Friday, July 20, 2007

என் கேள்விக்கென்ன பதில்?

இன்று ஒரு க்விஸ் . நீங்கள் ரெடியா?பத்து யு.ஸ்.ஜனாதிபதிகள் ப்ற்றிய விவரம் தருவென். யார் என்று பேர் எழுதுங்கள்.

1. நோபல் பரிசு பெற்றவர்.
2. முதல் ரோமன் கத்தோலிக்
3. முதல் அமெரிக்க குடிமகன் ( ப்ரிட்டிஷ் ச்ப்ஜெக்ட் அல்லாதவர்)
4 .நான்கு முறை தொடர்ந்து எலெக்ட் ஆனவர்.
5. வெள்ளை மாளிகையில் முதலில் குடி புகுந்தவர்.
6 .விமானத்தில் பயணிக்கும்போது பதவிப் பிரமாணம் எடுத்தவர்.
7. ஒருமனதாக தேர்வானவர்களில் முதல்வர்
8. இவர் மட்டுமெ ராஜினாமா செய்தவர்.
9 .முன்னாள் ஹாலிவுட் நடிகர்
10. ஆர்மியில் 5ஸ்டார் ஆக இருந்தவர்.

கண்டுபிடியுங்கள்.

Monday, July 16, 2007

தொடரும் நினைவுகள்.

மணப்பாறை..... பாட்டில் வரும் அறிவுரை--"சேர்த்த பணத்தை சிக்கனமா செலவு பண்ண அம்மா கையில கொடுத்துப்போடு செல்லக்கண்ணு, அவங்க ஆற நூறு ஆக்குவங்க செல்லக்கண்ணு".என் அம்மாவின் சிக்கனம் பற்றி ஒரு வரி.

எல்லோருக்கும் புது சட்டை எடுக்கையில் அண்ணனுக்கு சில்க் சட்டை எடுப்பாள். எனக்கில்லையா என்று கேட்டால்,'அவனுக்கு சின்னதானதும் அது உனக்குத்தானே' என்பாள்.அப்படி எனக்கு எத்தனை சட்டை கிடைத்தது தெரியுமா.ருசியாக சமைப்பதிலும் சிறந்தவள்.குண்டான் நிறைய தயிர் சாதம் பிசைந்து பழங்கறி,சுண்டக்கீரையுடன் நிலவிரவில் மொட்டைமாடியில் எங்கள் மத்தியில் அமர்ந்து எங்கள் கைகளிலேயே தருவாள்.அமுதம்.

ஆறு சதுர அடிக்கு புள்ளி வைத்து , புள்ளி விலகாமல் கோடு தவறாமல் அம்மா பொங்கல் .கோலமிடுவதை நாங்கள் உட்கார்ந்து ரசிப்போம். அன்று பத்திரிகைகள் கோலப்போட்டி நடத்தியிருந்தால் முதல் பரிசு அவளுக்கே. நவராத்திரி கொலுவிற்கு பொம்மை வாங்குவதிலும் நேர்த்தியாக 9 படிகளில் அடுக்குவதிலும் மிக்க ஈடுபாடு உடையவள்.

என் அம்மாவுக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று-
"சுந்தரி சொளந்தரி நிரந்தரியே,
சூலியெனும் உமையே-குமரியே".

படத்தில் ஹீரோயின் தோழியுடன் பாட ஹீரோ உடன் பாடுவார். என் அக்கா இருவருடன் என்னையும் பாடச்சொல்லி கேட்டு ரசிப்பாள்.

புதிய ஜில்லா கலெக்டர் பதவி ஏற்றதும் தன் உதவியாள்ரிடம் ஊரில் யாரை முதலில் சந்திக்க வேண்டும் என்று கேட்பாராம். அதற்கு அவர் என் அப்பா பேரைச்சொல்லி அவரே உங்களைப்பார்க்க வருவார் பாருங்கள் என்பாராம். கலெக்டர் என்றால் ஜில்லாவின் முதல் மனிதர் என்று அவரை வரவேற்பார் என் அப்பா. குடும்பம், தொழில், பொது வாழ்க்கை என்று எல்லா வகையிலும் சிறந்து வாழ்ந்தார்.

இன்று ஒரு கேள்வி. -சகோதரிகள் லலிதா,ப்த்மினி, ராகினி மூவரும் சேர்ந்து நடித்த படம் எது.? அடடா ஒரு க்ளூ தந்துவிட்டேன் போலிருக்கிறதே.