனால் ட்புள் புரொஜெக்டர் வாங்கி விடுங்கள் என்று தயாரிப்பாளர், டைரக்டர் எஸ்.எஸ்.வாசன் சொன்னதால் டபுள் புரொஜெக்டர் வந்தது என்று என் அப்பா சொல்லக்கேட்டிருக்கிறேன். படங்களின் ஸ்டில் எதுவும் கைவசம் இல்லை. விரைவில் தேடி எடுத்து காட்டுகிறேன்.
அதன் பிறகு எம்.கே.ராதா, 'புதையல்', 'அம்பிகாபதி', 'வணங்காமுடி' என பல படங்களில் அப்பா வேடத்தில் நடித்திருக்கிறார்.
சகாதேவன்
Thursday, February 28, 2008
Wednesday, February 27, 2008
தமிழ் எழுத்துக்கு ஒரு பேரிழப்பு
இன்று காலை எழுந்ததும் வலையில்
பார்த்த செய்தி சுஜாதா அவர்களின் மறைவுதான்.
அவருடன் பேசியவர்கள், அவர் எழுதியதைப் படித்தவர்கள்,
எனப் பலரின் அனுபவங்களைப் படிக்க முடிந்தது.
மிகச் சிறந்த எழுத்தாளர். திரையிலும் சில நல்ல விஷயங்கள் சொன்னார்.
சிவாஜி படத்தில் இரு பெண்களுக்கு அங்கவை, சங்கவை என்று
பெயர் சூட்டியதற்காக அவரையும் சாலமன் பாப்பையாவையும்
வலையில் எப்படியெல்லாமோ திட்டித் தீர்த்தார்கள்,
நகைச்சுவை உணர்வே இல்லாதவர்கள்.
இன்று அவர்களே சுஜாதாவைப் புகழ்ந்து எழுதுவார்கள்.
அந்த இரு பெயர்களும் பலருக்குப் புதுசு.
சின்ன வயதிலேயே ஒளவையார் படம் பார்த்ததால்
என் போன்றவர்களுக்குத் தெரியும்.
அவர் மறைவு
தமிழ் எழுத்துக்கு ஒரு பேரிழப்பு.
சகாதேவன்
பார்த்த செய்தி சுஜாதா அவர்களின் மறைவுதான்.
அவருடன் பேசியவர்கள், அவர் எழுதியதைப் படித்தவர்கள்,
எனப் பலரின் அனுபவங்களைப் படிக்க முடிந்தது.
மிகச் சிறந்த எழுத்தாளர். திரையிலும் சில நல்ல விஷயங்கள் சொன்னார்.
சிவாஜி படத்தில் இரு பெண்களுக்கு அங்கவை, சங்கவை என்று
பெயர் சூட்டியதற்காக அவரையும் சாலமன் பாப்பையாவையும்
வலையில் எப்படியெல்லாமோ திட்டித் தீர்த்தார்கள்,
நகைச்சுவை உணர்வே இல்லாதவர்கள்.
இன்று அவர்களே சுஜாதாவைப் புகழ்ந்து எழுதுவார்கள்.
அந்த இரு பெயர்களும் பலருக்குப் புதுசு.
சின்ன வயதிலேயே ஒளவையார் படம் பார்த்ததால்
என் போன்றவர்களுக்குத் தெரியும்.
அவர் மறைவு
தமிழ் எழுத்துக்கு ஒரு பேரிழப்பு.
சகாதேவன்
Friday, February 8, 2008
செல் போனில் இனி விளம்பரமா?
செல் போனில் விளம்பரம் செய்தால் என்ன என்று செல் தயாரிப்பாளர்கள் யோசனை செய்கிறார்களாம். போன் என்பதே அவசரமாக செய்தி பரிமாற்றத்திற்காக கண்டுபிடிக்கப் பட்டது.
டெக்னாலஜி வளர்ச்சி வரவேற்கத் தக்கதுதான்.
