அன்புள்ள இந்தியர்களே,
எதோ எல்லா ஊர்களிலும் அங்கங்கே நான் நின்று கொண்டிருப்பதால்
நீங்கள் என்னை மறக்கவில்லை என்று அறிய மகிழ்ச்சி.
ஜனவரி மாதம் குளித்தது. மேலெல்லாம் கசகசன்னு இருக்கு.
அப்பாடா, இன்னிக்குஎன்னை குளிப்பாட்டிட்டாங்க.
ஆளாளுக்கு ஒரு சிலைஉயர மாலை கொண்டு வந்து
என் முகத்தைக் கூட பார்க்காமல் மீடியா கேமராவைப்
பார்த்தபடி போட்டுட்டு போவாங்க. அது வாடி உதிர்ந்து
நாராகும் வரை என் தோள் வலி தாங்கமுடியாது.
ஆமா, அயோத்தி தீர்ப்பு வந்துட்டதாமே. ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே.
ராமனும் பாபரும் ஒண்ணுதான்னு சொல்லிட்டாங்க.
அடுத்த வருஷம் பார்க்கலாம்.
ஹே ராம்
என்றும் உங்கள்
