அடுத்த கமல் படத்தின் விளம்பரத்தில் நடிகர் லிஸ்ட் இப்படி இருக்குமோ?
இது கமலோ, இதுவும் கமலோ என்று வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் (பாத்திரம்தான், கதையில்லை)கமல்ஹாசனோ என்று நினைக்க வைக்கும் அளவுக்கு வேடங்கள் அணிந்து நடித்துள்ள படம் தசாவதாரம்.
வசனமும் அவர்தானாம். நெப்போலிய குலோத்துங்கன், "யாம் அறிவோம், யாம் அறிவோம்" என்று சொன்னதும், ரங்கராஜன், "உன்னை அறியாமல் ஹரிஓம், ஹரிஓம் என்று எத்தனை முறை சொல்லிவிட்டய்", என்று கேட்டதில் கற்பனையும்,
கோவிந்தன், போலீஸ் ராவ் இடமும் நரசிம்மராவ் இடமும், ராவோட ராவாக இருந்து செய்து விடுங்கள் என்று சொல்வதில் ந்கைச்சுவையும் நன்றாக இருக்கிறது.
6.30க்கு தொடங்கிய படம் இன்னும் இன்டர்வல் வரவில்லையே என நினைக்க, 8 மணிக்கு இன்டர்மிஷன் வந்தது. சரிதான் இன்னும் 1 1/2 மணி நேரம் ஓடுமே என்று நினைத்து ஒரு ப்ரூ காபி சாப்பிட்டுவிட்டு அவளுக்கு ஒரு கோன் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொண்டு வந்தேன்
டைரக்டர்கள் பி.வாசு, சந்தானபாரதி எல்லோரும் வந்துவிட்டார்கள், ரவிக்குமார் வந்ததும் படம் முடிந்துவிடுமே என்று எதிர்பார்க்க வைத்துவிட்டார், படத்தின் டைரக்டர்.
Saturday, June 14, 2008
Friday, June 13, 2008
மூவர் ஏற்றிய தமிழ் விளக்கு
'இணையத்தில் வளர் தமிழ்' என்ற தலைப்பில், வலைப்பதிவின் வளர்ச்சியும் தமிழ் ஆய்வின் பயன்பாடும் பற்றிய கருத்தரங்கு நெல்லையில் சென்ற வாரம் நடந்தது. திரு.சேகர் பொன்னையா, திரு.முல்லை ச.முருகன் இருவரும் ஒருங்கிணைத்திருந்தார்கள்.
வாஷிங்டனிலிருந்து வந்த முனைவர் சொ.சங்கர பாண்டி பேசுகையில், அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழில் பேசும் வாய்ப்பே மிகவும் குறைந்து வருகிறது என்றார். அமெரிக்க மாநிலங்களில் உள்ள தமிழ் சங்கங்கள், தமிழ் பள்ளிக்கூடங்கள் அமைக்க கூட்டு முயற்சி செய்து வருகின்றன என்றும், தமிழ் நாட்டில்கூட பள்ளிகளில் தமிழ் பேசக்கூடாது, ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என் கட்டாயப்படுத்தும் நிலை உருவாகி வருகிறது. தமிழ் மொழியை மதிக்கவும், ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசும் நிலை வர வேண்டும் என்றார்.
தமிழ் வலைப்பதிவு பற்றி சொல்கையில் சங்கர பாண்டி, நம் கதையோ, கட்டுரையோ, கருத்துக்களோ பத்திரிகைக்கு அனுப்பி வெளிவருவதைப் பார்க்கக் காத்திருக்க வேண்டியதில்லை. நம் எழுத்தை உலகத்தமிழர்கள் அனைவரும் உடனே படிக்க வைக்க முடிகிறது என்றார்.
