Tuesday, August 5, 2008

"ப்ரிட்டிஷ் முறையில் அமைந்துள்ள சட்டத்தையும், நடைமுறைகளையும்.....

...... இந்திய நிலைமைக்கும், வழிமுறைகளுக்கும் ஏற்றார்ப்போல மாற்றி அமைக்க வேண்டும். சட்டம் சாதாரண மனிதன் கூட படித்து புரிந்து கொள்ளுமாறு இருக்க வேண்டும்"

என்று 04/08/1958 அன்று, ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டில் ஒரு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தபோது அவர் மேலும் சொன்னார்,

"நாட்டின் உடனடி தேவை, தாமதமில்லாமல் தீர்ப்பு வழங்குதலும், கோர்ட் செலவு அதிகமில்லாமலும் இருக்க வேண்டும். நாட்டின் ஒரு நிரந்தர உறுப்பாக விளங்கும் சட்டமுறைக்கும், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கும் எல்லா ஹைகோர்ட் நீதிபதிகளுக்கும் என் பாராட்டுக்கள்."
நன்றி- தி ஹிண்டு, 04/08/08

ஐம்பது ஆண்டுகள் ஆகியும் எந்த மாறுதலும் ஆனதாக தெரியவில்லையே. நாட்டின் ஒரு முதல்வருக்கெ அரசு நியமித்த சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள், உரிய காலத்தில் தகவல்
தராததால் சங்கடம்.

பொல்லாத் தனத்தை என்ன சொல்வேன் கண்ணா

இன்று கே டிவி பார்த்தீர்களா. பழைய படங்களை மிஸ் பண்ணாதீங்க. நல்ல பாடல்கள் கேட்கலாம். ஏவிஎம்மின் பெண் படம். அதில் எல்லா பாடல்களுமே நன்றாக இருக்கும். சுதர்சனம் இசை.

இந்த பாட்டை கேளுங்களேன் ஸாரி படியுங்கள்.

பொல்லாத் தனத்தை என்ன சொல்வேன் கண்னா
இனி போதும் மலர் கண்ணனே

புல்லாங்குழலில் உள்ளம் எல்லாம் மயக்கியே
புல்லாங்குழலில் உள்ளம் எல்லாம் மயக்கி
கண்ணைப் பொத்தி மெல்ல அழ வைக்காதடா
உனது பொல்லாத் தனத்தை......

பத்து ஜனங்கள் நடுவிலே உன்னை பாலனென்று தூக்கி எடுத்தால்
கட்டி முத்தமிட்டு வம்புகள் செய்வாய்
வெட்கக் கேட்டினை எவரிடம் சொல்வேன்

உன்னை காணாதிருந்தால் கணம் ஓர் யுகமாகுதே
காணாதிருந்தால் கணம் ஓர் யுகமாகுதே


கட்டிப் போடுவேன், எந்தன் அருகில் விரைந்து வருவையே
உன்னை கட்டி போடுவேன் எந்தன் அருகில் விரைந்து வருவையே

உனது பொல்லாத் தனத்தை என்ன சொல்வேன் கண்ணா
இனிபோதும் மலர் கண்ணனே.

சிட்டை ஸ்வரங்களுடன் டி.எஸ்.பகவதி அழகாக பாடியிருப்பார்.
அஞ்சலி தேவி பாட ஜெமினி கணேசன் வீணை வாசிப்பது போல காட்சி.

பாடல்களை ரீமிக்ஸ் என்று கெடுப்பதை விட அப்படியே இன்றைய பாடகி/பாடகர்களை பாட வைத்து காட்சிகள் எடுத்தால் எத்தனை நல்ல பாட்டுக்கள் கேட்கலாம்.