Wednesday, April 16, 2008

சென்னை டாக்டரும் நெல்லை வக்கீலும்

1. மூன்று பெண்கள். ஒவ்வொருவர்க்கும் இரண்டு பெண்கள். இவர்கள் எல்லோரும் சாப்பிட ஹோட்டலுக்கு வந்தார்கள். அங்கே ஏழு நாற்காலிகள் தான் இருந்தது. ஆனால் அவர்கள் எல்லோரும் உட்கார முடிந்தது. எப்படி?

2. சென்னையில் இருக்கும் ஒரு டாக்டருக்கு நெல்லையில் ஒரு வக்கீல் சகோதரர். ஆனால் அந்த நெல்லை வக்கீலுக்கு சென்னையில் ஒரு டாக்டர் சகோதரர் கிடையாது. ஏன்?

3. நான் இரண்டு பக்கெட்டில் தண்ணீர் வைத்திருந்தேன். ஒரு பக்கெட் தண்ணீர் 15 டிகிரி சென்டிகிரேட். மற்ற பக்கெட் தண்ணீர் 15 டிகிரி ஃபாரன் ஹீட். என் பேத்தி வந்து இரண்டு பக்கெட்டிலும் ஒரு 5 ரூபாய் நாணயத்தை ஒரே சமயத்தில் போட்டாள். எந்த பக்கெட்டில் நாணயம் முதலில் அடியைத் தொடும்.

எப்படி, ஏன், எது. சொல்லுங்கள் பார்க்கலாம்