கோவை வாசியான திரு.காசி ஆறுமுகம், தான் அமெரிக்காவில் நான்கு ஆண்டுகள் இருந்தபோது தமிழ்மணம் வலைத்திரட்டியை தொடங்கியதையும், அதில் பதிவுகள் நேரம் வாரியாக வெளியிடப்படுவதையும், பின்னூட்டங்கள் மூலம் வாசகர்கள் பதில் எழுதுவதால் வேகமான கருத்துப் பரிமாற்றம் நிகழ்வதையும் கூறினார். நாம் எழுதுவதை நாமே தணிக்கை செய்து, நல்ல தமிழில் நல்ல கருத்துக்களை எழுதி இந்த உயிருள்ள ஊடகத்தை எல்லோரும் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அடுத்துப் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், திரு.கோ.பிரகாஷ் அவர்கள், மொழிதான் ஒரு சமூகத்தின் அடையாளம். தமிழன் என்று சொல்லிக்கொள்ளவே நாம் கர்வப் படவேண்டுமென்றார்.மூன்று தமிழ் சங்கங்கள் தொடங்கியதே தமிழ் வளர்ச்சிக்காகத்தான். இலக்கியமே கற்பனை கலந்த கதையின் வடிவமைப்புதான். திராவிட மொழிகள் அனைத்துக்கும் ஆணிவேர் தமிழ்தான் என்று கால்டுவெல் போன்ற மேல்நாட்டு அறிஞர்கள் கூட எழுதிச் சென்றார்கள்
திரு. பிரகாஷ், தான் ஐ.ஏ.எஸ் பயிலும் போது தமிழை இரண்டாவது மொழியாக எடுத்துக்கொண்டதாகவும் அப்பொழுதுதான் தமிழ் மொழியின் நீளம், அகலம், விஸ்தீரணம் தன்னால் அறிந்து கொள்ள முடிந்தது என்றும் கூறினார். இந்திய மொழிகளிலேயே ஆங்கிலத்திற்கு அடுத்த படியாக தமிழ்தான் வலைப்பதிவில் அதிகம் காண முடிவதால் உலகெங்கிலும்தமிழர்கள் வாழ்ந்து தமிழைப் பரப்புவது தெரிகிறது.
நாணயத்தின் மறு பக்கத்தை காட்டிய திரு.பிரகாஷ், நகரத்தன்மை வாய்ந்த ஊர்களில் தமிழ் எழுதுவது, பேசுவது, படிப்பதையே சமூகம் கீழ்நிலையில் பார்க்கிறது என்றார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தமிழ் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும், ஏனென்றால் ஞாயிறு முதல் சனி வரை கிழமைகள் கூட அவர்களுக்கு தமிழில் சொல்லத்தெரிவதில்லை. அடுத்த தலைமுறை தமிழை மறந்துவிடாமல் பெருமை வாய்ந்த தமிழ் மொழியை பல்லாண்டு திகழச்செய்ய வேண்டும் என்றார்.
ஹுஸ்டன் நகரில் நாசா விண்வெளி மையத்தில் பணிபுரியும் முனைவர்.நா.கணேசன், முதுகலையிலும் தமிழ் ஒரு விருப்பப் பாடமா இருக்க வேண்டும் என்றார். தமிழ் பத்திரிகைகள் குமுதம், விகடன் யுனிகோட் முறைக்கு மாறி தங்கள் இதழ்களை வெளியிடுகின்றன என்றும் தமிழில் எழுத விரும்பும் பதிவர்கள் தமிழ்நெட் 99 தட்டச்சு பயன் படுத்தி சுலபமாக தங்கள் பதிவுகளை வெளியிடலாம் என்றும் கூறினார்.
முனைவர்.மு.இளங்கோவன், கருத்தரங்கு நடந்துகொண்டிருக்கும் போதே நிகழ்ச்சிகளை புகைப் படங்களுடன் தன்னுடைய வலைப்பதிவில் பதிவு செய்து கொண்டிருந்தார்.
வழக்கறிஞர் டி.ஏ. பிரபாகர் நன்றி கூறினார்.
