Thursday, December 31, 2009

HAPPY

2010
HAPPY JANUARY
HAPPY FEBRUARY
HAPPY MARCH
HAPPY APRIL
HAPPY MAY
HAPPY JUNE
HAPPY JULY
HAPPY AUGUST
HAPPY SEPTEMBER
HAPPY OCTOBER
HAPPY NOVEMBER
HAPPY DECEMBER

Monday, November 2, 2009

அதுக்குள்ள ஆறு மாசம் ஆச்சா

சாக்லேட் விளம்பரத்தில் தூங்கி எழுந்த கும்பகர்ணன் கேட்பாரே, அது போல நான் சிகாகோ வந்து ஆறு மாசம் ஆச்சு. ஆனா நான் தூங்கல்லீங்க. நான் யு.எஸ் போறேன்னு சொன்னதும் என் நண்பர் கேட்டார், 'என்ன பேபி சிட்டிங்கா?'.

பேரன் (2 1/2) பேத்தி(9) உடன் விளையாடி, கதை சொல்லி, சன் டி வியில் எல்லா சீரியலும் பார்த்து, ஆறு மாதம் போனதே தெரியலே.

இன்று மாலை ஊருக்கு போகிறேன். ஊர் போனதும் ஜெட் லாக் எல்லாம் முடிந்ததும் ப்ளாக் எழுதுகிறேன். Bye Bye

Saturday, October 31, 2009

"நான் என்ன எம்.என்.நம்பியாரா இல்லை பி.எஸ்.வீரப்பாவா?

நேற்று சாயங்காலம் பீச்சில் கொஞ்சம் இருக்கலாம் என்று வந்தால் அப்போது வந்த பெண்மணி, "முகுந்தா, இங்கே வா. நீ எழுதிய மொட்டை கடிதத்தினால் உன் தம்பி கிருஷ்ணன் என்ன பாடு படுகிறான். கொஞ்சம் கூட கவலைப்படாமல், வேலை வெட்டி இல்லாமல், வீட்டோடு மாப்பிள்ளையாக் இருக்கும் உன் மாமாவுடன் சேர்ந்து சொத்து விவகாரம் பண்ணிக்கிட்டிருக்கே" என்று திட்டினார்.

இன்று காலை பேங்க்கில் பணம் எடுத்து விட்டு வெளியே வருமுன், எதிரில் வந்த மாமி,
"ரவி, இது உனக்கே நல்லாயிருக்கா? லீலா நல்ல பெண். உன் சந்தேகத்தினால் அவளை ஏன் கொடுமை படுத்தறே? பாவம் அவள்". என்றார்.

நேற்று டி.வியில் 'நானும் ஹீரோதான்' - நிழல்கள் ரவி நடித்த படம் பார்த்தேன். அதில் சினிமா ஷூட்டிங் ஒரு கிராமத்தில் நடக்கிறது. அங்கெல்லாம் ஹோட்டல் ரூம் எல்லாம் கிடைக்காதே, அதனால் நடிகர்கள், டெக்னீஷியன்கள் எல்லோரும் கிராமத்து வீடுகளில் விருந்தினர் போல தங்கினார்கள். ஒரு வீட்டில் நம்பியாரையும் வீரப்பாவையும் பார்த்து விட்டு, அந்த வீட்டுப் பெண்மணி, இவர்கள் இருவரும் ரொம்ப கெட்டவர்களாச்சே, இவங்க்ளுக்கு நான் இடம் தர மாட்டேன்னு சொன்னாங்க. அது போல என்னைப் பார்த்தவர்கள் எல்லாம் கேட்கிறார்கள்".
டிவி சீரியல் பார்க்கும் பெண்கள் அழுவார்கள் என்று ஜோக்ஸ் படித்தேன். இப்படி நம்மையே கேட்கிறார்களே என்று நினைத்தேன்

-----சீரியல் நடிகர் ராஜ்காந்த் சொல்வதாக ஒரு கற்பனை.


எல்லா சீரியலிலும் அவர் ரோல், இப்படித்தான் அமைகிறது. சினிமாவில் சண்டை காட்சிகளில் மட்டுமே நான் பார்த்த ஆரியன் அன்று கே டிவி பேட்டியில் அழகாக சிந்து பைரவியில் வரும் "தொம் தொம்தனம்..."பாட்டை மிக அழகாக பாடினார். தான் நடித்த படம் ஒன்றை தியேட்டரில் பார்க்கும் போது, திரையில் அவர் சீன் வந்ததும் ரசிகர்கள் அவரை கெட்டவார்த்தைகளால் திட்டினார்களாம். இது தான் வில்லன்களுக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் என்றார், ஆரியன்

நடிகர்களை ஹீரோ, வில்லன், காமெடியன் என்று முத்திரை குத்திவிடாமல் அவர்களின் திறமைகளை அறிந்து வித்தியாசமான ரோல்கள் தர க்ரியேட்டிவ் ஹெட்கள் யோசிக்க வேண்டும்

Wednesday, October 28, 2009

புதிய ஓவியர் சில்பி

அன்று விகடன், கல்கி இதழ்களில் சில்பி வரைந்த கோவில்கள், சிலைகளின் படங்களையெல்லாம் பார்த்து ரசித்திருக்கிறோம். சில்பி, தான் வரைய நினைக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று அங்கேயே இருந்து வரைவார்.


கங்கைகொண்ட சோழபுரம்


திருவாலங்காடு சிவன் கோவில்


Autism என்பது மூன்று வயதிற்குள் குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு மன வளர்ச்சி குன்றிய நோயாம். பேச முடியாத நிலை. ஆனால் தாங்கள் நினைப்பதை படம் வரைந்து வெளிப்படுத்தும் ஒரு திறமை அவர்களுக்கு உருவாகுமாம்.

Stephen Wiltshire இப்படி பாதிக்கப்பட்டவர். சிறு வயது முதலே படம் வரைவதில் கெட்டிக்காரராம். லண்டனில் வசிக்கும் இவர் பல நாடுகள் சென்று ஊரை, மனதில் படம் பிடித்து வந்து, வரைந்து தள்ளியிருக்கிறார்.



இந்த சில்பி தன்னுடைய சப்ஜெக்டை பார்த்து விட்டு, ஞாபகத்தில் கொண்டே தன் ஸ்டூடியோவில், துல்லியமாக போட்டோவை பார்த்து வரைவது போல வரைகிறார். பலநாடுகளின் நகரங்களை வரைந்திருக்கிறார்.





35 வயதாகும் ஸ்டீஃபன், தன் படங்களை காட்சிக்கு வைத்திருக்கிறார். படங்களை விற்று கிடைக்கும் பணத்தை நல்ல காரியங்களுக்கு நன்கொடையாக தருகிறார்.

நேற்றுதான் கூகுளில் பார்த்தேன். Stephen Wiltshire என்று search செய்தால் பார்க்கலாம்

சில்பி அவர்கள் வரைந்த திருநெல்வேலி மாவட்ட (அப்போ தூத்துக்குடியும் சேர்ந்தது) கோவில்கள், சர்ச், மசூதி எல்லாம் டி வி எஸ் நிறுவனம் வெளியிட்ட புத்தகம் என்னிடம் இருக்கிறது. அதையெல்லாம் பதிவிட ஆசைதான். அதற்கு அனுமதி பெற்று பிறகு செய்கிறேன். இந்த பதிவில் உள்ள சில்பி படங்கள் இரண்டும் varalaaru.blogspot.com மிலிருந்து எடுத்தேன். பதிவர்களுக்கு என் நன்றி

Monday, October 26, 2009

60 மைல் கல்களை கடந்தவர்கள்.

இரண்டாம் உலகப்போர் நடந்த நாளில்,James McAndrews-ன் பார்பர் ஷாப்புக்கு வருபவர்கள் போர் செய்திகள் அறிந்து கொண்டு, ட்வுனில் நடப்பது பற்றி பேசி, ஹேர்கட் செய்து கொண்டு போவார்கள்.




இன்று 90 வயதாகும் ஜேம்ஸ் தன் வாழ்வின் மூன்றில் இரண்டு பகுதியை, தான் வாழும் ஊரின் பிரபல பார்பராகவும், நாடித்துடிப்பாகவும் இருக்கிறார் என்று கூறும் அளவு பிரசித்தமானவர்.ஊரில் நிறைய மாற்றங்கள் நேர்கின்றன. புதிய தொழில்கள் தோன்றி விரைவில் மறைகின்றன. இவரது ஷாப் இந்த அறுபது ஆண்டு வளர்ச்சியில் ஐந்து இடங்களில் உள்ளன.

"நாம் யாரையும் திருத்த முடியாது. நான் ஒரு டெமாக்ரட். அதனால் என் ஷாப்பில் நாங்கள் அரசியல் பேசுவதில்லை" என்று சொல்லும் ஜேம்ஸ், "வியாபாரிகளும் நகரவாசிகளும் முன்னை போல நெருக்கமாக இருப்பதில்லை. எங்கள் பகுதியில் யாராவது இறந்து விட்டால், அவரை புதைக்கவும், அவரது வாரிசுகளுக்கு வேண்டிய பொருட்கள் வாங்கித் தரவும் நாங்கள் வீடு வீடாக சென்று பணம் வசூல் செய்வோம். இப்போ நாள் முழுதும் அலைந்தாலும் ஒரு சென்ட் கூட கிடைக்காது", என்று மிகவும் வருந்துகிறார்.