செல் போனில் காமிரா, இன்டர்னெட், என்று எல்லாம் வந்து விட்டது. எல்லாம் தவறான வழிகளிலும் பயன் படுகிறது. செல்களின் விலையும் 1000 ரூபாயிலிருந்து கன்னா பின்னா என்று கூடுகிறது.
சிம் கார்டுகள் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு என்று அதிகக் கட்டணங்கள் ஆகிறது.
விளம்பரத்திலேயே அதிக வசூலாகுமே. அதனால் இனி காலுக்கு ப்ரீ என்பார்களா?
சகாதேவன்
டெக்னாலஜி வளர்ச்சி வரவேற்கத் தக்கதுதான்.
செல் போனில் காமிரா, இன்டர்னெட், என்று எல்லாம் வந்து விட்டது. எல்லாம் தவறான வழிகளிலும் பயன் படுகிறது. செல்களின் விலையும் 1000 ரூபாயிலிருந்து கன்னா பின்னா என்று கூடுகிறது.
சிம் கார்டுகள் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு என்று அதிகக் கட்டணங்கள் ஆகிறது.
விளம்பரத்திலேயே அதிக வசூலாகுமே. அதனால் இனி காலுக்கு ப்ரீ என்பார்களா?
சகாதேவன்
Tuesday, February 5, 2008
344/365 - என்ன மார்க்கா?
இல்லையாம்.அரசு போக்குவரத்து அதிகாரி சொல்கிறார்-"மார்க் என்றால் மகிழ்ச்சி அடையலாம்.ஆனால் சென்ற வருடம் 365 நாட்களில் 344 விபத்துக்கள் என்றால் மனம் பதைக்கிறது".
சாலை விதிகளை மதித்து, மனநிலை பாதிக்கப்பட்டபோது வண்டி ஓட்டாமல், போட்டி போடாமல், பழுதடைந்த சாலைகளில் வேகமாகச் செல்லாமல் இருந்தால் விபத்தைத் தவிர்க்கலாம். மீறி விபத்து நடந்தால் அடி பட்டவர்க்கு முதலுதவி, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்ப்பது எல்லாம் செய்ய வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுரை செய்திருக்கிறார். விபத்து ந்டந்த இடத்தில் கூடும் மக்களின் அடிக்குப் பயந்து டிரைவர் ஓடிவிடுகிரார்களே.
சென்ற மாதம் சாலை பாதுகாப்பு வாரம் நடந்தது. சாலைக்கே பாதுகாப்பு இல்லையே?. ஒரு இதழில் படித்தேன். சாலை போட்டுக்கொண்டிருக்கும் தொழிலாளர்களிடம் தொண்டர்கள் கேட்கிறார்கள் -"சீக்கிரம் ரோடு போட்டு முடியுங்கள், நாங்கள் போஸ்ட் நடுவதற்குத் தோண்ட வேண்டாமா?" மழை வேறு சாலையைக் குழி குழியாக ஆக்கி விடுகிறது. சம்பந்தப்பட்ட இலாகா உடனே ரிப்பேர் செய்வதில்லை.
சாலை விபத்து என்றால் டிரைவர்கள் மட்டுமே காரணம் என்று ஆகி விடுகிறது. ஒரு நாய் குறுக்கே ஓடினாலே ப்ரேக் போட்டு அதை காப்பாற்ற முயல்கிறார்கள். ஆள் வந்தால் செய்ய மாட்டார்களா? இப்போது கொலைமுயற்சி என்பது வரை டிரைவர் மேல் வழக்கு பதிவு செய்யப்படுமாம். குறுக்கே ஓடி வந்தவர் காயத்துடன் தப்பினால் அவர் மேல் தற்கொலை முயற்சி வழக்கு போடுவார்களா?