வாஷிங்டனிலிருந்து வந்த முனைவர் சொ.சங்கர பாண்டி பேசுகையில், அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழில் பேசும் வாய்ப்பே மிகவும் குறைந்து வருகிறது என்றார். அமெரிக்க மாநிலங்களில் உள்ள தமிழ் சங்கங்கள், தமிழ் பள்ளிக்கூடங்கள் அமைக்க கூட்டு முயற்சி செய்து வருகின்றன என்றும், தமிழ் நாட்டில்கூட பள்ளிகளில் தமிழ் பேசக்கூடாது, ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என் கட்டாயப்படுத்தும் நிலை உருவாகி வருகிறது. தமிழ் மொழியை மதிக்கவும், ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசும் நிலை வர வேண்டும் என்றார்.
தமிழ் வலைப்பதிவு பற்றி சொல்கையில் சங்கர பாண்டி, நம் கதையோ, கட்டுரையோ, கருத்துக்களோ பத்திரிகைக்கு அனுப்பி வெளிவருவதைப் பார்க்கக் காத்திருக்க வேண்டியதில்லை. நம் எழுத்தை உலகத்தமிழர்கள் அனைவரும் உடனே படிக்க வைக்க முடிகிறது என்றார்.
கோவை வாசியான திரு.காசி ஆறுமுகம், தான் அமெரிக்காவில் நான்கு ஆண்டுகள் இருந்தபோது தமிழ்மணம் வலைத்திரட்டியை தொடங்கியதையும், அதில் பதிவுகள் நேரம் வாரியாக வெளியிடப்படுவதையும், பின்னூட்டங்கள் மூலம் வாசகர்கள் பதில் எழுதுவதால் வேகமான கருத்துப் பரிமாற்றம் நிகழ்வதையும் கூறினார். நாம் எழுதுவதை நாமே தணிக்கை செய்து, நல்ல தமிழில் நல்ல கருத்துக்களை எழுதி இந்த உயிருள்ள ஊடகத்தை எல்லோரும் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அடுத்துப் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், திரு.கோ.பிரகாஷ் அவர்கள், மொழிதான் ஒரு சமூகத்தின் அடையாளம். தமிழன் என்று சொல்லிக்கொள்ளவே நாம் கர்வப் படவேண்டுமென்றார்.மூன்று தமிழ் சங்கங்கள் தொடங்கியதே தமிழ் வளர்ச்சிக்காகத்தான். இலக்கியமே கற்பனை கலந்த கதையின் வடிவமைப்புதான். திராவிட மொழிகள் அனைத்துக்கும் ஆணிவேர் தமிழ்தான் என்று கால்டுவெல் போன்ற மேல்நாட்டு அறிஞர்கள் கூட எழுதிச் சென்றார்கள்
திரு. பிரகாஷ், தான் ஐ.ஏ.எஸ் பயிலும் போது தமிழை இரண்டாவது மொழியாக எடுத்துக்கொண்டதாகவும் அப்பொழுதுதான் தமிழ் மொழியின் நீளம், அகலம், விஸ்தீரணம் தன்னால் அறிந்து கொள்ள முடிந்தது என்றும் கூறினார். இந்திய மொழிகளிலேயே ஆங்கிலத்திற்கு அடுத்த படியாக தமிழ்தான் வலைப்பதிவில் அதிகம் காண முடிவதால் உலகெங்கிலும்தமிழர்கள் வாழ்ந்து தமிழைப் பரப்புவது தெரிகிறது.
நாணயத்தின் மறு பக்கத்தை காட்டிய திரு.பிரகாஷ், நகரத்தன்மை வாய்ந்த ஊர்களில் தமிழ் எழுதுவது, பேசுவது, படிப்பதையே சமூகம் கீழ்நிலையில் பார்க்கிறது என்றார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தமிழ் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும், ஏனென்றால் ஞாயிறு முதல் சனி வரை கிழமைகள் கூட அவர்களுக்கு தமிழில் சொல்லத்தெரிவதில்லை. அடுத்த தலைமுறை தமிழை மறந்துவிடாமல் பெருமை வாய்ந்த தமிழ் மொழியை பல்லாண்டு திகழச்செய்ய வேண்டும் என்றார்.
