Wednesday, December 3, 2008

இந்த காரைப் பார்த்திருக்கிறீர்களா?







1948ல் ஆஸ்டின் A 40 என்று ஒரு அழகிய கார் வந்தது.

49 - 50ல் என் சித்தப்பா ஒரு புது கார் வாங்கினார். அவர் மத்தியானம் தூங்கும்போது என் கஸின் அதை எடுத்துக்கொண்டு வருவான். நாங்கள் இருவரும் டிரைவர் ரவீந்திரனுடன் ஹைகிரொளண்ட் சென்று ஓட்டிப் பழகினோம். ஊரில் அது போல வேறு யாரிடமும் இருந்ததாக நினைவில்லை.

"காஞ்சனா" என்று ஒரு படம் வந்ததே அதில் ஒரு பாடல் காட்சியில் இந்த பெடல் கார் வரும். A 40 காரே குட்டி போட்டது போல அத்தனை அழகு. சித்தப்பாவும் நீண்ட நாள் தன் A40 காரை வைத்திருந்து பின் ஸ்பேர் சாமான்கள் கிடைக்காததால் விற்று விட்டார். அதன் பின் நான் அந்த காரை மறந்துவிட்டேன்.

நேற்று தினமணி நாளிதழில் செய்தி- "பெடல் கார்- உலகப்போருக்குப் பிறகு ஆஸ்டின் நிறுவனம் குழந்தைகளுக்காக வடிவமைத்த பெடல் கார் 'J40' தற்போது லண்டனில் உள்ள அருங்காட்சியத்தில் விற்பனைக்கு வந்துள்லது. ரூ 1.5 லட்சம் வரை இது ஏலம் போகும் என எதிபார்க்கப்படுகிறது".

ஆர்வத்துடன் கூகிளில் ஆஸ்டின் J 40 என்று அடித்து ப்ரொளஸ் செய்தால் கிடைத்த தகவல்:

1948 ஆஸ்டின் A 40 காரை அப்படியே ஸ்கேல் மாடலில் (நீளம் 5' 3"; அகலம் 2' 3 1/2" ; உயரம் 1' 10" ) 1949 லிருந்து 1971 வரை தயாரிப்பில் இருந்ததாம். அமெரிக்கா, டென்மார்க், கனடா நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதியானதாம். ஆரம்பத்தில் இதன் விலை 27 பவுண்டு.


இன்று ஏலத்தில் என்ன விலை போகுமோ?

Friday, November 14, 2008

தினம் தினம் ஒரு தினம்

ஆசிரியர் தினம் அன்று ஒரு பதிவு எழுதினேன். இன்று குழந்தைகள் தினம். இடையில் தினம் தினம் நான் எழுத வேண்டும் என்று நினைத்தாலும் முடியவில்லை.

ஒரு தினம் நெட் வேலை செய்யவில்லை. பி.எஸ்.என்.எல் க்கு போன் செய்து, மாலையில் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஒரு வாரம் தினம் தினம் போன் செய்தால், "முந்திய வாரம் பெய்த இடி மழையால் பல வீடுகளில் மோடம், டிவி எல்லாம் பழுதாகி விட்டது. உங்கள் மோடத்தை செக் பண்ணுங்கள்" என்றார்கள்.

மறுதினம் ரூ 1600 கொடுத்து புது மோடம் வாங்கினேன். அந்த தினம் தான் சீர்காழி அவர்கள் பாடியது போல என் சுபதினம் என்று எண்ணினேன்.

ஆனால் தினம் ஏதாவது ஒரு முக்கியமான வேலையாக வெளியே செல்ல வேண்டி வந்துவிடும். தினம் லேட்டாக வந்து, மறுதினம் எழுதலாம் என்று தூங்கிவிடுவேன்.

இந்த வாரம் நாட்டின் முதல் கல்வி அமைச்சர், மெளலானா அபுல் கலாம் ஆஸாத் அவர்கள் ஞாபகம் வந்து கல்வி தினம் என்றார்கள். நவம்பர் 14 ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினம். பல ஆண்டுகளாக குழந்தைகள் தினம் ஆக கொண்டாடுகிறோம். இன்று உலக டயபட்டீஸ் தினம் கூட.
நவம்பர் 15 அன்று என்ன தினம்? ஆண்டின் 320 வது தினம்தான். எண்ணிப்பார்த்து 319 வது தினம்தானே என்று சொல்லிவிடாதீர்கள். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 29 தினங்கள்.