சாலை விதிகள் இனி பள்ளிப்பாடமாகவே இருக்க வேண்டும். நான் 1963-ல் மெட்ராஸ் சென்ற புதிதில் ஒரு நாள் மவுண்ட் ரோடிலிருந்து ஸ்கூட்டரில் பீச் ரோட்டில் ரைட் திரும்புமுன் 'நில் கவனி' சைன் பார்த்து மெதுவாக வந்து இருபுறமும் பார்த்து, கியர் மாற்றி ரைட் திரும்பினேன். வ்சில் சத்தம் கேட்டு நிறுத்தினால் போலிஸ்காரர். நில் கவனி சிக்னலில் நீ காலை ஊன்றி நின்றிருக்க வேண்டும் என்றார். பின் மாணவன் என்றதும், லைசன்ஸை வாங்கிப் பார்த்துவிட்டு, சரி இனி பார்த்துப் போ என்றார்.
ஜனத்தொகை பெருகியது போல வாகனத்தொகையும் பெருகிய நிலையில் சாலையில் கண்காணிப்பதற்கு காவலர்கள் இல்லை போல. சிக்னலில் ஆம்பர் விழுந்துவிட்டால் வேகமாக க்ராஸ் ச்ய்துவிடுகிறார்கள். இதெல்லாம் ட்ரைவிங் ஸ்கூலிலேயே ந்ன்றாகக் கற்றுத் தர வேண்டும். ஒரே மாதத்தில் லைசன்ஸ் எடுத்துத் தருவது ஒன்றுதான் அவர்கள் எண்ணம்.
எல்லோரும் பைக், கார் வாங்குவது முன்னேற்றம்தான். ஒரு மணி முன்னதாக புறப்பட்டு சைக்கிளிலோ ப்ஸ்ஸிலோ சென்றவர்கள் இப்போது 10 நிமிடத்தில் ஆபீஸ் -ஸ்கூல் போய் விடலாமே என்று அவசரமாகப் போகிறார்கள்.ட்ராக் மாறாமல் செல்வதுமில்லை.ஓவர்டேக் செய்ய சாலையின் வலது புறத்துக்கே வந்து எதிரில் வரும் வண்டிக்கு இடைஞ்சல் ஆகிறார்கள். சமயத்தில் இடது புறமாகவும் முந்துகிறார்கள்.
பெடஸ்ட்ரியன் க்ராஸிங் என்று ஒரு ஒழுங்கு கிடையாது. மார்க் செய்யப் பட்ட இடத்தில்தான் க்ராஸ் பண்ன வேண்டும். வண்டிகளும் நின்று அவர்களுக்கு வழி விட வேண்டும். இதையெல்லாம் யார் சொல்வது, யார் கேட்பது?
ட்ராஃபிக் காவலர்கள் இடைஇடையே கண்ட்ரோல் செய்யும்போது விதி மீறுபவகளுக்கு ஸ்பாட் ஃபைன் போட்டு தினசரிகளில் செய்தியாக வ்ந்தால் எல்லொருக்கும் ஒரு பயம் வரும்.
பாதசாரிகள், டிரைவர்கள் என்று சாலை உபயோகிப்பவர்கள் அனைவரும் கவனமாக இருந்தால்தான் விபத்தைத் தவிர்க்கமுடியும்
சகாதேவன்
சாலை விதிகளை மதித்து, மனநிலை பாதிக்கப்பட்டபோது வண்டி ஓட்டாமல், போட்டி போடாமல், பழுதடைந்த சாலைகளில் வேகமாகச் செல்லாமல் இருந்தால் விபத்தைத் தவிர்க்கலாம். மீறி விபத்து நடந்தால் அடி பட்டவர்க்கு முதலுதவி, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்ப்பது எல்லாம் செய்ய வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுரை செய்திருக்கிறார். விபத்து ந்டந்த இடத்தில் கூடும் மக்களின் அடிக்குப் பயந்து டிரைவர் ஓடிவிடுகிரார்களே.
