Saturday, July 14, 2007

"உங்கள் வாழ்க்கையை எழுதுவது பற்றி"

"உங்கள் வாழ்க்கையை எழுதுவது பற்றி" என்ற புத்தகம், சமீபத்தில் படித்தேன். அதில் சுயசரிதை மாதிரி இல்லாமல் -பள்ளிக்கூடம்,சொந்தம், பார்த்தவர்கள், பரந்த உலகம், ஊர்கள், நினைவுகள், கல்வி, புத்தகங்கள் என்று அத்தியாயங்களாக எழுதி இருந்தார் ஆசிரியர். உடனே எனக்கு ப்ளாக் செய்ய ஐடியா கிடைத்தது. ஹைஸ்கூல் படிக்கும்போது ஒருநாள் தமிழ் ஆசிரியரை சித்திரமாக வரைந்தேன். அருகில் இருந்த மாணவர்கள் சத்தமாக சிரிக்கவும் ஆசிரியர் படத்தை வாங்கி பார்த்துவிட்டு என்னை 'வெடிவால்' என்று திட்டினாலும் நன்றாக வரைந்திருக்கிறாய் என்று பாராட்டினார்.டிவி விளம்பரத்தில் "நாங்கள் படிப்பது நெ1 பேப்பர்.அப்ப நீங்க" என்று கேட்டதும் நான் சொல்கிறேன் - நான் படிப்பது 'சிகாகோ ட்ரிப்யூன்', ஆம் நான் இப்போது சிகாகோவில் மகள் வீட்டில் பேத்தி பேரனுடன் விளையடிக்கொண்டிருக்கிறேன்.அமெரிக்கா என்ற்தும் கெடிலாக்,ப்யூக்,ஓல்ட்ஸ்மோபைல்,ஷெவர்லெ,க்ரைஸ்லர்,டாட்ஜ்,ப்ளிமத் என்றுகார்கள் பார்க்கலாம் என்று வந்தேன். இங்கோ டொயோடா, ஹோண்டா, நிஸான், ஹ்ன்டே என ஜப்பான் கார்கள் இங்கேயே தயாரிக்கப்ப்ட்டு அதிகம் விற்பனையகிறது. "ரீதிங்க் அமெரிக்கன்" என அமெரிக்கன் கார் விளம்பரத்தில் காண்கிறேன்.
முன்னால் ஒரு புத்தகத்தில் படித்தேன். அமெரிக்கவுடன் இன்னொருநாடு ராணுவம் ப்ற்றி பேசியதில் இருநாடுகளும் 2 ஜெனரல்களை எக்சேஞ்ச் செய்ய முடிவனதாம். அதற்கு மற்ற நாடு - 'எங்களுக்கு ஜெனரல் மோட்டார்ஸ் & ஜெனரல் எலெக்ட்ரிக் வேண்டும் -.என்ற்தாம். அன்று விளையாட்டாக எழுதப்பட்டாலும் என்ன ஆகும் என்று தெரியவில்லை. லாங் லிவ் அமெரிக்கா.

Friday, July 13, 2007

மலரும் நினைவுகள் வெடிக்கும்

வணக்கம் ப்ளாக்கர்ஸ். நான் சகாதேவன். இன்றுதான் வருகிறேன்.. நான் பேபிக்ளாஸிலிருந்து ஐந்தாம் க்ளாஸ் வரை கான்வென்டில் படித்தேன். ஒரு நாள் நானும் க்ளாஸ்மேட் வாட்ஸன்னும் அருகிலுள்ள பார்க்கில் கேந்திப்பூ நிறையப் பறித்து த் தோட்டக்காரனிடம் பிடிபட்டோம். எங்களுக்கு கிடைத்த தண்டனை லன்ச் டைம் முடியும்வரை பறித்த பூக்களை தலையில் வைத்துக்கொண்டு பள்ளி ஆபீஸ் வாசலில் நின்றோம். எங்களைப் பார்த்துசென்ற அக்கா எல்லோரும் சிரித்தார்கள். மதர் அலெக்ஸ் நீண்ட நாட்கள் இதை மறக்கவே இல்லை. அவர்களுக்கு 90 வயது தாண்டியிருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் அவர்களை சென்னையில் சந்தித்த போது அவர்களே இந்த சம்பவத்தை சொல்லி சிரித்தார்கள்.எப்படி ஆரம்பிக்க என்று நினைத்த போது இதுதான் எனக்கு தோன்றியது. நானானி தன் ப்ளாக்கிங்ல் திருநெல்வேலி,கோவில்பட்டி,கடம்பூர்,திருவில்லிப்புத்தூர்,சாத்தூர்,சங்கரன்கோவில் இங்கெல்லாமென்ன கிடைக்கும் என சொன்னார்.நான் கேட்கிறேன். மணப்பாறை, மாயவரம், ஆத்தூர், பொள்ளாச்சி, விருதுநகர் எல்லாம் எதற்கு பேர் பெற்றவை. பாட்டு நினைவு வருதா. பாட்டில் கடைசியாக வரும் அறிவுரை என்ன. நானானீயா பார்க்கலாம்.
சதாதேவன்.