உடல்நிலை சரியில்லாத நிலையிலும் புதிய ஷாப்களில் உள்ளது போல் பெரிய டிவி எல்லாம் இல்லாமல் அவருடைய பார்பர் ஷாப் நடந்து கொண்டிருக்கிறது. தன்னுடைய நான்கு குழந்தைகளையும் கல்லூரி வரை படிக்க வைத்து ஆளாக்கி, தான் செய்யும் தொழிலை மதித்து, வாடிக்கையாளர்களை நேசித்து, அறுபது ஆண்டுகளாக நட்த்திய பார்பர் ஷாப்பை தன் தொண்ணூறாவது வயதில், அக்டோபர் 30 அன்று மூடப்போகிறார்.

நம் ஊரின் (McHenry) சரித்திரத்தில் இடம் பெற்ற ஜேம்ஸ்ஸை இனி மெயின் ரோடில் செல்லும்போது பார்க்க முடியாது என்பதை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை
என்கிறாராம் மேயர், சூஸன் லோ.

மைல் கல்லை கடந்த மேலும் இருவர்.



, Peg and Leroy Greathouse தம்பதியர், 25, ஆகஸ்ட் 1949-ல் திருமணமானவர்கள்.
தங்கள் (அறுபதாம் கல்யாணமில்லை)அறுபதாவது கல்யாண ஆண்டு விழாவை கொண்டாடினார்கள். . சினிமாவில் ஃப்ளாஷ் பேக் என்றால் ப்ளாக் & வொய்ட்-ல் காட்டுவார்களே, அது போல அன்று எடுத்த படத்துடன் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் படத்தை பாருங்கள்

தகவல்- சிகாகோ ட்ரிப்யூன்

Saturday, October 24, 2009

உட்கார்ந்து யோசிக்க முடியலையே

நானும் நிறைய எழுத நினைக்கிறேன்.


உட்கார்ந்து எழுதலாம்னு வந்தா இந்த நாற்காலியே ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறது





இது எப்போ முடிக்க, நான் உட்காரன்னு தெரியலே. மாதப்பத்திரிகை ஒன்றில் என்னை கவர்ந்த விளம்பரம்.

Thursday, October 22, 2009

"எனை ஆளும் மேரிமாதா துணை நீயே மேரிமாதா

மிஸ்ஸியம்மா படம் பார்த்திருக்கீங்களா? இன்று கே டிவியில் பார்த்தேன்.
உடனே உங்களுக்கு, "பிருந்தாவனமும் நந்தகுமாரனும்.." ஞாபகம் வரும்.
அதில் எல்லா பாட்டுக்களுமே நன்றாக இருக்கும்.

ஜெமினியும் சாவித்திரியும் வேலை கிடைக்காமல் ஒரு பள்ளிக்கூடத்திற்கு ஆசிரிய/யை வேண்டும். தம்பதிகளாக இருக்கவேண்டும் என்ற விளம்பரத்தை பார்த்து இருவரும் வந்து, அப்படி சொல்லி சேர்ந்து கொள்வார்கள். பள்ளி நடத்தும் எஸ்.வி.ரெங்காராவின் மகள் மகாலக்ஷ்மிதான் மேரியாக கிறிஸ்துவ தம்பதியிடம் வளர்ந்தவள். தங்கவேலுதான் அதை கண்டுபிடிப்பார்.
நல்ல சிரிப்பு படம். நிறைய அருமையான பாடல்கள்.
படத்தில் சாவித்திரி (பி.லீலா பின்னணி) பாடும் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

"எனை ஆளும் மேரிமாதா
துணை நீயே மேரிமாதா, என்றும்
துணை நீயே மேரிமாதா

பரிசுத்த ஆவியாலே
பரபுத்ரன் ஈன்ற தாயே
பிரபு யேசுநாதன் அருளால்
புவியோடு புனிதம் அடைந்தாய்
எனை ஆளும் மேரிமாதா...

நெறி மாறி வந்ததாலே
நகைப்பானதே என் வாழ்வே
கணமேனும் சாந்தி இல்லையே
அனுதினமும் சோதியாதே
எனை ஆளும் மேரிமாதா...." .

Monday, October 12, 2009

அசத்தப் போவது நானு.

அசத்தல் ரசிகர்களே, எல்லோருக்கும் நெல்லை சகாவின் வணக்கம்.

100 வாரம் தாண்டி நடக்கும் இந்த நிகழ்ச்சியை கடந்த 5 மாதங்களாகத தான் பார்க்கிறேன். ஸ்டாண்ட் அப் காமெடி - மதுரை முத்து போல - பண்ண நினைக்கிறேன். போலாமா? நன்றி.

இன்னிக்கி திங்கள் கிழமை, கொலம்பஸ் தினம். அமெரிக்காவில் பள்ளி விடுமுறை. சனிக்கிழமையன்றே கொலம்பஸ் பற்றி சொல்ல நினைத்த டீச்சர், க்ளாஸில் ஜானியை அழைத்து உலக வரைபடத்தில் வட அமெரிக்கா எங்கே? காட்டு என்றார். கரெக்ட்னு சொல்லி, "க்ளாஸ்! அமெரிக்காவை கண்டுபிடித்தது யார்" என கேட்க, எல்லோரும் 'ஜானி' என்றனர்.

இரவு படுக்குமுன், கடவுளே, நேபிள் ஐ இத்தாலியின் தலைநகராக மாற்றிவிடு என்று வேண்டினான் பையன். ஏண்டான்னு அப்பா கேட்டால், நான் டெஸ்டில் அப்படித்தான் எழுதியிருக்கிறேன் என்கிறான்.

பள்ளி விண்ணப்பம் எழுதும் போது தாய் மொழியா? தமிழ்னு எழுதுன்னார் அப்பா. அதுக்கு ஏன் தாய் மொழினு பேருன்னு பையன் கேட்டதும், ஏன்னா வீட்டில உன் அம்மாதானே பேசிக்கிட்டே இருக்கா, அதான்.

ஆபரேஷனுக்கு முன்னாடி, டாக்டர் பேஷண்ட் கிட்டே, உங்களுக்கு லோகல் அனெஸ்தீஸியா கொடுக்கப் போகிறேன் என்று சொல்ல, "டாக்டர், இம்போர்ட்டட் அனெஸ்தீஸியா இருந்தாலும் கொடுங்க எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை"னு சொன்னார் பேஷண்ட்.


டாக்டரிடம், அந்த இளம் நர்ஸ் சொன்னாள், "டாக்டர், நான் இவருக்கு எப்ப பல்ஸ் ரேட் பார்த்தாலும் ஜாஸ்தியா இருக்கு".

'நீ அவர் கண்ணைக் கட்டி விட்டு பல்ஸ் பார்' என்றார் டாக்டர்.


அந்த டாக்டருக்கும் நர்ஸ் மேல ஒரு இதுதான். அவளுக்கு ஒரு லவ் லெட்டர் எழுதினார். எப்படி? "ஐ லவ் யு சிஸ்டர்.........."

லாயர்கள் பற்றியும் நிறைய ஜோக்ஸ் உண்டு. வீட்டு வாசலில் ஒரு போர்டு. எங்கே ஆசை இருக்கிறதோ அங்கே வழி உண்டு. எங்கே வழியோ அங்கே சட்டம் உண்டு. எங்கே சட்டம் உண்டோ அங்கே ஓட்டை உண்டு. எங்கே ஓட்டை உண்டோ அங்கே லாயர் உண்டு. வாங்க.

அபியும் நானும் படத்தில் சர்தார்ஜி எப்படி உழைக்கிறார்கள், அவர்கள் பிச்சை எடுப்பதே இல்லை என்று தெரிஞ்சுக்கிட்டேன். அதனால் சர்தார்ஜி ஜோக் இனி சொல்ல மாட்டேன்.

வேலைக்காக இன்டர்வியூ போனான் நம்மாளு. பேட்டி எடுப்பவர் அவனிடம், ஆபீஸில் சுத்தம்தான் ரொம்ப முக்கியம். நீ வரும்போது ஃப்ளோர்மேட்டில் காலை துடைத்து விட்டு தானே வந்தாய் என்று கேட்டார். அவன் நன்றாக துடைத்து தான் வந்தேன்னதும், அவர், எனக்கு பொய் சொன்னால் பிடிக்காது. வாசலில் ஃப்ளோர்மேட்டே இல்லை என்றார்.

வீட்டிலே ஒரு நாள் சுப்பாண்டி மாதிரி ஒரு வேலையாளிடம், யாராவது வந்தால், நீங்க
யாருன்னு கேட்டு, பணம் கேட்டு வந்தால் நான் ஊரில் இல்லைனு சொல்லிடுன்னார். கொஞ்ச நேரத்தில் ஒருவர் வந்து பெல் அடிக்கவும் சுப்பாண்டி கதவை திறந்து யார் நீங்க? அவரை எதுக்காக பார்க்கணும்?னு கேட்டான்.