சென்ற மாதம் சாலை பாதுகாப்பு வாரம் நடந்தது. சாலைக்கே பாதுகாப்பு இல்லையே?. ஒரு இதழில் படித்தேன். சாலை போட்டுக்கொண்டிருக்கும் தொழிலாளர்களிடம் தொண்டர்கள் கேட்கிறார்கள் -"சீக்கிரம் ரோடு போட்டு முடியுங்கள், நாங்கள் போஸ்ட் நடுவதற்குத் தோண்ட வேண்டாமா?" மழை வேறு சாலையைக் குழி குழியாக ஆக்கி விடுகிறது. சம்பந்தப்பட்ட இலாகா உடனே ரிப்பேர் செய்வதில்லை.
சாலை விபத்து என்றால் டிரைவர்கள் மட்டுமே காரணம் என்று ஆகி விடுகிறது. ஒரு நாய் குறுக்கே ஓடினாலே ப்ரேக் போட்டு அதை காப்பாற்ற முயல்கிறார்கள். ஆள் வந்தால் செய்ய மாட்டார்களா? இப்போது கொலைமுயற்சி என்பது வரை டிரைவர் மேல் வழக்கு பதிவு செய்யப்படுமாம். குறுக்கே ஓடி வந்தவர் காயத்துடன் தப்பினால் அவர் மேல் தற்கொலை முயற்சி வழக்கு போடுவார்களா?
சாலை விதிகள் இனி பள்ளிப்பாடமாகவே இருக்க வேண்டும். நான் 1963-ல் மெட்ராஸ் சென்ற புதிதில் ஒரு நாள் மவுண்ட் ரோடிலிருந்து ஸ்கூட்டரில் பீச் ரோட்டில் ரைட் திரும்புமுன் 'நில் கவனி' சைன் பார்த்து மெதுவாக வந்து இருபுறமும் பார்த்து, கியர் மாற்றி ரைட் திரும்பினேன். வ்சில் சத்தம் கேட்டு நிறுத்தினால் போலிஸ்காரர். நில் கவனி சிக்னலில் நீ காலை ஊன்றி நின்றிருக்க வேண்டும் என்றார். பின் மாணவன் என்றதும், லைசன்ஸை வாங்கிப் பார்த்துவிட்டு, சரி இனி பார்த்துப் போ என்றார்.
ஜனத்தொகை பெருகியது போல வாகனத்தொகையும் பெருகிய நிலையில் சாலையில் கண்காணிப்பதற்கு காவலர்கள் இல்லை போல. சிக்னலில் ஆம்பர் விழுந்துவிட்டால் வேகமாக க்ராஸ் ச்ய்துவிடுகிறார்கள். இதெல்லாம் ட்ரைவிங் ஸ்கூலிலேயே ந்ன்றாகக் கற்றுத் தர வேண்டும். ஒரே மாதத்தில் லைசன்ஸ் எடுத்துத் தருவது ஒன்றுதான் அவர்கள் எண்ணம்.
எல்லோரும் பைக், கார் வாங்குவது முன்னேற்றம்தான். ஒரு மணி முன்னதாக புறப்பட்டு சைக்கிளிலோ ப்ஸ்ஸிலோ சென்றவர்கள் இப்போது 10 நிமிடத்தில் ஆபீஸ் -ஸ்கூல் போய் விடலாமே என்று அவசரமாகப் போகிறார்கள்.ட்ராக் மாறாமல் செல்வதுமில்லை.ஓவர்டேக் செய்ய சாலையின் வலது புறத்துக்கே வந்து எதிரில் வரும் வண்டிக்கு இடைஞ்சல் ஆகிறார்கள். சமயத்தில் இடது புறமாகவும் முந்துகிறார்கள்.
பெடஸ்ட்ரியன் க்ராஸிங் என்று ஒரு ஒழுங்கு கிடையாது. மார்க் செய்யப் பட்ட இடத்தில்தான் க்ராஸ் பண்ன வேண்டும். வண்டிகளும் நின்று அவர்களுக்கு வழி விட வேண்டும். இதையெல்லாம் யார் சொல்வது, யார் கேட்பது?