ஹுஸ்டன் நகரில் நாசா விண்வெளி மையத்தில் பணிபுரியும் முனைவர்.நா.கணேசன், முதுகலையிலும் தமிழ் ஒரு விருப்பப் பாடமா இருக்க வேண்டும் என்றார். தமிழ் பத்திரிகைகள் குமுதம், விகடன் யுனிகோட் முறைக்கு மாறி தங்கள் இதழ்களை வெளியிடுகின்றன என்றும் தமிழில் எழுத விரும்பும் பதிவர்கள் தமிழ்நெட் 99 தட்டச்சு பயன் படுத்தி சுலபமாக தங்கள் பதிவுகளை வெளியிடலாம் என்றும் கூறினார்.
முனைவர்.மு.இளங்கோவன், கருத்தரங்கு நடந்துகொண்டிருக்கும் போதே நிகழ்ச்சிகளை புகைப் படங்களுடன் தன்னுடைய வலைப்பதிவில் பதிவு செய்து கொண்டிருந்தார்.
வழக்கறிஞர் டி.ஏ. பிரபாகர் நன்றி கூறினார்.
Monday, June 2, 2008
ஹீரோவுக்கு புதிய தோழர்கள்.
சந்தோஷ் சுப்பிரமணியம் படம் 50 நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.நேற்றுதான் திரையரங்கில் பார்த்தேன்.
தனி காமெடி ட்ராக், வில்லன், பாட்டு/டான்ஸ், எதுவுமில்லாமல் நம்மையும் சந்தோஷின் குடும்பத்தில் ஒருவராக 3 மணி நேரம் கட்டிப்போட்டு விட்ட கதை. நிச்சயிக்கப் பட்ட கல்யாணம் என்னாகும் என்ற டென்ஷன் நமக்கு.
ஹீரோவுக்கு தோழர்களாக விவேக், சார்லி, தாமு, வையாபுரி யாரும் இல்லாமல் மூன்று புதிய முகங்களைப் பார்த்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.
தனி காமெடி ட்ராக், வில்லன், பாட்டு/டான்ஸ், எதுவுமில்லாமல் நம்மையும் சந்தோஷின் குடும்பத்தில் ஒருவராக 3 மணி நேரம் கட்டிப்போட்டு விட்ட கதை. நிச்சயிக்கப் பட்ட கல்யாணம் என்னாகும் என்ற டென்ஷன் நமக்கு.
ஹீரோவுக்கு தோழர்களாக விவேக், சார்லி, தாமு, வையாபுரி யாரும் இல்லாமல் மூன்று புதிய முகங்களைப் பார்த்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.
Saturday, May 17, 2008
Be SILENT and LISTEN: இரண்டு வார்த்தைகளுக்கும் அதே ஏழு எழுத்துக்கள்தான்
சென்ற வாரம் ரோட்டரி க்ளப்களில் ஜூலை முதல் பதவி ஏற்க இருக்கும் புதிய தலைவர்,செயலாளர்,டைரக்டர்கள்களுக்கான பயிற்சி கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. (நாங்கள் ராமேஸ்வரத்தில் தங்கி தனுஷ்கோடிக்கும் சென்றிருந்தோம். அதைப்பற்றி ஃபோட்டோவுடன் அடுத்த பதிவில் சொல்கிறேன்)
நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ட்ரெயினர் சொன்ன முதல் வார்த்தை -"உங்கள் செல் போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள், Be SILENT and LISTEN".