அவர், ஒரு பில் இருக்குனு சொல்லவும், சுப்பாண்டி "அவர் நேற்று மாலையே ஊருக்கு போயிட்டார்"னான். வந்தவர், அந்த பில்லுக்கு பணம் தரத்தான் வந்தேன். நீ சொல்லிடு, அப்புறம் வரேன்னு கிளம்பினார். "ஸார், ஸார், அவர் இன்று காலையே வந்து விட்டார், இருங்க கூப்பிடுறேன்"னான் சுப்பாண்டி.


புதிதாக வேலையில் சேர்ந்தவன் மறுநாளே லேட்டா வரவும், மேனேஜர் அவனிடம், நீ காலை 10 மணிக்கே வந்திருக்கணும்னார்.

அவன் கேட்டான் "ஏன் ஸார், என்ன நடந்தது"

அமெரிக்காவிலிருந்து டில்லி வந்த சுற்றுலா பயணிகள் அழைத்துக்கொண்டு போனார் ஒரு கைடு. செங்கோட்டை பார்த்ததும், அவரிடம் இதை எத்தனை ஆண்டுகளில் கட்டினார்கள்னு கேட்டார் ஒரு பயணி. 20 ஆண்டுன்னதும் அமெரிக்காவில் இதை 5 ஆண்டுகளில் கட்டி விடுவோம் என்றார். ஆக்ராவில் தாஜ்மஹால் 10 ஆண்டுகள்னதும் நாங்கள் 2 1/2 ஆண்டுகளில் கட்டி விடுவோம்னார். இப்படி எல்லா இடங்களிலும் அவர் சொன்னதும் கைடு அவர்களை குதுப் மினார் கூட்டிச் சென்றார். பயணிகள் கேட்கும் முன் கைடு சொன்னார், "நேற்று நான் வந்தபோது இது இங்கே இல்லையே"


நண்பர்கள் கூட்டத்தில் சினிமா பற்றி கேள்விகள் கேட்டார்கள். அப்பா/மகன், அக்கா/தங்கை எல்லாம் நடித்தார்கள். ஒரு அண்ணன்/தங்கை சொல்லுங்கள் என்று ஒரு கேள்வி. ஒருவன் உடனே எம்.என்.நம்பியார், எம்.என்.ராஜம் என்றான். இனிஷியல் ஒண்ணா இருக்கே அப்படிங்கிறான்.


தினம் தங்கள் வாழ்க்கையிலேயே அசத்தும் அசத்தல் மன்னர்கள் இருக்கிறார்கள்.


கலைஞர் முதன்முறை முதலமைச்சர் ஆன சமயம். சட்டசபை உறுப்பினர், திரு,கருத்திருமன், அவரிடம், "நீங்கள் நாடார்களுக்கு உதவி செய்ய மாட்டீர்கள்னு சொல்றாங்களே அப்படியா?" என்று கேட்டார்.

கலைஞரின் பதில், "என்னை நாடினோர்க்கு நான் உதவுவேன்னுதான் சொன்னேன். நாடார்க்கு உதவ மாட்டேன் என்று அர்த்தமில்லை."

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு நண்பர் வீட்டுக்கு சென்றபோது, என்ன சாப்பிடுகிறீர்கள், டீயா காபியா என்று கேட்டார்களாம். "டீயே மதுரம்" என்றாராம் கலைவாணர்.

"இன்னிக்கு இட்லி இல்லை. உங்களுக்கு பூரி படிக்குமா"ன்னு நண்பர் கேட்டதும், "ஜகந்நாதனுக்கு பூரி பிடிக்காமல் போகுமா?" என்று சொன்னாராம் கி.வா,ஜ.

வேறு ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு என்று கலைவாணர் பாடினார்.

மனிதன் மட்டும் ஏன் சிரிக்கிறான்? அவன் தான் அதிகம் துயரடைகிறான்.அதனால் அவன் சிரிப்பை கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று என்று யாரோ சொன்னதைப் படித்திருக்கிறேன்.

நன்றாக சிரித்துக் கொண்டிருங்கள். நன்றி, நன்றி, நன்றி.









Sunday, October 11, 2009

கார் - ஷோ ரூமில் இல்லை, ஷோ கேஸில்



அக்டோபர் போட்டோ போட்டிக்கு.

Monday, October 5, 2009

அ முதல் ஃ வரை : ஏ டு இஸட் வரை

இந்த வரிசைகளில் அறம், ஆறுவ்து......என்றும் அம்மா, ஆசை என்ற வரிசைகளில் எழுதி விட்டார்கள். நாம் என்ன் எழுதலாம் என நினைத்த போது, அ,ஆ வரிசையில் சினிமாவும், ஏ டு இஸட் வரிசையில் நமக்குப் பிடித்த கார் பெயர்களும்தான் ஈஸின்னு தோன்றியது. கதை, நடிப்பு, பாட்டு என்று என்னால் மறக்க முடியாத படங்கள் நினைவு வந்தன.
அ : அடுத்த வீட்டுப் பெண்
நல்ல காமெடி. அஞ்சலிதேவி, தங்கவேலு நடித்தது.
"வனிதாமணியே...நீ வாராய் அமுத கனியே..
ஹம்ஸத்வனி ராகம்னு நினைக்கிறேன்.
ஆ : ஆடிப்பெருக்கு.
"தனிமையிலே இனிமை காண முடியுமா..." நல்ல பாட்டு. இந்த காட்சியில் சரோஜாதேவி அழகாக நடித்திருப்பார்.
இ : இல்லறஜோதி.
மாடர்ன் தியேட்டர்ஸ் படம். கண்ணதாசன் வசனம். அனார்கலி நாடகத்தில் சிவாஜிதான் சலீம். ஓ.ஏ.கே தேவர் (ராஜாமான்சிங்) அனார்கலியிடம், "நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும்,
நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்" என்று சொல்வார்.
"உனக்கும் எனக்கும் உறவு காட்டி உலகம் சொன்னது கதையா" -
ஜிக்கி பாடிய நல்ல பாட்டு.
ஈ : ஈரம்
ஒற்றை எழுத்தில் தீ, நீ என்று படங்கள் உண்டு. ஈ வந்ததா?
ஊருக்கு வந்ததும் நான் பார்க்க நினைக்கும் படங்களில் ஒன்று.
உ : உத்தமபுத்திரன்
பி.யு.சின்னப்பா படமும் உண்டு. நான் சொல்வது சிவாஜி கணேசன் படம். "யாரடி நீ மோஹினி கூரடி என் கண்மணி.." பாட்டுக்கு ஹெலனுடன் அழகாக ஆடுவார். பியுசி படிக்கும்போது க்ளாஸ் கட் பண்ணி மேட்னி பார்த்தேன். அண்ணனுக்கு தெரிஞ்சு என்னை திட்டினார். நல்ல வேளை அப்பாவிடம் சொல்லவில்லை.
ஊ : ஊர்க்காவலன்
ரஜினியின் இன்னொரு ஃபார்முலா படம்
எ : எதிர்பாராதது
ஸ்ரீதர் வசனம். சிவாஜி, பத்மினி, நாகையா நடித்தது.
"சிற்பி செதுக்காத பொற்சிலையே."
ஜிக்கி பாடும் இப்பாட்டை ஏ.எம்.ராஜா சோகமாக பாடுவார்
ஏ : ஏழை படும் பாடு
Les Miserable என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல். நாகையா நடித்தது.
Javert என்ற் போலீஸ்காரராக சீதாராமன் நடித்ததால் ஜாவர் சீதாராமன் ஆனார்.(பட்டணத்தில் பூதமாக வருவாரே)
ஐ : ஐந்து லட்சம்
ஐ என்றதும் நினைவு வந்த படம்
ஒ : ஓளி விளக்கு
எம்.ஜி.ஆர் நடித்த ஜெமினி படம். அவர் ஆஸ்பத்திரியில் இருந்த சமயம்.
"ஆண்டவனே உன் காலடியை நான் கண்ணீரில் நீராட்டினேன் - இந்த ஓருயிரை வாழவைக்க இன்று உன்னிடம் கையேந்தினேன் முருகையா
என்று ஒரு பாட்டு.
ஓ : ஓர் இரவு
"துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா"
ஒள : ஒளவையார்
றம்....றுவது என வரிசையில் பாடியவர். அந்த நாளில் நடிக்க ஒரு லட்சம் வாங்கிய நடிகை கே.பி.சுந்தராம்பாள். சின்ன ஒளவையாக பேபி சச்சு, குமரியாக குசலகுமாரி தோன்றினார்கள்.
எங்க அப்பாவுடன் நாங்கள் சேர்ந்து பார்த்த ஒரே படம்.
ஆயுத எழுத்து
இது அக்கன்னாவுக்காக.
மணிரத்னம் படம்


A to Z கார்கள் பார்க்கலாமா?

Austin A 40.
சித்தப்பா காரில்தான் நான் ஓட்டப் பழகியது.