ட்ராஃபிக் காவலர்கள் இடைஇடையே கண்ட்ரோல் செய்யும்போது விதி மீறுபவகளுக்கு ஸ்பாட் ஃபைன் போட்டு தினசரிகளில் செய்தியாக வ்ந்தால் எல்லொருக்கும் ஒரு பயம் வரும்.
பாதசாரிகள், டிரைவர்கள் என்று சாலை உபயோகிப்பவர்கள் அனைவரும் கவனமாக இருந்தால்தான் விபத்தைத் தவிர்க்கமுடியும்
சகாதேவன்
Monday, February 4, 2008
சங்கீதம் அன்றும் இன்றும்
இன்று கே-டிவியில் நான் பார்த்த பழைய படம், "நான் பெற்ற செல்வம்".
'பூவா மரமும் பூத்ததே', 'மாதா பிதா குரு தெய்வம், 'நான் பெற்ற செல்வம்'
பாடல்களுக்காக எனக்கு மிகவும் பிடித்த படம். நான் முதன் முதலில் பார்த்துக் கேட்ட சினி ஆர்கெஸ்ட்ரா, இசை அமைப்பாளர் ஜி.ராமனாதன் அவர்களுடையதுதான். நெல்லை சங்கீத சபாவில் நடந்தது.
இன்று எல்லா இசைக்கருவிகளும் கீ போர்டில் வாசிக்கிறார்கள். அன்று நாலைந்து வயலின்கள்,ட்ரம்பெட்,க்ளாரினெட், வீணை, தபேலா, டோலக்,மிருதங்கம்,ட்ரம்ஸ் என்று அத்தனை கருவிகளையும் பார்த்ததே நன்றாக இருந்தது.
நிகழ்ச்சியில் என்னை மிகவும் கவர்ந்தவர் தபேலா வசித்த டி.பி.பைரவன் தான். சிரித்த முகத்தோடு அழகாக வாசித்தார்.
இன்று கேட்கும் பாடல்களில் நீலகண்டன் என்பவர் வாசிப்புதான் பைரவனை நினைவு படுத்துகிறது.
சகாதேவன்
'பூவா மரமும் பூத்ததே', 'மாதா பிதா குரு தெய்வம், 'நான் பெற்ற செல்வம்'
பாடல்களுக்காக எனக்கு மிகவும் பிடித்த படம். நான் முதன் முதலில் பார்த்துக் கேட்ட சினி ஆர்கெஸ்ட்ரா, இசை அமைப்பாளர் ஜி.ராமனாதன் அவர்களுடையதுதான். நெல்லை சங்கீத சபாவில் நடந்தது.
இன்று எல்லா இசைக்கருவிகளும் கீ போர்டில் வாசிக்கிறார்கள். அன்று நாலைந்து வயலின்கள்,ட்ரம்பெட்,க்ளாரினெட், வீணை, தபேலா, டோலக்,மிருதங்கம்,ட்ரம்ஸ் என்று அத்தனை கருவிகளையும் பார்த்ததே நன்றாக இருந்தது.
நிகழ்ச்சியில் என்னை மிகவும் கவர்ந்தவர் தபேலா வசித்த டி.பி.பைரவன் தான். சிரித்த முகத்தோடு அழகாக வாசித்தார்.
இன்று கேட்கும் பாடல்களில் நீலகண்டன் என்பவர் வாசிப்புதான் பைரவனை நினைவு படுத்துகிறது.
சகாதேவன்
Wednesday, December 5, 2007
கல்யாண சமையல் சாதம்
கல்யாண சமையல் சாதம்
காய்கறிகளும் பிரமாதம்
சாப்பிட்ட பிறகு பார்த்தால்
எல்லா இலையிலும் மீதம்.