நாம் ஒரு நிகழ்ச்சிக்கு செல்கையில் நம் கவனம் முழுதும் அதில் தான் இருக்கவேண்டும். இன்று எல்லோருக்கும் வேண்டிய ஒரு அறிவுரை.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ட்ரெயினர் சொன்ன முதல் வார்த்தை -"உங்கள் செல் போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள், Be SILENT and LISTEN".
நாம் ஒரு நிகழ்ச்சிக்கு செல்கையில் நம் கவனம் முழுதும் அதில் தான் இருக்கவேண்டும். இன்று எல்லோருக்கும் வேண்டிய ஒரு அறிவுரை.
Sunday, May 4, 2008
அர்ஜுன் ஒரு நாள் முதல்வர் ஆனது போல........
(தலைப்புக்காகத்தான்) நான் ஒரு நாளாவது பிரதமராக இல்லாமல் ஒரு இந்தியக் குடிமகனாக(பிரஜைதான்)என் தினசரி வேலைப்பளுவிலிருந்து ஓய்வு பெற நினைக்கிறேன் என்று பிரதமர் நேரு, ஏப்ரல் 29, 1958 அன்று காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் கூறிவிட்டு தன் சக அங்கத்தினர்களிடம் ஐடியாவும் அனுமதியும் கேட்டார்.
நேரு மேலும் சொன்னார். "சில வாரங்களுக்கு முன் நான் மாற்றம் இல்லாத வேலை செய்வதாலும், களைப்பாலும் ஒரு மாற்றம் வேண்டி அவ்வாறு சொன்னேன். எல்லோரும் எனக்கு உடல் நிலை சரியில்லை என்று நினைத்து விட்டார்கள். பத்திரிகைகளும் தங்கள் ஊகங்களை எழுதின. உழைக்க வேண்டும், புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இன்னும் உண்டு. மக்களுடன் எனக்குரிய இணைப்பு உறுதியாக உள்ளதுடன் அவர்களுக்காக மேலும் உழைத்து, அவர்கள் குறை தீர்க்க வேண்டும் என்ற என் ஆசை தீரவில்லை. உடல் அளவில் நான் நன்றாகவே இருக்கிறேன். இன்னும் பல ஆண்டுகள் திறமையாக பணி புரிவேன் என்று நம்புகிறேன்".
மே 1, 1958 அன்று நடந்த காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் நேரு இவ்வாறு நினைக்க காரணம் என்ன என்று விவாதித்தார்கள்.
நேரு, தான் உடல் நிலை சரியில்லாததால் ஓய்வு விரும்பவில்லை என்றும், பல விஷயங்கள் காங்கிரஸ் கட்சியிலும் நாட்டிலும் வித்தியாசமாக நடப்பதுதான் என்றார். பொது வாழ்க்கை சரியான வழியில் செல்லவில்லை என்றும் அது ஒரு உத்தியோகம் போலவும், பதவி, அதிகாரம்தான் முக்கியம் என்று நினைப்பதால் அடிப்படை சேவை ஒதுக்கப் படுகிறது என்றார். காங்கிரஸ் கட்சியில் மட்டும் நான் சொல்லவில்லை நாடு முழுவதும்தான் என்று கூறி அதனால்தான் என் வழக்கமான தினசரி வேலையிலிருந்து ஓய்வு பெற்று அமைதியாக யோசித்துப் பார்க்கவே விரும்புகிறேன் என்றார்.
ஹிந்து நாளிதளில் This Day That Age பகுதி படிப்பீர்களா? மே 1, மே 3 இதழ்களில் நான் படித்ததுதான் இது.
நேரு மேலும் சொன்னார். "சில வாரங்களுக்கு முன் நான் மாற்றம் இல்லாத வேலை செய்வதாலும், களைப்பாலும் ஒரு மாற்றம் வேண்டி அவ்வாறு சொன்னேன். எல்லோரும் எனக்கு உடல் நிலை சரியில்லை என்று நினைத்து விட்டார்கள். பத்திரிகைகளும் தங்கள் ஊகங்களை எழுதின. உழைக்க வேண்டும், புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இன்னும் உண்டு. மக்களுடன் எனக்குரிய இணைப்பு உறுதியாக உள்ளதுடன் அவர்களுக்காக மேலும் உழைத்து, அவர்கள் குறை தீர்க்க வேண்டும் என்ற என் ஆசை தீரவில்லை. உடல் அளவில் நான் நன்றாகவே இருக்கிறேன். இன்னும் பல ஆண்டுகள் திறமையாக பணி புரிவேன் என்று நம்புகிறேன்".