Buick. Lacrosse தான் டாப் ஆஃ தி லைன். கனடாவில் ஃப்ரென்ச் பேசும் இடங்களில் மட்டும் அது Allure எனப்படுகிறது. ஃப்ரென்சில் வேறு அர்த்தமாம்.
Chevrolet.
எங்க வீட்டு கார். அப்பா 1947ல் வாங்கினார். பழைய மாடல் கார்கள் எதையுமே அமெரிக்க சாலையில் காணமுடியவில்லை. இது கூகிளில் எனக்கு கிடைத்த படம். எங்க காரைப் போலவே ரெஸ்டோர் ப்ண்ண வேண்டிய நிலையில்தான் இங்கேயும் இருக்கின்றன


இது யார் தெரிகிறதா?

Citroen

Dodge
Edsel-
ஒரு போர்ட் கார்.
ஹென்றி ஃபோர்டின் மகன் பேராம் Edsel கொஞ்ச ஆண்டுகள் தான் வந்தது.
Fiat. அப்பா எனக்கு வாங்கித் தந்தது பியட் 1100.
Grand Prix. போனியாக்(Pontiac) காரின் ஒரு மாடல்.
Hillman அந்நாளில் இந்தியாவில் நிறைய கார்கள் வந்தன.
Imperial . க்ரைஸ்லரின் டாப் கார்
Jaguar யு கே யில் தயாராகும் ஸ்போர்ட் கார்.
Kaiser அமெரிக்க கார். இப்போ தயாரிப்பில் இல்லை
Lincoln Continental

ப்ரெஸிடென்ட் கென்னடி இந்த திறந்த காரில் செல்லும் போது தான் சுடப் பட்டார்
Morris Minor 50களில் இந்தியாவில் வந்தது.
Nova செவர்லேயின் 4 சிலிண்டர் கொண்ட சின்ன கார். நோவா என்றால் ஸ்பானிஷ் மொழியில் Won't go என்று அர்த்தமாம். பின்னாளில் வரவில்லை. இப்போ சின்ன கார்கள் செய்ய மூன்று கம்பெனிகளும் நினைக்கின்றன.
Nissan அமெரிக்காவில் 3 வது இடத்தில் இருக்கிறது
Odyssey ஹான்டாவின் வேன். மகள் எனக்கு டைரக்ஷன் சொல்ல நான் அமெரிக்க சாலைகளில் ஓட்டிக்கொண்டிருக்கிறேன்
Opel ஜெனரல் மோட்டார்ஸின் ஜெர்மன் கார்
Plymouth இது ஒரு ராக் பெயராம்.
50களில் இந்தியாவில் ப்ரீமியர் ஆட்டொமொபைல்ஸ் தயாரித்தது.
Quest நிஸானின் ஒரு மாடல். நம்முரில் Qualis (டொயோடா) இருக்கிறதே

Rolls Royce







சார்ல்ஸ் ரோல்ஸ் -ம் ஹென்றி ராய்ஸ் சேர்ந்து தயாரித்தது.
Studebaker
Thunderbird
Vauxhall ஜெனரல் மோட்டார்ஸின் பிரிட்டிஷ் கார்.
Willys ஜீப்
Xylo மஹிந்திரா இன்னோவா வுக்கு போட்டியாக தயாரிக்கும் கார்
Yaris டொயொடாவின் இன்னொரு மாடல்
Zodiac , Zephyr
Zen. மாருதி கார்
நிறைய கார் படங்கள் பதிய வேண்டும் என்று நினைத்தேன். போதுமா









Friday, October 2, 2009

அக்டோபர் 2 அன்று சாஸ்திரியை மறக்கலாமோ?

1951 - 56 ல் ரயில்வே மினிஸ்டர் ஆக இருந்தார். 1956ல் மஹபூப்நகரில் நடந்த ரயில் விபத்தில் 112 பேர் இறந்ததால் தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார்.

02/10/1904 - 10/01/1966

பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஒப்புக்கொள்ளாததால் தொடர்ந்து பதவியில் இருந்தார். அதன் பின் 3 மாதம் கழித்து அரியலூரில் நடந்த விபத்தில் 144 பேர் இறந்ததும் பிரதமரிடம் ராஜினாமா கடிதம் தந்தார். அதை அங்கீகரித்த பிரதமர், பார்லிமெண்டில் இதை சாஸ்திரியின் பொறுப்பு குறைவு என்பதல்ல, பதவியில் இருப்பவர்களுக்கு, இது ஒரு முன் உதாரணமாக இருக்கும் என்று சொன்னாராம்.
1964 ல் நேரு மறைவுக்குப் பின், அன்று காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த காமராஜ், லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக்கினார்.

2016 ஒலிம்பிக் அமெரிக்காவுக்கு கிடைச்சுட்டா

சிகாகோ மேயர் டாலி, மிஷேல் ஒபாமா, ஓப்ரா மூவரும் கோபன் ஹாகனில் ஒலிம்பிக் கமிட்டி மீட்டிங் போது என்ன பேசியிருப்பார்கள்.

மேயர் டாலி : நமக்கு கிடைச்சா உங்க காட்டுல மழை தான்



மிஷேல் ஒபாமா : நாங்கல்லாம் ஃபர்ஸ்ட் லேடிதான். ஒலிம்பிக் அமெரிக்காவுக்கு கிடைச்சுட்டா நீங்கதான் முதல் லேடி ப்ரெஸிடென்ட்.
ஓப்ரா : எத்தனை நாள் டிவியில் டாக் ஷோ நடத்துரது. நீங்க சொன்னது பலிச்சா இனி செனட்லதான் டாக் ஷோ.

Thursday, October 1, 2009

"தங்கமோ வெள்ளியோ செல்வம் இல்லை. ஆரோக்கியமே செல்வம்".

சொன்னது யார்?


"In prayer it is better
to have a heart without words
than words without a heart".

"It is health that is real wealth
and not pieces of gold and silver."

"It is the quality of our work
which will please God and not the quantity"
.

"Happiness is when what you think,
what you say, and what you do are in harmony."

"I believe in equality for everyone,
except reporters and photographers".
"You must be the change
you wish to see in the world".

"Whatever you do may seem insignificant to you,
but it is most important that you do it".

"Prayer is a confession of one's own
unworthiness and weakness".

"The good man is the friend of all living things".

"The weak can never forgive.
Forgiveness is the attribute of the strong".

"There is a higher court than courts of justice
and that is the court of conscience.
It supercedes all other courts"

சொன்னவர்.









Saturday, September 26, 2009

வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும், வீடும் ஒரு நாள் வண்டியில் ஏறும்

சிகாகோ வந்ததும் பரம சன் டிவி பக்தன் ஆகி விட்டேன். அன்று ஒரு லோகல் சானல் பார்க்கலாம்னு ரிமோட்டை அழுத்தினால் இந்த காட்சி



உடனே டிவி ஸ்க்ரீனையே போட்டோ எடுத்தேன்.



முன்னால் செல்லும் வண்டியிலிருந்து திருப்பங்களில் டைரக்ஷன்.



வீட்டை நமக்கு பிடித்த இடத்தில் கொண்டு வைத்துக் கொள்ளலாமோ?












Friday, September 25, 2009

"சினந்தென்னை அடித்தாலும் பரிந்தென்னை அணைத்தாலும்......."

இன்று பகல் டிவியில் ஜெமினியின் இரும்புத்திரை படம். இது எத்தனை தடவை பார்த்து விட்டீர்கள். கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க என்றாள் தாமரை. முதலில் ஒரு பாட்டு வரும். அதை கேட்டு விட்டு வந்து விடுவேன் என்றேன். நல்லா இருக்கே, யார் பாடியதுனு கேட்டாள்.



என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே
என் அன்னையே உமையே , என்னை நீ
என்ன செய்தாலும்...

சின்ன வயது முதல் உனை நம்பினேனே
சினந்தென்னை அடித்தாலும்,
பரிந்தென்னை அணைத்தாலும்
என்ன செய்தாலும்...

முன்வினையால் இன்பதுன்பங்கள் விளைந்தாலும்
மூடமதி கொண்டு உன்னை நோவதென் பேதமை
என்விதியால் இடர் ஆயிரம் சூழினும், எல்லாம்
உன் திருவிளையாடல் என்றெண்ணி நீ
என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே
என் அன்னையே


இசை: எஸ்.வி.வெங்கட்ராமன்
பாடியது: ராதா ஜெயலக்ஷ்மி
எழுதியவர்: கொத்தமங்கலம் சுப்பு

சிடி கிடைத்தால் கேட்டுப் பாருங்களேன்

Sunday, September 20, 2009

"அண்ணா ஒரு பைத்தியமா ஆயிருச்சு"

நூற்றாண்டுக்கும் இதற்கும் சம்பந்தமில்லீங்க.
திகம்பர சாமியார்னு எம்.என்.நம்பியார் பல வேஷங்களில் நடித்து 50/51ல் வந்த படம்.

நரசிம்ம பாரதியும் திரொளபதியும் தான் ஜோடின்னு ஞாபகம்.

எத்தனையோ பழைய படங்களை தியேட்டரிலோ டிவியிலோ பார்க்க முடிகிறது. இது மாதிரி சில நல்ல படங்களை ஏன் பார்க்க முடிவதில்லை.
அதிலே ஒரு பாட்டு.

அண்ணா ஒரு பைத்தியமா ஆயிருச்சு
அண்ணி மேலே சொக்கி சொக்கி
ஓ அண்ணா சொக்கி சொக்கி
தூங்காம அண்ணாவையே சுத்தி சுத்தி
ஓடுராளே மக்கு மக்கு
ஓ அண்ணி மக்கு மக்கு.