Thursday, September 4, 2008

செப்டம்பர் 5 - ஆசிரியர் தினம்

ஹாப்பி நியூ இயர், ஹாப்பி தீபாவளி, ஹாப்பி பொங்கல் என்று வாழ்த்துவது போல ஹாப்பி டீச்சர்ஸ் டே என்று சொல்ல முடிகிறதா?மாணவ மாணவிகளும் ஹாப்பியாக இல்லை, டீச்சர்களும் ஹாப்பியாக இல்லை. மாணவர்களுக்கு டைட் சிலபஸ், ஹோம் ஒர்க், விளையாடக்கூட நேரமில்லாமல் படிப்பு, கம்ப்யூட்டர், கிடைக்கும் நேரத்தில் டிவி.
டீச்சர்கள், பைக்/கார் வாங்கியதில் ட்யூ கட்டவும், வீடு வாங்க/கட்ட பெற்ற லோனுக்கு ட்யூ கட்டவும், என்ன சம்பளம் வந்தாலும் ப்ரெஷர்.மேலும், டிவி/சினிமா பார்த்து ஒழுக்கம் கெட்டு வரும் மாணவர்கள், மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்கள் பற்றி செய்திகள் படிக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் 1962-ல் நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்றதும் அவர் பிறந்தநாளான 5/9ஐ கொண்டாட அனுமதி கேட்டார்களாம். அதற்கு அவர், என் பிறந்தநாள் என்பதைவிட ஆசிரியர் தினம் என்று சொல்லுங்கள் என்றாராம். தான் பார்த்து வந்த தொழில் மீது அவர் காட்டிய மரியாதையால், ஆசிரியர்களுக்கு அவர் தந்த கெளரவம் அது.
அரசு இன்று நல்லாசிரியர் விருது வழங்கி ஆசிரியர்களை பாராட்டினாலும், ஒரு பெண் கல்வி அதிகாரி பள்ளி வந்து சம்பந்தமில்லாத கேள்விகள் மாணவிகளிடம் கேட்டு சரியான பதில் சொல்லவில்லையென்று இளம் பெண் ஆசிரியையை மாணவிகள் முன்னிலையில் கன்னா பின்னா என்று திட்டியதால் அந்த ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார் என்பது சமீபத்தில் வந்த செய்தி.
அரசு இலவச டிவி, இலவச சைக்கிள் வழங்கி விளம்பரம் தேடுவதை விட்டு, வியாபாரமாகி விட்ட கல்வியை முறைப்படுத்தி வருங்கால இளைஞர்களை நாட்டின் சிறந்த குடிமகன்களாக-ஸாரி சிறந்த பிரஜைகளாக- உருவாக்க வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று அசெம்பிளியில் (சட்டசபையில் இல்லீங்க, பள்ளி தொடங்குமுன் ப்ரேயர் எல்லாம் சொல்வார்களே அப்போ) மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி மீண்டும் ஒரு நல்லுறவை ஏற்படுத்த வேண்டும்

Friday, August 29, 2008

நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது...

நேற்று மாலை நான் எங்கள் வீட்டு வரவேற்பு அறையில் மேலே, கீழே, ஷெல்ஃபில், சோபாவுக்கு அடியில் எல்லாம் தேடிப் பார்த்தேன்.
தாமரை: என்ன தேடுகிறீகள், ரூபாய் தவற விட்டீர்களா?
நான்: எங்காவது கேமராக்கள் ஒளித்து வைக்கப் பட்டிருக்கிறதா என்று பார்க்கிறேன்.
தாமரை: கேமராவா? என்ன சொல்கிறீர்கள்?
நான்: டிவியில் அந்த ஆளுக்கு நான் என்ன செய்கிறேன் என்று எப்படி தெரியும்? அடிக்கடி,
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கே டிவி
என்கிறானே.