முன்னெல்லாம் கல்யாண வீட்டில் முகூர்த்தம் முடிந்ததும் இலை போட்டு சாப்பிட அழைப்பார்கள். பாயில் உட்கார்ந்து நாமே தண்ணீர் விட்டு இலை கழுவியதும் உப்பு, ஊறுகாயில் ஆரம்பித்து பரிமாறுவார்கள். ஒரு "நாலு குழி சட்டி"யில் பொரியல், கூட்டு, அவியல், பச்சடி என்று கேட்டு அதனதன் இடத்தில் இடுவார்கள். சாப்பிடும்போதுஇலையைப் பார்த்து மீண்டும் பரிமாறுவார்கள். நாம் வேண்டியதை வாங்கிக் கொள்ளவும் பிடிக்காததை ஒதுக்கி விடவும் முடியும். இலையில் எதுவும் வீணாகாமல் போகும்.
எங்கள் வீட்டுக் கல்யாணப் பந்தியில் என் அருகே அமர்ந்த என் அண்னனின் நண்பர் திரு.கந்தசாமி அவர்கள் என்னிடம் சொன்னார், " உன் இலையில் மிளகாய், கரிவேப்பிலை, முருங்கைக்காய் தோல் ஆகியவைதான் இருக்கலாம். வேறு எதுவும் மிச்சம் வைக்கக்கூடாது" என்றார். அன்றிலிருந்து 45 வருடங்களாக அப்படித்தான் சாப்பிடுகிறேன்.
இன்று எதிலும் அவசரம்.முகூர்த்தம் முடியும் முன்பே இலையில் எல்லா கறிகளும் பரிமாறி, நாம் அமர்ந்தபின் சாதம் கொட்டுவார்கள். ஆமாம், பெரிய அகப்பையில் சாதம் இடுவார்கள். இரண்டாவது ரவுண்டு வர அவர்களுக்கு பொறுமை இல்லை. காரணம் பரிசாரகர்கள் யாருக்கும் இந்த வேலைக்கு வேண்டிய அனுபவமும் கரிசனமும் கிடையாது. சமையல் கான்ட்ராக்டர்களும் அவர்களுக்கு ட்ரெயினிங் கொடுத்து அனுப்புவது இல்லை. கடைசியில் எல்லா இலைகளிலும் எல்லா பதார்த்தங்களூம் மீதமாகி குப்பையாக வீசப்படுகின்றன. விருந்தினர்களும் வீணாக்காமல் சாப்பிடும் வழக்கம் கொள்ள வேண்டும்.
பஃபே ஸ்டைலிலும் இப்படித்தான். ஒருமுறை, சர்வர் அவியல் ஒரு பெரிய கரண்டியில் எடுத்தான். நான் கொஞ்சம் போதும் என்றால் அவன் கொஞ்சம்தான் விழும் என்றான். நான் கரண்டியை அவனிடமிருந்து வாங்கி முழுவதையும் சட்டியில் தட்டிவிட்டு பாதி கரண்டி மட்டும் எடுத்துக்கொண்டேன்..
எல்லா சமயமும் இப்படி உணவு வீணாவதைப் பார்க்கும் போது மிகவும் சங்கடமாக உள்ளது. அளவாகப் பரிமாறி எல்லோரையும் நிறைவாக சாப்பிட வைத்து, மிஞ்சும் உணவை அருகில் உள்ள அனாதை விடுதியிலோ, முதியோர் இல்லத்திலோ கொடுத்தால் அவர்களும் மணமக்களை வாழ்த்துவார்களே? ஏன் செய்யக்கூடாது?
காய்கறிகளும் பிரமாதம்
சாப்பிட்ட பிறகு பார்த்தால்
எல்லா இலையிலும் மீதம்.