எங்க வீட்டு ராஜாவை எங்கிருந்தோ
ராணி வந்து இழுத்து வளைச்சுக்கிட்டா பார்த்தியா
இது ரெட்டமாட்டு வண்டியாச்சு பாத்தியா
இனி வேளைக்கு நீ வீடு வந்து சேரணும்
சொந்த வேலையெல்லாம் மூட்டி கட்டி ஆகணும்
நாளுக்கொரு வேட்டி சட்டை மாத்தணும்
நடராஜா போல் நடை நடந்து காட்டணும்
டக்கு டக்கு டக்கு டக்கு
அண்ணா ஒரு பைத்தியமா.....

ஒண்ணோட் ஒண்ணு இங்கே ரெண்டாச்சு -இந்த
ரெண்டோட ஒண்ணு வந்து மூணாகும்
அண்ணியோட நீ தனியா பேசுவே- அப்போ
அந்த பையன் குடுகுடுனு ஓடுவான் -இனி
என்னை நீயும் ஏரெடுத்து பார்ப்பியா- எந்தன்
பாட்டையுமே நீ ரசிச்சு கேப்பியா
டக்கு டக்கு டக்கு டக்கு"
அண்ணா ஒரு பைத்தியமா ........

எங்க பெரிய அண்ணனுக்கு கல்யாணமான புதிது. அப்ப எனக்கு வயசு 12/13. நல்லாவே பாடுவேன். இந்த பாட்டை என்னை பாடச்சொல்லி என் அம்மா ஆசையா கேட்பாள்.
நாலு நாளுக்கு முன் இந்த படத்தைப் பற்றி யாரோ வலையில் நம்பியார் 10 வேஷங்களில் நடித்தது பற்றி எழுதி இருந்தார்கள். அதை க்ளிக் செய்தால் எனக்கு கிடைக்கவே இல்லை. அப்போதான் இந்த பாட்டு நினைவு வந்தது.
முதல் சரணத்தின் வரிகள் மறந்து போச்சு.யாராவது சொல்லுங்களேன் என்று எழுதி இருந்தேன். நான் எதிர்பார்த்தது போல நானானி சொல்லிட்டாங்க. நன்றியுடன் சேர்த்து எழுதி விட்டேன்.

Saturday, September 19, 2009

புத்தகமா? அப்படினா என்னப்பா?

2090-ம் ஆண்டில் குழந்தைகள் இப்படி கேட்பார்களோ?


ஏட்டுச்சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதினார்கள். மரத்தை கூழாக்கி காகிதம் செய்ய அறிந்ததும், இறகு முனையை சீவி, எழுதுகோல் செய்து மை தொட்டு எழுதினார்கள். கையெழுத்து பிரதிகள் எல்லோரையும் சென்றடைய காலதாமதமானது. அச்சு எந்திரம் கண்டு பிடிக்கப்பட்டதும், அச்சுத் தொழில் பெருகி புத்தகம் ஆனதும் , விரைவில் பல பிரதிகள் விற்பனையாளர்களையும், நூலகங்களையும் மக்களையும் அடைந்தது. முதன்முதலாக ப்ரிண்ட் ஆனது பைபிள் தான். படிக்கும் ஆர்வமும் தூண்டிவிடப்பட்டது. நிறைய எழுத்தாளர்கள் உருவானார்கள். கதை, கவிதை நாவல் என்று பல வடிவங்களில் புத்தகங்கள் வந்தன. செய்திப் பத்திரிகைகள், மாத/வார பத்திரிகை எல்லா நாட்டிலும் அச்சாகி விற்பனை ஆகிறது. படிப்பது ஒரு பொழுது போக்காக அமைந்தது. புத்தகங்கள் வாங்கி படித்தோம், நூலகம் சென்று படித்தோம்.

புத்தகம் படிக்க இப்போ எப்படியெல்லாம் தூண்டுகிறார்கள் பாருங்கள். அமேஸான் நிறுவனம் இன்று புத்தகங்கள், செய்தித்தாள்கள் எல்லாவற்ரையும் Kindle (தூண்டுதல் என்றே சொல்வோமா) மூலம் விற்பனை செய்கிறது. $399 க்கு இதை வாங்கி, அதில் நாம் விரும்பும் புத்தகத்தை $9.99 (பேட்டா விலை) டெளண்லோட் செய்து கொள்ளலாம்



அதன் சைஸை பாருங்களேன்






பென்சில் கனம்தான்


தினசரிகளுக்கு அதற்குரிய சந்தா கட்டினால், தினம் காலையில் நம்பர் ஒன் பேப்பர் இன்னும் வரலையே என்று வாசலைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம். தூண்டுதலில் 300 புக் பதிவு செய்து கொள்ளலம். யார் வீட்டிலும் இனி புக் ஷெல்ஃப் இருக்காது.


பயணங்களில் நிறைய புக் எடுத்துச் செல்லாமல் ஒரு தூண்டுதல் கொண்டு போனால் போதும். ஷிப் ரெக் ஆகி ஆளில்லாத தீவில் நீ இருக்க நேர்ந்தால் உனக்கென்ன வேண்டும் எனக் கேட்டால், ஒரு தூண்டுதல் போதும் என்பான் புத்தகப்புழு.

கனடாவில் ஒரு புக் ஷாப் முன் உள்ள படிப்பாளி சிலை

டிவி வந்ததும் படிப்பது குறைந்தது. கம்ப்யூட்டர், இன்டெர்நெட் எல்லாம் வந்ததும் செய்திகள் விரைவில் உலகம் முழுக்க பரவ முடிகிறது.

9/11 நிகழ்ச்சியை முதன்முதலில் உலகறிந்தது இன்டெர்நெட் மூலம்தான். வலைப்பதிவில் இன்று நாம் தினம் எழுதுகிறோம். ஆயிரக்கணக்கானவர்கள் அதைப் ப்டிக்க முடிகிறது. இதை நாம் பத்திரிகைக்கு அனுப்பினால் அப்படியே அச்சிட மாட்டார்கள். ஆசிரியர் குழு தேர்வு செய்து அதை திருத்தி, எடிட் செய்து, சுருக்கிதான் அச்சிடுவார்கள்.

உலக புத்தக தினம், புத்தகக் கண்காட்சி எல்லாம் நடத்துகிறோம். இப்போ உலகெங்கும் விற்பனை குறைந்து வருவதாக தெரிகிறது. நம்முடைய பொறுப்பு எவ்வளவு கூடுமென்று பாருங்கள்.

டெக்னாலஜி நம்மை அன்ஃபிட் ஆக்கி விட்டதா என்று டிவி விளம்பரத்தில் ஒரு பெண் கேட்பாரே. எப்படியோ நம்மை சோம்பேறி ஆக்கி விடும் போலிருக்கிறது. இனி பாடப்புத்தகங்கள் கூட வராதோ? பள்ளிக்கு மாணவர்கள் லாப்டாப் கொண்டு போவார்கள். நோட்புக் கிடையாது. பாடப்புத்தகமெல்லாம் தூண்டுதலில் வந்து விடும். கீபோர்டிலேயே எழுதுவார்கள். இப்போ எல்லாம் நாம் பேப்பரில் எழுதுவதே குறைந்துவிட்டது.

டெக்னாலஜி நம் கையெழுத்தை மட்டுமில்லை, நம் தலையெழுத்தையே மாற்றி விடும்.

Tuesday, September 1, 2009

ஜே ஜே எங்களுக்கு ஜே ஜே

டோனிடவுன், அர்கன்ஸாஸ் ஸ்டேட்டில் வசிக்கும் ஜிம் பாப்(44), மிஷெல் டுகர்(42) தம்பதிக்கு பத்தொன்பதாவது குழந்தை பிறக்கப் போகிறதாம். நாம் இருவர்-நமக்கு ஒருவர் எல்லாம் எங்களுக்கு இல்லை. முதல் பையனுக்கு வயது 21, சின்னவளுக்கு 8 மாதம். இன்னும் 12 வாரத்தில் எங்கள் கடைக்குட்டி பிறந்திடும், என்று டிவி பேட்டியில் சொல்கிறார்கள்


மூத்த பிள்ளை ஜோஷ், சீக்கிரம் அவர்களை தாத்தா, பாட்டி ஆக்கப் போகிறாராம். எல்லோருடைய பெயரும் ஜே -ல் தான்.



ஜோஷ் 21 : ஜானா, ஜான் டேவிட் 19(twins)


ஜில் 18 : ஜெஸ்ஸா 16 : ஜிங்கர் 15 ஜோஸப் 14


ஜோஸையா 13 : ஜாய் அன்னா 11


ஜெடிடியா, ஜெரெமையா 10 (twins)


ஜேஸன் 9 : ஜேம்ஸ் 8 : ஜஸ்டின் 6


ஜாக்ஸன் 5 : ஜொஹன்னா 3


ஜெனிஃபர் 2 : ஜோர்டன் கிரேஸ் 8 மாதம்


கடைக்குட்டிக்கும் ஜே யில் பெயர் யோசிக்கிறார்கள்.