Sunday, August 24, 2008

கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.

ஆங்கில எழுத்து A கொண்ட எண்ணை கண்டுபிடிக்க நீங்கள் நிறைய எண்ணிப் பார்க்க வேண்டும்.
விடை, நம்ப முடியவில்லையா? one thousand தான்.

2. சைபரை விட பெரிய எண் எழுதிக் கொள்ளுங்கள். மூன்றால் பெருக்குங்கள். ஒன்றைக் கூட்டுங்கள். அதை மூன்றால் பெருக்குங்கள். இப்போது நீங்கள் நினைத்த எண்ணைக் கூட்டுங்கள். விடை எப்போதும் மூன்றில் முடியும். அந்த மூன்றை அடித்துவிடுங்கள். நீங்கள் நினைத்த எண்ணே மிஞ்சும்.

3. ஏதாவது மூன்று எண்களை அதன் வரிசையில் எழுதிக் கொள்ளுங்கள். அதை ரிவெர்ஸ் ஆர்டரில் எழுதுங்கள். பெரிய எண்ணிலிருந்து சிறியதைக் கழியுங்கள். விடை எப்போதும் 198 தான் வரும். உ-ம்:- 123 321. முயன்று பாருங்கள்.

4. ஒரு பெருக்கல் கணக்கு:

1 1 1 1 1 1 1 1 1
x 1 1 1 1 1 1 1 1 1



செய்து பாருங்களேன். நல்ல பொழுது போகும்

Saturday, August 16, 2008

நான் 1941 மாடல். நீங்க?

டாக்டர் : ஒரு சின்ன வேலைக்கா இவ்வளவு சார்ஜ்?

கார் மெக்கானிக் : நீங்கள் ஒரே மாடலில்தான் வேலை செய்கிறீர்கள். ADAM மாடலுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் நான் அப் டு டேட் ஆக இருக்க எவ்வளவு படிக்கணும். தினம் ஒரு புது கார் வந்துகொண்டிருக்கிறது. அதான்.

சில நாட்கள் கழித்து.

மெக்கானிக்
: என்ன டாக்டர், ஹார்ட் ஆபரேஷனுக்கு இவ்வளவு ஃபீஸா? நான் கார் இன்ஜினைப் பிரித்து பிஸ்டன், வால்வ் எல்லாம் மாற்றினாலும் இவ்வளவு ஆகாதே.

டாக்டர் : நான் ஹார்ட் வேலை செய்து கொண்டிருக்கும் போதே செய்கிறேன். நீ இன்ஜின் ஒடிக்கொண்டிருக்கையில் பிஸ்டன் மாற்றுவாயா?

Tuesday, August 5, 2008

"ப்ரிட்டிஷ் முறையில் அமைந்துள்ள சட்டத்தையும், நடைமுறைகளையும்.....

...... இந்திய நிலைமைக்கும், வழிமுறைகளுக்கும் ஏற்றார்ப்போல மாற்றி அமைக்க வேண்டும். சட்டம் சாதாரண மனிதன் கூட படித்து புரிந்து கொள்ளுமாறு இருக்க வேண்டும்"

என்று 04/08/1958 அன்று, ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டில் ஒரு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தபோது அவர் மேலும் சொன்னார்,

"நாட்டின் உடனடி தேவை, தாமதமில்லாமல் தீர்ப்பு வழங்குதலும், கோர்ட் செலவு அதிகமில்லாமலும் இருக்க வேண்டும். நாட்டின் ஒரு நிரந்தர உறுப்பாக விளங்கும் சட்டமுறைக்கும், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கும் எல்லா ஹைகோர்ட் நீதிபதிகளுக்கும் என் பாராட்டுக்கள்."
நன்றி- தி ஹிண்டு, 04/08/08

ஐம்பது ஆண்டுகள் ஆகியும் எந்த மாறுதலும் ஆனதாக தெரியவில்லையே. நாட்டின் ஒரு முதல்வருக்கெ அரசு நியமித்த சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள், உரிய காலத்தில் தகவல்
தராததால் சங்கடம்.