மே 1, 1958 அன்று நடந்த காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் நேரு இவ்வாறு நினைக்க காரணம் என்ன என்று விவாதித்தார்கள்.
நேரு, தான் உடல் நிலை சரியில்லாததால் ஓய்வு விரும்பவில்லை என்றும், பல விஷயங்கள் காங்கிரஸ் கட்சியிலும் நாட்டிலும் வித்தியாசமாக நடப்பதுதான் என்றார். பொது வாழ்க்கை சரியான வழியில் செல்லவில்லை என்றும் அது ஒரு உத்தியோகம் போலவும், பதவி, அதிகாரம்தான் முக்கியம் என்று நினைப்பதால் அடிப்படை சேவை ஒதுக்கப் படுகிறது என்றார். காங்கிரஸ் கட்சியில் மட்டும் நான் சொல்லவில்லை நாடு முழுவதும்தான் என்று கூறி அதனால்தான் என் வழக்கமான தினசரி வேலையிலிருந்து ஓய்வு பெற்று அமைதியாக யோசித்துப் பார்க்கவே விரும்புகிறேன் என்றார்.
ஹிந்து நாளிதளில் This Day That Age பகுதி படிப்பீர்களா? மே 1, மே 3 இதழ்களில் நான் படித்ததுதான் இது.
Monday, April 28, 2008
பல்லாங்குழியா, அப்படின்னா?
என் அக்கா மகன் கல்யாணம் சென்ற புதனன்று நடந்தது. அதிகாலை முகூர்த்தம் என்பதால் நிறைய டயம் கிடைத்தது. மாப்பிள்ளையும் பெண்ணும் நலுங்கு விளையாடச்சொன்னோம். முன்னெல்லாம் எங்கள் வீட்டில் இதற்காகவே ஒரு பித்தளை தேங்காய் உண்டு அவர்கள் உருட்டி விளையாட. கல்யாணமோ உட்லண்ட்ஸில். நிஜத் தேங்காய் வைத்து தொடங்கினோம்.
அடுத்து பல்லாங்குழி. வீட்டில் கூட இப்ப எல்லாம் கிடையாது. பல்லாங்குழியா, அப்படின்னா? என்று மாப்பிள்ளையும் பெண்ணும் கேட்டார்கள். வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தோம். பல்லாங்குழியும் கைவசம் இல்லை.யாருக்குத் தோன்றியதோ
அந்தாக்ஷிரி விளையாடலாம் என்றார்கள்.
மாப்பிள்ளை முதலில் தொடங்க பெண், அவர் விட்ட எழுத்தில் பாடணும் என்றதும் இருவரும் குழியாக பாடினார்கள். "இஞ்ஜி இடுப்பழகா" பாட்டை இருவரும் ஒரு டூயட் மாதிரி பாடி முடித்தார்கள்.
நாங்கள் விளையாட ஸ்க்ராபிள் வாங்கி வைத்திருந்தோம். அதையும் அவர்கள் அழகாக ஆடி தாங்கள் மகிழ்ந்ததோடு எங்களையும் மகிழ்வித்தார்கள்.
பிறகு அப்பளம் நொருக்கல். சாப்பாடு நேரம் நெருங்கியதால் சுமார் ஒரு டஜன் அப்பளம் நொருங்கியது.
என்ன, உங்கள் வீட்டு கல்யாண நலுங்குக்கு புது ஐடியா கிடைத்ததா?
