Friday, August 3, 2007

"திருவாரூர் சந்நிதியில் ......ஞானியானார்"

இன்று ராகுகாலம் எத்தனை மணிக்கு என்று அறிய காலண்டர் தேடிய போது நண்பர் சொன்னார்.
"திருவாரூர் சந்நிதியில் வெற்றிலை புஷ்பம்
விற்ற செட்டியார் ஞானியானார்".
ராகுகாலம் காலை 7.30 முதல் மாலை 6.00 வரைதான், திங்கள் முதல் ஞாயிறு வரை பார்த்துக்கொள்ளலாம் என்றார்.
ஆங்கிலத்தில் " Mother Saw Father....." என்றும் உண்டு.

அது போல் ஆங்கிலத்தில் நான் புதிதாகப் படித்தது.

"My Very Excellent Mother Just Sent Us Nine Pizzas".

இது எதைக்குறிக்கிறது? சொல்லுங்கள் பார்க்கலாம்.

கேட்டதில் பிடித்தது.

சிவாஜி படம் எடுத்த கதை பற்றி டிவியில் சொன்னார்கள். பாடல் எழுதியவர், ரகுமான் வேகமான மெட்டு இசைத்த போது தான் கட கட கட என்றும் மொறு மொறு மொறு என்றும் வரி சொன்னதாகச் சொன்னார். எம்.எஸ்.வியும் கவியரசும் இப்படி பாட்டு உருவாக்கியதை பாலச்சந்தர் எப்படி படமாக்கினார் பாருங்கள்.
இனிமையான சந்தத்தை அருமை என்று கவியும், கடினமான சந்தத்திற்கு வரி சொன்னதும் சபாஷ் என்று இசையும் பாராட்டிக் கொண்டதைக் கேட்ட உடனிருந்த பாலசந்தர் ஸ்ரீதேவி சந்தம் சொல்ல கமல் வரி சொல்வதாக ஒரு காட்சி அமைத்தார் வருமையின் நிறம் சிகப்பு படத்தில் .
தந்தன தந்தன தான தந்தன தந்தானா என்று எம்.எஸ்.வி சந்தம் சொல்ல கவியரசு சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி என்று பல்லவி சொல்கிறார். ஜானகியும் எஸ்.பி.பியும் பாடினார்கள். மீண்டும் படம் பாருங்கள்.

Wednesday, August 1, 2007

"யு ஆர் ரெகுலர்லி இர்ரெகுலர்"

எங்கள் கல்லூரி ப்ரின்ஸிபல் ரெவ்.பாதர் சூசை மிகவும் கண்டிப்பானவர். எல்லோருக்கும் அவரைப்பார்த்தது முதல், மரியாதை கலந்த பயம் உண்டு. காலை க்ளாஸ்க்கு லேட் ஆனால் அவரிடம் சீட்டு வாங்கினால்தான் ப்ரொபசர் அனுமதிப்பார். ஒரு நாள் சீட்டு வாங்க வேண்டி வந்தது. பைன் கட்டச் சொன்னால் மாலை டவுண்பஸ்க்கு பணம் இருக்காதே என்று பயந்தே சென்றேன். முதல் முறையானதால் எனக்கு சீட்டு தந்து விட்டார்.

ரிபீட் ஆனால் "யு ஆர் ரெகுலர்லி இர்ரெகுலர்" என்று சொல்லி பைன் போடுவார்.

பரீட்சை நடக்கும் போது எனக்கு மதிய உணவு வீட்டிலிருந்து வரவில்லை. 2.00 ம்ணி வரை பார்த்த நான் பரீட்சைக்கு நேரமாச்சு என்று எழுதச் சென்றுவிட்டேன். லேட்டாக கேரியருடன் வந்த அவன் ஆபீஸ் ரூமில் கேட்டிருக்கிறான். ப்ரின்ஸியிடம் யார் சொல்வது என்று அவர்கள் யோசிக்க அப்போது தன் அறைக்கு வந்த ப்ரின்ஸி புதிய முகம் பார்த்து யார் நீ என்றார்.விபரம் அறிந்து அவரே ஹாலுக்கு வந்து என்னிடம் நீ சாப்பிட்டாயா? என்று கேட்டார். உனக்கு 10 நிமிடம் தருகிறேன், கீழே போய் சாப்பிட்டு வ்ந்து எழுது என்றார். கண்டிப்பான பாதரிடம் அன்று நான் கண்ட தாயுள்ளம், மறக்க முடியுமா?