முன்னெல்லாம் கல்யாண வீட்டில் முகூர்த்தம் முடிந்ததும் இலை போட்டு சாப்பிட அழைப்பார்கள். பாயில் உட்கார்ந்து நாமே தண்ணீர் விட்டு இலை கழுவியதும் உப்பு, ஊறுகாயில் ஆரம்பித்து பரிமாறுவார்கள். ஒரு "நாலு குழி சட்டி"யில் பொரியல், கூட்டு, அவியல், பச்சடி என்று கேட்டு அதனதன் இடத்தில் இடுவார்கள். சாப்பிடும்போதுஇலையைப் பார்த்து மீண்டும் பரிமாறுவார்கள். நாம் வேண்டியதை வாங்கிக் கொள்ளவும் பிடிக்காததை ஒதுக்கி விடவும் முடியும். இலையில் எதுவும் வீணாகாமல் போகும்.
எங்கள் வீட்டுக் கல்யாணப் பந்தியில் என் அருகே அமர்ந்த என் அண்னனின் நண்பர் திரு.கந்தசாமி அவர்கள் என்னிடம் சொன்னார், " உன் இலையில் மிளகாய், கரிவேப்பிலை, முருங்கைக்காய் தோல் ஆகியவைதான் இருக்கலாம். வேறு எதுவும் மிச்சம் வைக்கக்கூடாது" என்றார். அன்றிலிருந்து 45 வருடங்களாக அப்படித்தான் சாப்பிடுகிறேன்.
இன்று எதிலும் அவசரம்.முகூர்த்தம் முடியும் முன்பே இலையில் எல்லா கறிகளும் பரிமாறி, நாம் அமர்ந்தபின் சாதம் கொட்டுவார்கள். ஆமாம், பெரிய அகப்பையில் சாதம் இடுவார்கள். இரண்டாவது ரவுண்டு வர அவர்களுக்கு பொறுமை இல்லை. காரணம் பரிசாரகர்கள் யாருக்கும் இந்த வேலைக்கு வேண்டிய அனுபவமும் கரிசனமும் கிடையாது. சமையல் கான்ட்ராக்டர்களும் அவர்களுக்கு ட்ரெயினிங் கொடுத்து அனுப்புவது இல்லை. கடைசியில் எல்லா இலைகளிலும் எல்லா பதார்த்தங்களூம் மீதமாகி குப்பையாக வீசப்படுகின்றன. விருந்தினர்களும் வீணாக்காமல் சாப்பிடும் வழக்கம் கொள்ள வேண்டும்.
பஃபே ஸ்டைலிலும் இப்படித்தான். ஒருமுறை, சர்வர் அவியல் ஒரு பெரிய கரண்டியில் எடுத்தான். நான் கொஞ்சம் போதும் என்றால் அவன் கொஞ்சம்தான் விழும் என்றான். நான் கரண்டியை அவனிடமிருந்து வாங்கி முழுவதையும் சட்டியில் தட்டிவிட்டு பாதி கரண்டி மட்டும் எடுத்துக்கொண்டேன்..
எல்லா சமயமும் இப்படி உணவு வீணாவதைப் பார்க்கும் போது மிகவும் சங்கடமாக உள்ளது. அளவாகப் பரிமாறி எல்லோரையும் நிறைவாக சாப்பிட வைத்து, மிஞ்சும் உணவை அருகில் உள்ள அனாதை விடுதியிலோ, முதியோர் இல்லத்திலோ கொடுத்தால் அவர்களும் மணமக்களை வாழ்த்துவார்களே? ஏன் செய்யக்கூடாது?
Friday, September 28, 2007
கிரிக்கெட்- விளையாட்டா? வியாபாரமா?
1983க்குப் பிறகு 2007ல் இந்தியா உலகக்கோப்பை வென்றது பெருமைதான்.ஆனால் அன்று உள்ள விதிகள் என்ன? பின் ஒன்டே மாட்ச் வந்தது. இன்று ட்வென்டி- 20. வியாழனன்று நாடு திரும்பிய கிரிக்கெட்டர்களுக்கு(வீரர்கள்/ஹீரோக்கள் அல்ல) அளிக்கப்பட்ட வரவேற்பும் பரிசளிப்பும் மிகையானது. 30 கிலோமீட்டருக்கு ட்ராஃபிக் ஜாம். மழையில் பைத்தியங்கள்(மக்கள்தான்) காத்து நின்று கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது. வான்கடே ஸ்டேடியத்தில் மேட்ச் பார்க்கக்கூட இவ்வளவு கூட்டம் வருமா என்று தெரியவில்லை.