பிள்ளைகள் ஜே யில் ஆண்/பெண் பேர்கள் லிஸ்ட் எடுத்து ரெடியாக இருக்கிறார்கள்.


ஜே யில் பெயர்களை தங்களுக்கு PEOPLE.com மூலம் அனுப்புமாறு ஜிம் பாப் தம்பதி கேட்கிறார்கள்.
நானும் நம்ம ஊர் பேராக யோசித்தேன்.


ஆண்- ஜம்பு, ஜெகன்


பெண்- ஜானகி, ஜாஸ்மின்
நல்லாயிருக்கா? நீங்களும் எழுதுங்களேன்







தம்பதிக்கு ஜே ஜே.


வாழ்த்துக்கள்


நன்றி - msn.com , people.com



Saturday, August 29, 2009

வீட்டிலே இருக்கும்போது லாண்ட்லைனில் பேசுறது காமன் சென்ஸ்

டிவி விளம்பரங்கள் பார்க்கிறோம். அதில் தினம் கேட்கும் வார்த்தைகள் எங்காவது கேட்டால்...........


நேற்று பகல் ஹோட்ட்லில் சாப்பிட்டு வெளியே வந்தோம். சர்வர் பின்னால் ஓடி வந்து, சார் பையை மறந்துட்டீங்களே. நீங்கள் எதிரே ரிஜிஸ்ட்ரார் ஆபீசிலிருந்து சாப்பிட வந்ததை பார்த்தேன். இந்தாங்க, உங்க பத்திரம், பத்திரமா பார்த்துக்கங்க, என்றான்

நண்பன் லட்டு தந்தான். ஓ, திருப்பதி போனியா? ரொம்ப கூட்டமோ, செலவு என்ன ஆச்சுனு கேட்டேன். சே என்னை மொட்டை அடிச்சுட்டான்யான்னு சொல்றான்.

டப்பாவில் இருந்த கடைசி சாக்லெட்டை வாயில் போடுற நேரத்தில் அவள் வந்துட்டா.எந்த ஸ்கூல்? டீச்சர் சொல்லிக்கொடுக்கலே, ஷேரிங் அப்படின்னா. ஒண்ணுதான் இருக்கு எப்படி பாதியாக்கனு கேட்டா,
சும்மா கடிச்சுடுங்கங்கிறா.

வீட்டில் ஒரு நாள் என் செல்ஃபோனை எங்கே என்று தேடினேன். அவசரமா பேசணும் யாராவது பார்த்தீங்களா என்றேன். வீட்டிலே இருக்கும்போது லாண்ட்லைனில் பேசுறது காமன் சென்ஸ் அப்படினு சொல்றா என் பேத்தி.

ராமு, சோமு, சீனு மூவரும் வந்தார்கள். சீனு சட்டை எல்லாம் மண்ணா இருந்தது. என்னை பார்த்ததும் நான் விழுந்துட்டேன் என்று சொன்னான். ராமு நீ தள்ளி விட்டாயான்னு கேட்டா சொல்றான் , நா தள்ளல ஸார். சோமு, நீயான்னா, அவனும் நா தள்ளல ஸார்ங்கிறான்

Friday, August 14, 2009

.ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்



பூரி(ஒரிஸா) கடற்கரையில் ஒருவர் பூரிச்சுப் போய் அமைத்த சுதந்திர தின வாழ்த்து.

Monday, August 10, 2009

உங்கள் கம்ப்யூட்டர் ரிப்பேரா? டெக்னிஷியனிடம் தரப் போகிறீர்களா?

லண்டனில் நட்ந்த ஒரு டெஸ்ட். இதைப் படியுங்கள். புதிய நியூஸ்வீக் பத்திரிகையில் இன்று நான் படித்தேன்

Shifty PC repair
How trustworthy are PC repair technicians? Looking for possible ripoffs, British TV's Sky News and PC Pro magazine, created a simple problem in a notebook by loosening a memory chip. Then they took the computer - loaded with fake files and software that could track what techinicians did - to six London repair outlets.

All the shops quickly discovered the dislodged chip, with five of them dishonostly telling the "cusomer" that extensive repairs were necessary. At two of those shops technicians also looked through "vacation photos" the notebook contained (pictures of the customer clad in a bikini). One tried to cover his tracks. The other copied the snapshots to his USB drive. he also tried to log into a faux online bank account planted on the laptop.(He was reported to the police).


The shop that passed the ethics test? Let's hear it for Pix4 in Shepherds Bush. Wrote PC Pro: "The staff promptly discovered the loose chip, popped it back into place, and told us with a smile, there would be no charge." :- Arik Hasseldahl

Friday, August 7, 2009

இதயத்தை எப்படி எல்லாம் கசக்கி பிழியப் போகிறார்களோ

இதயம். புத்தம்புதிய மெகா தொடர். சன் டிவியில் காணத் தவறாதீர்கள்

நான் டாக்டர் சாய் கல்யாணி. தினம் கேட்கும் குழந்தை அழுகைதான் எனக்கு சங்கீதம்.

தாலிக்கொடி மூலம் எனக்கு ஒரு தாய் கிடைப்பாள் என்று நான் நினைக்கலை

ஒரு நல்ல மனைவி கிடைத்தால் அவன் தான் பணக்காரன்.

ஏன் ஆண்களுக்கு மட்டும் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது. அவர்கள் நிறைய ரகசியங்களை நெஞ்சில் பதித்துக் கொள்வதால்

என் மருமகள் மகளாக இருக்கணும். ஏன்னா நான் தாயா இருப்பேன்.

இப்படி பல முன்னூட்டங்களுடன் விரைவில் வர இருக்கிறது,


இதயம்.


புதிய சீரியல். சீதா மற்றும் பலர் நடித்தது.

Wednesday, July 29, 2009

மேடைப் பேச்சிலும் சர்ப்ரைஸ்.

ஒரு மீட்டிங் போயிருந்தேன். நிகழ்ச்சி நிரல் தந்தார்கள். யார் யார் என்ன பேசப் போகிறார்கள் என்று லிஸ்ட் இருந்தது. அதில் மூன்றாவதாக பேசுபவர் என்ன டாபிக்னு போடவில்லை.முதல் இருவரும் தங்களை அழைத்ததும், எல்லோரையும் வணங்கி விட்டு என்ன சொல்லப் போகிறோம் என்று சொல்லி தொடங்கினார்கள்.

மூன்றாமவர் தன் முறை வந்ததும் மேடை ஏறினார். மைக் முன் வந்ததும் அவருடைய செல்போன் சிணுங்கியது. எடுத்து ஹலோ என்றவர்.

...............ராமனா.......நான் நல்லா இருக்கேன், நீஎப்படி இருக்கே....... இங்கே ஒரே வெயில், அங்கே மழை உண்டா..........சரி குற்றாலம் போனியா, சீசன் நல்லா இருக்காமே.......சரி சரி, நான் அப்புறமா பேசறேன், நான் மீட்டிங்கில் இருக்கேன். அடுத்து நான் தான் பேசணும்
என்று மைக் முன் நின்று பேசினால் ஸ்பீக்கரில் கேட்கும் என்றோ, டிவியில் "Walk when you Talk "னு டாக்டர் சொன்னதாலோ மேடையிலேயே அங்குமிங்கும் நடந்து கொண்டு பேசியவர்
...சரி எழுதிக்கிறேன் என்று, தன் சட்டைப் பையில் பேனா இல்லாமல், இறங்கி முன் வரிசையில் அமர்ந்திருந்த என்னிடம் வாங்கி, தன்னுடன் பேசியவரின் போன் நம்பரை எழுதி, ஓகே, நான் கூப்பிடுகிறேன்னு சொல்லி போனை ஆஃப் பண்ணி பாக்கெட்டில் வைத்தார்.

சபையில் இருந்த எல்லோருக்கும் எப்படி இருந்திருக்கும். ஆனால் இது தற்செயலாக நடந்தது இல்லை. விழா ஆர்கனைசரிடம் முன்பே சொல்லியதால் அஜென்டாவில் அவர் டாபிக் போடவில்லை. சரியாக அவர் மேடை ஏறியதும் கடைசி வரிசையில் இருந்த அவர் ஆள் ஒரு மிஸ்ட் கால் கொடுத்தார். எல்லாம் செட் அப் தான்.

மீண்டும் மைக் முன் வந்தவர், எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும். இன்று நான் பேச வந்தது செல்போன் Etiquette (சரியான தமிழ் வார்த்தை ஒழுங்கு முறை என்று சொல்லலாமா) பற்றி, என்றார். முதலிலேயே என்ன செய்யக் கூடாதுனு செய்து காண்பித்து விட்டு பின் விவரமாக பேசினார்.

பப்ளிக் ஸ்பீக்கிங் என்று ஒரு புத்தகத்தில் பேச தொடங்குமுன் Startle the Audience என்று இந்த ஐடியா சொல்லியிருந்தது. அதை படித்ததும் உண்டான கற்பனைதான்.
எப்படி இருக்கு?

கதையல்ல நிஜம்

Racism ஐ எதிர்ப்பவரா நீங்கள்? இதைப் படிங்க. பிரிட்டிஷ் ஏர்வேஸ்ஸுக்கு ஒரு ஷொட்டு கொடுங்க.

