Sunday, April 3, 2011

சத்யராஜின் அடுத்த வேஷம் என்ன?

மும்தாஜ் :- ஜெஹாம்பனா .பாண்டிய மன்னனைத் தொடர்ந்து பல்லவனும் சேரனும் தங்கள் நாட்டில் தொடங்கி விட்டார்கள். நாம் என்ன அவர்களுக்கு சளைத்தவர்களா? நீங்களும் உடனே அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

ஷாஜஹான்:- என்ன பேகம் சொல்கிறாய். எந்த நாட்டின் மீது படை எடுக்க வேண்டும்? சொல்.

மும்தாஜ்:- படை இல்லை ஜெஹாம்பனா. உடை. எனக்கும் தமிழ்நாட்டுப் பெண்கள் போல பட்டு சேலை உடுத்த வேண்டும் சுடிதார் அணிய வேண்டும் என்று ஆசை. ஔரங்கசீப்க்கும் விதம் விதமான பேண்ட் ஜீன்ஸ் எல்லாம் வேண்டுமாம்.

ஷாஜஹான்:- சரி நாம் எந்த கடைக்கு போகணும்?

மும்தாஜ்:- உங்களுக்கு ராஜாங்க வேலையே நாள் முழுதும் சரியாகி விடுகிறது. பேப்பர் படிப்பதில்லை. டிவி பார்ப்பதில்லை. உங்களுக்கு ஜி.கே ஸீரோதான்.

ஷாஜஹான்:- மந்திரியாரே ராணி என்ன சொல்கிறார்? உங்களுக்கு புரிகிறதா?

மும்தாஜ்:- நானே சொல்கிறேன் ஜெஹாம்பனா. நீங்கள் எனக்கு தாஜ் மஹால் ஒன்றும் கட்ட வேண்டாம். நம் நாட்டு மக்களுக்கு அழகான ஜவுளிகளின் ஆலயம் கட்டுங்கள். புரியலையா?போத்தீஸ்.

ஷாஜஹான்:- ஓ அதுவா? நானும் கேள்விப்பட்டேன். மந்திரியாரே உடனே தூதர்களை தமிழ்நாடு அனுப்பி போத்தீஸை அழைத்து வரச் சொல்லுங்கள்.

புனேயில் சிவாஜி/ ஹைதராபாத் நிஜாம்/ மைசூர் மகராஜா அரண்மனைகளில் என்ன நடக்கும் என்று சொல்லுங்களேன்.