இன்று ஒரு கேள்வி கேட்கலாமா?
இந்த போஸ்டில் எத்தனை சினிமா பெயர்கள் உள்ளன?
ஒரு 11 ஆவது இருக்கும்.

Tuesday, July 31, 2007

புகைப்படப் போட்டிக்காக


35 வருடத்திற்கு முன் யஷிகா 120 ரோல் காமிராவில் எடுத்தது.

தண்ணீர் தண்ணீர் - இங்கேயுமா?

தாமிரபரணியில்தான் ஆலைக்கழிவுகள், சாக்கடை எல்லாம் வந்து சேர்கின்றன என்றாலும் கொதிக்கவைத்து வடிகட்டி குடிக்கிறோம். ஷிகாகோ ட்ரிப்யூன் பத்திரிகையில் ஒரு செய்தி: இன்டியானா மாநிலத்தில் BPயின் வொய்ட்டிங் ரிபைனரி (நம்மூர் பாரத் பெட்ரோலியம் இல்லீங்க-முன்னாள் ப்ரிட்டிஷ் பெட்ரோலியம், இப்போது BP மட்டும்தான் - கே.கே நகர் மாதிரி)யிலிருந்து கழிவுகள்,மெர்க்குரி,அமோனியா போன்ற கெமிக்கல்ஸ் மிஷிகன் ஏரியில் விடப்படுகிறதாம்.மிஷிகன் ஏரியிலிருந்துதான் இல்லிநாய் (ஸ் சைலன்ட், எந்த ப்ரீடும் அல்ல) இன்டியானா, மிஷிகன் மாநிலங்கள் மூன்றும் குடிநீர் சப்ளை பெறுகின்றனவாம்.எத்தனையோ எதிப்புகள் செய்தியாகவும், லெட்டர் டு எடிட்டரிலும் வந்தாலும் BP பேப்பரில் தன் முழுபக்க விளம்பரத்தில், ஆயிரக்காணக்கான தங்கள் தொழிலாளர்கள் மிஷிகன் லேக் பகுதியில்தான் வசிக்கிறார்கள்.நாங்களும் வாட்டர் ட்ரீட்மென்ட்க்கு எல்லா முயற்சியும் செய்கிறோம் என்று கூறுகிறது. என்ன ஆகுமோ.

நான் படித்த ஒரு செய்தி. அமெரிக்காவில் உள்ள தமிழர்களுக்காக கயாவிலிருந்து (ஆங்கிலத்தில் CA என்றால் தமிழில் கயா தானே) வெளியாகும் "தென்றல்" மாத இதழில் சன்தில் க்ரூப் நிறுவன இயக்குனர் எம்.ஆர்.ரங்கஸ்வாமி ஒரு பேட்டி. அதில் அவருடைய கருத்துக்கள்:

1.சுற்றுச்சூழல் நமது மிகப்பெரிய பொறுப்பு. இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நம் குழந்தைகளுக்கு நல்ல வழிடம் அமைய சூழலில் கவனம் செலுத்தவெண்டும்.

2.தமிழ்நாட்டின் மிகப்பெரிய பலம் அதன் பொறியியல் பட்டதாரிகள்தான். பெங்களூரில் திறமையிருந்தாலும் விலைவாசி உயர்வால் அங்கு ஆள் கிடைப்பதில்லை. தொழில்நுட்பத் துறையில் முன்னேற வருகின்ற நிருவனங்களைத் திறந்த மனத்தோடு வரவேற்க வேண்டும்.

சென்னை சட்டக்கல்லூயில் பயின்ற எம்.ஆர்க்கு அதில் ஆர்வம் இல்லை என்று அறிந்த அவர் அண்ணா தன்னோடு யுஎஸ்க்கு வந்து எம்.பி.ஏ படிக்க அழைத்ததுதான் ஒரு மாபெரும் திருப்பம். படித்து முடித்ததும் சின்ன கம்பெனியில் சேர்ந்து முன்னேறி இன்று கணிணித்துறையில் பிரபலமான 20 பேர்களில் ஒருவர் என்று பத்திரிகைகள் எழுதும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.