ஜோஹானர்ஸ்பர்கிலிருந்து (காந்தியை ரயிலில் இருந்து பிரிட்டிஷ்காரர் தள்ளிவிட்ட தென் ஆப்பிரிக்கா ஊர்தான்) லண்டன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், எகானமி க்ளாஸில் இருந்த ஒரு 50 வயது வெள்ளைக்காரி ஏர்ஹோஸ்டஸை கூப்பிட்டு, நான் டிக்கெட் புக் செய்த போது யோசித்திருக்க மாட்டீர்கள், இப்போ பார், ஒரு கறுப்பு மனிதனை என் பக்கத்தில் உட்கார வைத்து விட்டீர்களே, என்க்கு வேறு சீட் கொடு என்று கோபமாக சொன்னார்.

ஏர்ஹோஸ்டஸ் மிகவும் பணிவுடன், ஸாரி, எகானமி க்ளாஸில் ஒரு சீட்டும் காலி இல்லை. கொஞ்சம் பொறுங்கள், என்ன செய்யலாம் பார்த்து வருகிறேன் என்று சொல்லி சென்றார். சில நிமிடங்களில் திரும்பி வந்தவர் வெள்ளைக்காரியிடம், பிஸினஸ் க்ளாஸிலும் சீட் இல்லை. காப்டனிடம் சொன்னேன். அவர் ஃபர்ஸ்ட் க்ளாஸில் ஒரு சீட் இருக்கு. ரூல் படி செய்யக்கூடாது ஆனாலும் ஒரு பயணி ரொம்ப வருத்தப் பட்டால் மாற்றி விடுனு சொல்லிட்டார் என்றவள், அந்த வெள்ளைக்காரி பேசுமுன், பக்கத்திலிருந்த கறுப்பு மனிதரிடம், எக்ஸ்யூஸ் மீ ஸார், உங்கள் ஹாண்ட் பாக்கேஜை எடுத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு ஃபர்ஸ்ட் க்ளாஸில் ஒரு சீட் இருக்கிறது என்றாள்

இது வரை பயணி போட்ட சண்டையையும், ஏர்ஹோஸ்டஸ் அதை சாமர்த்தியமாக சமாளித்ததையும் பார்த்துக் கொண்டிருந்த பயணிகள் எழுந்து நின்று கை தட்டினார்கள்.

ஈ மெயிலில் இதை அனுப்பியவர், சில நண்பகளுக்கு ஃபார்வர்ட் செய்யுங்கள். டெலிட் செய்யுமுன் ஒருவருக்காவது சொல்லுங்கள் என்று எழுதி இருந்தார். எத்தனை பேருக்கு சொல்லி விட்டேன்

Sunday, July 26, 2009

நம்மை பழி வாங்க நினைத்தால்........

...இவர்கள் என்ன செய்வார்கள்
ஈ மெயிலில் எனக்கு வந்த தகவல். நீங்களும் பாருங்களேன்







Saturday, July 25, 2009

சூரிய கிரஹணம் பார்த்தீர்களா?

இங்கெல்லாம் பார்க்க முடியவில்லை. இதுதான் இந்த இந்த நூற்றாண்டிலேயே அதிக நேரம் உண்டான கிரஹணமாம்.


.
This combo photograph shows the different stages of the total solar eclipse as seen from two locations on the outskirts of Gauhati, India. The first two photographs were shot from Sipajhar, 31 miles north of Gauhati and the rest were shot from Baihata, 22 miles west of Gauhati. Millions of Asians turned their eyes skyward Wednesday as dawn suddenly turned to darkness across the continent in the longest total solar eclipse this century will see.

courtesy : Chicago Tribune

Wednesday, July 22, 2009

ஒபாமாவுக்கு ஒரே விளையாட்டாப் போச்சு

லேபர் யூனியன், ஹெல்த் கேர், ஜி.எம், என்று பல வேலைகளுக்கு இடையே எங்கெல்லாம் முடிகிறதோ விளையாடுகிறார் பாருங்கள்.








இது என் ஷூதாங்க. விளையாட இதை மாற்றிக்கப்போறேன்

Monday, July 20, 2009

முதல் Anchorman




இந்த பெயர்(டைட்டில்)முதன் முதலில் Walter Cronkiteக்குத்தான் வழங்கப் பட்டது. ஸ்வீடன் தன் நாட்டின் ஆங்க்கர்மேனை Kronkiter என்றும் ஹாலன்டில் Cronkiter என்றும் அவர் பெயராலேயே அழைக்கும் அளவு அவர் டிவி நியூஸ் வாசிப்பதில் புகழ் பெற்றவர்.வால்டர், தன் 92 வயதில், ஜூலை 17, வெள்ளிக்கிழமை காலமானார். 1962 முதல் 1981 வரை பணியில் இருந்தாராம்.


C.B.S டிவியில் அவருடைய ஒழுங்கு, ஸ்டைல், தொழில் பக்தி, செய்தியின் தன்மையை தன் முகத்தில் பிரதிபலிக்க அவர் வாசித்ததை பலரும் நினைவு கொண்டு பத்திரிகையிலும் ஆன்லைனிலும் எழுதுகிறார்கள்.


இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது என்று பூர்ணம் விஸ்வநாதன் 15 ஆகஸ்ட்,1947 அன்று செய்தி வாசித்ததை நம்மால் எப்படி மறக்க முடியவில்லையோ, அதுபோல கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் சுடப்பட்டது, வியட்நாம் வார், வாட்டர்கேட், நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்தது ஆகிய தகவல்களை அவர் சொன்ன விதம் அமெரிக்கர்களால் மறக்க முடியவில்லை.
டல்லஸிலிருந்து நவம்பர் 23, 1963 அன்று வந்த நியூஸ் புல்லட்டினைப் பார்த்ததும் வால்டர், உடனே டிவியில் நடந்து கொண்டிருந்த சோப் ஓபரா நிகழ்ச்சியின் இடையே, கென்னடி சுடப்பட்டார் என்று தழுதழுக்க சொன்னதையும், நீல் நிலவில் இறங்கியதை உற்சாகமாக சொன்னதையும் இன்று எல்லோரும் நினைவூட்டுகிறார்கள். டிவி செய்தி சொல்வது ஒரு என்டர்டெயின்மென்ட் அல்ல, தகவல் சொல்வது என்பதை நன்கு உணர்ந்தவர்.


இன்று, ஜூலை 20, அமெரிக்க சந்திராயன் (அபோலோ 11) சந்திரனில் இறங்கி 40 ஆண்டுகள் ஆனதை கொண்டாட அவர் இல்லை.


வால்டர் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இருந்தாலும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.


ஒரு வாசகர் கடிதம்: நான் இப்போது டிவியில் செய்தி பார்ப்பதோ, ரேடியோவில் கேட்பதோ இல்லை. அவை வெறும் பொழுது போக்குதான். செய்திகளை ஆன்லைனில்தான் பார்க்கிறேன்.

Saturday, July 18, 2009

யு.எஸ் ரிட்டர்ன்ட்

என்னங்க, மணி 7 ஆகுது. 8 மணிக்கு எங்கேயோ போகணும்னீங்களே, எந்திரிங்க என்று தாமரை எழுப்பினாள்.
நான்: இது காலையா? சாயங்காலமா?
அவள்: நாம யு.எஸ்சிலிருந்து வந்து 7 நாள் ஆச்சு. இன்னும் ஜெட்லாக் போகலையா

குளித்ததும் முன்னெல்லாம் ஜவ்வாது பவுடர் பூசிக்குவேன். யு.எஸ்ஸில் டியோடரன்ட் தானே. ஸ்ப்ரே பண்ணி, சட்டை போட்டு சாப்பிட வந்தேன். வேறென்ன இட்லிதான்.
நான்: சட்னி ஒரே ஹாட் ஆக இருக்கே?
அவள்: நீங்கள் குளிக்கப்போகும்போதே தாளித்து விட்டேனே. ஆறியிருக்கும்.
நான்: சூடுன்னு சொல்லலே. காரமாக இருக்கு. ப்ரெட் தந்திருக்கலாம்.
அவள்: பட்டர் இல்லை. வாங்கி வாருங்கள்.

புறப்பட்டதும் பேத்திகள், இன்னிக்கு எங்களுக்கு லீவு. நாங்களும் வருவோம் என்றார்கள்.
சாயங்காலம் போகலாம். நான் வரும்போது உங்களுக்கு candy, cookie எல்லாம் வாங்கி வரேன்னேன்.
ஷிவானி: அதெல்லாம் வேண்டாம். எனக்கு சாக்லேட்தான்.
ஸ்ரீநிதி: எனக்கு பிஸ்கட்.
நான்: நானும் அதான் சொன்னேன். வாங்கி வரேன்

ஆபீஸ் வந்தேன். சோமு(மகன்) புது பஸ்ஸுக்காக சாஸிஸ் கொட்டேஷன் Rs.10,00,000/- காட்டினான். "அடேயப்பா இப்ப 1 மில்லியன் ரூபாயா? இன்னும் பாடி கட்ட 1/2 மில்லியன் ஆகுமே. பஸ்ஸெல்லாம் ஸ்கெஜூல்(schedule) படி ஓடிக்கொண்டிருக்கிறதா? . அப்பா யு.எஸ் ரிடர்ன்ட். கொஞ்சநாள் இப்படித்தான் பேசுவார்னு நினைத்திருப்பான்.