அடுத்து பல்லாங்குழி. வீட்டில் கூட இப்ப எல்லாம் கிடையாது. பல்லாங்குழியா, அப்படின்னா? என்று மாப்பிள்ளையும் பெண்ணும் கேட்டார்கள். வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தோம். பல்லாங்குழியும் கைவசம் இல்லை.யாருக்குத் தோன்றியதோ
அந்தாக்ஷிரி விளையாடலாம் என்றார்கள்.
மாப்பிள்ளை முதலில் தொடங்க பெண், அவர் விட்ட எழுத்தில் பாடணும் என்றதும் இருவரும் குழியாக பாடினார்கள். "இஞ்ஜி இடுப்பழகா" பாட்டை இருவரும் ஒரு டூயட் மாதிரி பாடி முடித்தார்கள்.
நாங்கள் விளையாட ஸ்க்ராபிள் வாங்கி வைத்திருந்தோம். அதையும் அவர்கள் அழகாக ஆடி தாங்கள் மகிழ்ந்ததோடு எங்களையும் மகிழ்வித்தார்கள்.
பிறகு அப்பளம் நொருக்கல். சாப்பாடு நேரம் நெருங்கியதால் சுமார் ஒரு டஜன் அப்பளம் நொருங்கியது.
என்ன, உங்கள் வீட்டு கல்யாண நலுங்குக்கு புது ஐடியா கிடைத்ததா?
Wednesday, April 16, 2008
சென்னை டாக்டரும் நெல்லை வக்கீலும்
1. மூன்று பெண்கள். ஒவ்வொருவர்க்கும் இரண்டு பெண்கள். இவர்கள் எல்லோரும் சாப்பிட ஹோட்டலுக்கு வந்தார்கள். அங்கே ஏழு நாற்காலிகள் தான் இருந்தது. ஆனால் அவர்கள் எல்லோரும் உட்கார முடிந்தது. எப்படி?
2. சென்னையில் இருக்கும் ஒரு டாக்டருக்கு நெல்லையில் ஒரு வக்கீல் சகோதரர். ஆனால் அந்த நெல்லை வக்கீலுக்கு சென்னையில் ஒரு டாக்டர் சகோதரர் கிடையாது. ஏன்?
3. நான் இரண்டு பக்கெட்டில் தண்ணீர் வைத்திருந்தேன். ஒரு பக்கெட் தண்ணீர் 15 டிகிரி சென்டிகிரேட். மற்ற பக்கெட் தண்ணீர் 15 டிகிரி ஃபாரன் ஹீட். என் பேத்தி வந்து இரண்டு பக்கெட்டிலும் ஒரு 5 ரூபாய் நாணயத்தை ஒரே சமயத்தில் போட்டாள். எந்த பக்கெட்டில் நாணயம் முதலில் அடியைத் தொடும்.
எப்படி, ஏன், எது. சொல்லுங்கள் பார்க்கலாம்
2. சென்னையில் இருக்கும் ஒரு டாக்டருக்கு நெல்லையில் ஒரு வக்கீல் சகோதரர். ஆனால் அந்த நெல்லை வக்கீலுக்கு சென்னையில் ஒரு டாக்டர் சகோதரர் கிடையாது. ஏன்?
3. நான் இரண்டு பக்கெட்டில் தண்ணீர் வைத்திருந்தேன். ஒரு பக்கெட் தண்ணீர் 15 டிகிரி சென்டிகிரேட். மற்ற பக்கெட் தண்ணீர் 15 டிகிரி ஃபாரன் ஹீட். என் பேத்தி வந்து இரண்டு பக்கெட்டிலும் ஒரு 5 ரூபாய் நாணயத்தை ஒரே சமயத்தில் போட்டாள். எந்த பக்கெட்டில் நாணயம் முதலில் அடியைத் தொடும்.
எப்படி, ஏன், எது. சொல்லுங்கள் பார்க்கலாம்
Subscribe to:
Posts (Atom)