ஆசியக்கோப்பை வென்ற ஹாக்கி ப்ளேயர்களுக்கு இத்தனை பரிசு தரப்பட வில்லையே என்று கேள்வி எழ, ஒரு முன்னாள் கிரிக்கெட்டர் டிவியில் விளக்குகிறார்- ஆசியக்கோப்பையை விட உலகக்கோப்பை பெரியதாம். செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாத், டென்னிஸ் சான்யா மிர்ஸா இவர்கள் எல்லாம் நாடு திரும்பிய போது இத்தனை வரவேற்பும் பரிசும் தரப்பட்டதா?
ஒரே ஒவரில் 6 சிக்ஸர் அடித்த ரவி சாஸ்திரி என்ன பரிசு வாங்கினார்? அது ரஞ்சி ட்ரோஃபி என்பதால் பேர் மட்டும்தானா. இன்று 1 கோடி ரூபாயாம், போர்ஷே காராம்.
பத்திரிகையும் "இந்தியா பாகிஸ்தானுடன் மோதல்" என்றும் "பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது" என்றும்தான் எழுதுகிறது. இது என்ன யுத்தமா? விளையாடுகிறது, ஜெயித்தது என்று எழுதினால் என்ன.
ரேடியோவில் ரன்னிங் கமென்டரி கேட்ட காலத்திலிருந்தே கிரிக்கெட் மக்களைக் கவர்ந்த கேம்தான்.பள்ளிக்கூடங்களில் இப்போது மைதானமே கிடையாது. கட்டிடங்கள்தான் உயர்ந்து கொண்டிருக்கின்றன.மற்ற விளையாட்டுகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து கல்வித்துறை மாணவர்களுக்கு விளையாட்டையும் கற்பித்து உடல்பயிற்சியுடன் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவதையும் வளர்க்க வேண்டும்.
ஆசியக்கோப்பை வென்ற ஹாக்கி ப்ளேயர்களுக்கு இத்தனை பரிசு தரப்பட வில்லையே என்று கேள்வி எழ, ஒரு முன்னாள் கிரிக்கெட்டர் டிவியில் விளக்குகிறார்- ஆசியக்கோப்பையை விட உலகக்கோப்பை பெரியதாம். செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாத், டென்னிஸ் சான்யா மிர்ஸா இவர்கள் எல்லாம் நாடு திரும்பிய போது இத்தனை வரவேற்பும் பரிசும் தரப்பட்டதா?
ஒரே ஒவரில் 6 சிக்ஸர் அடித்த ரவி சாஸ்திரி என்ன பரிசு வாங்கினார்? அது ரஞ்சி ட்ரோஃபி என்பதால் பேர் மட்டும்தானா. இன்று 1 கோடி ரூபாயாம், போர்ஷே காராம்.
பத்திரிகையும் "இந்தியா பாகிஸ்தானுடன் மோதல்" என்றும் "பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது" என்றும்தான் எழுதுகிறது. இது என்ன யுத்தமா? விளையாடுகிறது, ஜெயித்தது என்று எழுதினால் என்ன.
ரேடியோவில் ரன்னிங் கமென்டரி கேட்ட காலத்திலிருந்தே கிரிக்கெட் மக்களைக் கவர்ந்த கேம்தான்.பள்ளிக்கூடங்களில் இப்போது மைதானமே கிடையாது. கட்டிடங்கள்தான் உயர்ந்து கொண்டிருக்கின்றன.மற்ற விளையாட்டுகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து கல்வித்துறை மாணவர்களுக்கு விளையாட்டையும் கற்பித்து உடல்பயிற்சியுடன் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவதையும் வளர்க்க வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)