Wednesday, April 22, 2009

அரசியலில் மட்டும் வாரிசுகள்,

பதவி, புகழ் எல்லாம் பெறுகிறார்கள். இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, சோனியா காந்தி - இப்போது ராகுலும் தேர்தலில் நிற்கிறாராம்.

இங்கே ஸ்டாலின், கனிமொழி, அழகிரி என்று அவர்கள் ராஜ்யம்தான். கலை உலகில் மட்டும் ஏன் வாரிசுகள் திறமை இருந்தும் புகழ் பெற முடிவதில்லை?

எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான்" என்று பாடி சிகரம் தொட்ட டி.எம்.செள்ந்த்ர்ராஜனின் மகன் (51) 25 வருடங்களாக இரு தலைமுறை இசை அமைப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார் அவர் மகன் டி.எம்.எஸ்.செல்வகுமார் என்று (9/4/09 குங்குமம் இதழில் ஆர்.எம்.திரவியராஜ் எழுதிய செய்தியை படித்ததும் ரொம்ப சங்கடமாக இருக்கிறது.

தூக்குதூக்கி படத்தில் சிவாஜிக்கு பின்னணி பாட சி.எஸ் ஜெயராமன் தான் சரி என படக்குழுவில் எல்லோரும் சொல்ல, இசை அமைப்பாளர் ஜி.ராமனாதன் சிவாஜியிடம், 'மதுரை பையன் ஒருவன் இருக்கிறான்.நம் படத்தின் ஒரு பாடலை பாடச் சொல்கிறேன். கேட்டுப் பாருங்களேன்' என்று சொன்னதால் பாடி பிரபலமானவர் செளந்தர்ராஜன். டி.எம்.எஸ். செல்வகுமாரை அப்படி தூக்கிவிட யாரும் இல்லாமல் போனது ஏன்?

இப்ப எல்லாம் பின்னணி பாடகர்கள் ரொம்ப பிஸி. அவர்களுக்கு நேரம் கிடைக்கும் போதுதான் ரிகார்டிங்க்கு வருவார்களாம். ரிகர்சல் பாடி பின் ரிகார்ட் செய்ய முடியாததால் ஒரு ஜூனியர் பாடகர் ட்ராக் பாட, டேப் செய்து வைத்திருப்பார்களாம். அதைக் கேட்டு முன்னணி பின்னணிப் பாடகர் பாடுவாராம். "வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா" - காதல் கோட்டை படத்துக்காக இதை ட்ராக்கில் கேட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ரொம்ப நன்றாக பாடியிருக்கிறாரே, இவரே இந்த பாட்டை பாடட்டும் என்று சொன்னதால் அந்த ஜூனியருக்கு சான்ஸ் கிடைத்ததாக படித்த ஞாபகம்.

"துள்ளாத மனமும் துள்ளூம்" என்று தூர்தஷ்னிலும், "சொக்குதே மனம்" என்று ஜெயா டிவியிலும் சினிமா பாடல் நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன அதில் கூட டி.எம்.எஸ் பாடிய பாடல்களை பாட அவர் பிள்ளைகளை அழைப்பதில்லை. அப்பா பாடிய எம்.ஜி.ஆர் பாட்டுக்களையும் சிவாஜி பாட்டுக்களையும் டி.எம்.எஸ் செல்வகுமாரும் டி.எம்.எஸ் பால்ராஜும் தங்கள் ரிதம் ஆர்கெஸ்ட்ரா குழுவுடன் மேடைகளில் பாடுகிறார்களாம். என் பாட்டுக்கள் என் பிள்ளைகளை வாழ வைக்கும் என்று வேதனையுடன் சொல்கிறாராம் டி.எம்.எஸ்.

டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகரான அழகிரி, அவருக்காக மதுரையில் ஒரு விழா நடத்தினார். அத்துடன் அவர் பிள்ளைகளை சினிமாவில் பாடவைக்க அவர் ஆணையிட்டால், அது நடந்து விட்டால் டி.எம்.எஸ் இனி வேதனைப் படமாட்டார்.