கணேசன் வந்து நான் எழுதித் தந்த லெட்டரைக் காட்டி, தேதி தப்பா இருக்கு. 13 மாதமா என்றான் - 08/13/2009. ஓஹோ, அமெரிக்க ஸ்டைலில் எழுதிவிட்டேன், இந்தா 13/08/2009 என்று திருத்தி தந்தேன். கணேசா, நீ ஜங்ஷனுக்கு தானே போகிறாய். இந்த 2 லெட்டரையும் A to Zeeயில் ஜெராக்ஸ் எடுத்து வா. சார், ஏ டு இஸட் ஜெராக்ஸ் கடைதானே உண்டு என்றான். அதான் அதான், யு.எஸ்ஸில் Z ஐ Zee என்று தான் சொல்வார்கள்.

12 மணிக்கு பாளையங்கோட்டையில் நண்பரைப் பார்க்கப் போனேன். அவர் என்னிடம் பெப்ஸியா, மிரிண்டாவா என்றார். நான் டயட் கோக் கிடைக்குமா. யு.எஸ்ஸில் எல்லோரும் ரொம்ப ஹெல்த் கான்ஷியஸ். அதான் சொன்னேன். திரும்பும் வழியில் சங்கமம் சூப்பர் மார்கெட்டில் அமுல் பட்டர் பாக்கெட்டில் fat % எவ்வளவு என்று பார்த்து, கேன்டி, குக்கி எல்லாம் வாங்கி வீட்டுக்கு வந்தேன்

தாமரை சாப்பிட கூப்பிட்டாள். எனக்கு பசிக்கலை. யோகர்ட் சாதம் மட்டும் போதும் என்றேன். நாம இப்போ இருப்பது இந்தியாவில்தான், நினைவிருக்கட்டும் என்று சொல்லி சாதமும் தயிரும் எடுத்து வைத்தாள்.

மறுநாள் காலை குளித்ததும் கோல்ட் பிடித்து தும்மல் போட்டதும் எக்ஸ்க்யூஸ் மீ என்றேன். ஷிவானி வந்து, தாத்தா, தும்மும்போது ஈஸ்வரா என்று தானே சொல்வாய். தும்முவது தப்பா, எக்ஸ்க்யூஸ்மீங்கிறியே என்று கேட்டாள். இல்லம்மா, யு.எஸ்ஸில் எல்லாரும் இப்படித்தான் சொல்வாங்க.
பார்த்துக்கொண்டிருந்த அவள் அம்மா(மருமகள்)வுக்கு ஒரே சிரிப்பு.

நாகர்கோவிலுக்கு நான் மூன்று நண்பர்களுடன் என் காரில் புறப்பட்டேன். நான் தான் ட்ரைவிங். நேரமாச்சே செமினார் துவங்குமுன் போய் விடலாமா என்றார் ஒருவர். 50 மைல்தானே. இப்ப ஃப்ரீவே 4 லேன் ஆகி விட்டதே. ஒன் அவர் ட்ரைவிங்கில் கூட போய் விடலாம் என்றேன். யு.எஸ்ஸில் ஃப்ரீவேயில் 55 mph லிமிட். நான் போகும்போதே இன்டர்நேஷனல் ட்ரைவிங் பெர்மிட் வாங்கியிருந்தேன். சுசி(மகள்) கைடு பண்ண கார் ஓட்டி, மது ஸ்கூல் 2 மைல்தான், நானே சென்று விட்டு வருவேன். அமெரிக்கர்கள் சாலை விதிகளை எப்படி மதிக்கிறார்கள் தெரியுமா?

இப்படியாக முதல் ஒரு மாதம் யாரிடம் பேசும்போதும் "யு.எஸ்ஸில் எப்படி தெரியுமா", நான் யு.எஸ்.ஸில் இருந்தபோது..." என்றுதான்.

இன்டர்நெட்டில், யு.எஸ் சென்று வந்த இந்தியர்கள் ஒரு மூன்று மாதமாவது என்ன சொல்வார்கள், என்ன செய்வார்கள் என்று ஒரு தகவல்.
என்னையே நான் கற்பனை செய்து பார்த்தேன்.
ஊருக்குப் போனதும் என்ன செய்வேனோ?

Sunday, July 12, 2009

விமானங்கள் பஸ்ஸுடன் போட்டி

சைனாவின் ஸ்பிரிங் ஏர்லைன்ஸ் பயணிகளை ஸ்டான்டிங் பயணிகளாக குறைந்த தூரப் பயணங்களில் தங்களது A320 விமானங்களில் ஏற்றி சென்றால் 40% அதிக பயணிகளை, 20% குறைந்த செலவில் அழைத்துச் செல்ல முடியும் என்று கருதுகிறது.

ஏர் லைனின் பிரெசிடென்ட், சைன டிவி பேட்டியில் சொன்னாராம். இதனால் குறைந்த கட்டணத்தில் பஸ்சில் செல்வது போல செல்லமுடியுமாம். என்ன, சீட் கிடையாது, லக்கேஜ் கொண்டுவரக் கூடாது, சாப்பாடு கிடையாது-தண்ணீர் கூட தரமாட்டோம்..

இந்த ஐடியா கொஞ்ச நாட்களாகவே பரிசீலிக்கப் படுகிறதாம். ஐரோப்பிய ஏர்பஸ் நிறுவனம் சேஃப்டி பெல்ட் எப்படி அமைப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கிறது.

நம்ம ஊரிலும் இப்படி வந்தால் இனி தூத்துக்குடியிலிருந்து மதுரை, மதுரை - திருச்சி, திருச்சி - சென்னை உடனே செல்ல விரும்பும் பயனிகளுக்கு குஷிதான்

Friday, July 10, 2009

ஒரு ஆர்த்தோ சர்ஜன் சொல்கிறார், முயன்று பாருங்களேன்

சில வினாடிகள் செய்யுங்கள். திரும்ப திரும்ப முயன்றாலும் முடியாது.


1. கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வலது காலை சிறிது தூக்கி clockwise ல் சுற்றுங்கள்
2. காலை சுற்றியபடி வலது கையால் எண் 6 காற்றில் எழுதுங்கள்.
காலும் சுற்றும் வசம் மாறும்.

நீங்கள் என்ன செய்தாலும் கால் சொன்னது கேட்காது. இது உங்கள் மூளையில் முன்னேயே ப்ரோக்ராம் செய்யப்பட்டது.

ஈ-மெயிலில் இன்று எனக்கு கிடைத்த தகவல்

Thursday, July 9, 2009

துணிக் கடைகளில் என்ன நடக்கிறது?

மகாராணிகளே, கஜானா ஜாக்கிரதை..




Aaddi தள்ளுபடி

Wednesday, July 8, 2009

ஓட்டாத கார் இல்லை, இதுதானே பாக்கி

அநேகமாக எல்லா கார்களும் ஓட்டியிருக்கிறேன். இந்த காரை சிகாகோ Six Flags தீம் பார்க்கில் ஒரு ரவுண்ட் ஓட்டினேன்.



மேட்டுப்பாளையம், கன்னியாகுமரி, கொச்சின் இங்கெல்லாம் தீம் பார்க் உண்டு. நான் எங்கும் போனதில்லை. இங்கேதான் முதலில் பார்த்து பிரமித்து விட்டேன்.




என்ட்ரி டிக்கெட் 15 டாலர். நுழைவு வாயிலில் நம் பைகளை திறந்து பார்க்கிறார்கள். உள்ளே நிறைய ரெஸ்டாரண்ட். அதனால் நாம் வீட்டில் ஏதாவது செய்து, கொண்டு போகக் கூடாது என்கிறார்கள். சரிதானே. அங்கங்கே dust binகள் உள்ளதால் வழியெங்கும் சுத்தமாக இருக்கிறது.
கார் பார்க்கிங் சார்ஜ் 15 டாலர். எத்தனை கார்கள் நிற்கின்றன பாருங்கள். ஒரு காரில் நாலு பேரென்றாலும் எத்தனை பேர் இந்த நிமிடம் உள்ளே இருப்பார்கள். week endல் எப்படி இருக்கும்.

தீம் பார்க்கில் எந்த விளையாட்டுக்கும் தனி சார்ஜ் கிடையாது. மதுமிதா உற்சாகமாக எல்லாவற்றிலும் விளையாடினாள்.










ரோலர் கோஸ்டரில் மட்டும் நாங்கள் விடவில்லை. அவளுக்கு துணையாக நாமும் போகலாம் என்றால் எங்களுக்கு பயம். "ஆ.......", "ஓ......" என்று கத்திக்கொண்டு ( அப்போதுதான் பயம் இருக்காதாம்) கோஸ்டரில் செல்வதை பார்க்க நன்றாக இருந்தது.



என்னிடம் இப்படி பறக்கும் பஸ் கிடையாது

மதுவும் பாபுவும் ரயிலில்






இந்த Sky Trek Tower ல் உள்ள ரிங் சுற்றிக்கொண்டே மேலே வரை சென்று நமக்கு சுற்றிக்காட்டி இறங்குகிறது. அங்கிருந்து எடுத்த படங்கள்.