Tuesday, November 26, 2013

          "பூப்பூவா பூத்திருக்கு.........

பூமியிலே ஆயிரம் பூ,  பூவிலே சிறந்த பூ

என்ன பூ?........."

 என்று அறிய, நாட்டார் வழக்காற்றியல் துறையும் அத்துறையின் ஆய்வு மையமும் தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியும் இணைந்து, பள்ளிகளுக்கான கிராமியக் கலைப் போட்டிகளை சவேரியார் கல்லூரியில் நடத்தினார்கள்  . இரண்டு நாட்களாக நடக்கும் "கிராமியம்- 2013" நிகழ்ச்சிக்கு இன்றுதான் என்னால் போக முடிந்தது.

 குழுப் பாடல், கதை சொல்லல், தனிப் பாடல்,கோலம், குழு நடனம், குறு நாடகம், மாறுவேடம் என்று பல போட்டிகள்.






கோலப்போட்டியில் பையன்களும் கலந்து கொண்டு ரங்கோலி வரைந்து வண்ணப்போடிகள் தூவினார்கள். கோலம் என்றால் எனக்கு புள்ளி வைத்துபோடுவதுதான் கோலம்.



புள்ளி கோலம் போட்ட பெண்ணிடம், "என் அம்மா போட்ட கோலம் மாதிரி இருக்கு" என்றேன். அவளுக்கு ஒரே சந்தோஷம்.

   பங்கேற்ற பள்ளி அணிகளுக்கு பூக்களின் பெயர்கள் தந்திருந்தார்கள். நடுவர்களுக்கு  எந்தப் பள்ளி  என்று  தெரியக்கூடாது  என   அணிகளுக்கு பெயர்கள்  அல்லது   1,2,3   என்று நம்பர்களாக   குறிப்பிடுவது    வழக்கம்

அல்லி,  தாமரை,  தாழம்பூ,  வாடாமல்லி,  மகிழம்பூ,  கனகாம்பரம்,  சூரியகாந்தி,  சங்குபுஷ்பம்,  பிச்சி,  சாமங்கி,  மனோரஞ்சிதம்,  செம்பருத்தி, நித்யகல்யாணி,  மகரந்தம்,  ரோஜா,  நீலாம்பரி,  அந்திமந்தாரை,  பூவரசு.

 ஆகா, இத்தனை பூக்களா? அமைப்பாளர்களின் ரசனைக்கு என் பராட்டுக்கள்.
  இன்று மாலை 4 மணிக்கு  சிறந்த மூணு பூக்களுக்கு, முதல், இரண்டாம்,      மூன்றாம் பரிசுகள் தருவார்கள்

   என் கல்லூரிக்குள் நுழைந்ததும் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது.

1962ல் இப்படி இருந்த நான் இப்போ எப்படி ஆயிட்டேன்னு பாருங்க. சினிமாவிலே ஃப்ளாஷ்பேக் என்றால்  B/W தானே. எதிரில் படி ஏறி வந்த மாணவனிடம் கேமரா தர, அவன் எடுத்த படம்

Monday, November 25, 2013

செந்தமிழ் தேன்மொழியாள்

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் தவறாமல் பார்க்கிறேன். குழந்தைகள் எல்லொரும் ரொம்ப அழகாக பாடுகிறார்கள்.. 

இன்று உன்னி கிருஷ்ணன் டீமில் வந்த சோனியா, சர்த் சந்தோஷ், சாயி விக்னேஷ் மூவருமே தாங்கள் தேர்வு செய்த பாட்டை அழகாக பாடினார்கள்.

"வான் நிலா" பாட்டில் வயலின் வாசித்தவரை, சிறப்பு விருந்தினர் வயலினிஸ்ட் சீனிவாசன் பாராட்டி 1978ல் தான் சென்னை வந்த புதிதில் எஸ்.பி.பாலசுப்ரமணியனுடன் ஒரு மேடைக் கச்சேரில் அந்த் பாட்டுக்கு தான் வயலின் வாசித்ததை சொன்னார்."

"செந்தமிழ் தேன்மொழியாள்" என்று சாயி விக்னேஷ் பாடியதும் , சீனிவாசன் பாராட்டி, படத்தில் பாடியது திருச்சி லோகநாதன் தானே என்று கேட்க விக்னேஷ் ஆமாம் என்று சொன்னான். அனந்த் சார் உடனே அது மாலையிட்ட மங்கை படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் பாடியது என்று சொல்வார் என்று பார்த்தேன். இல்லையே.

ஆர்கெஸ்ட்ராவில் எல்லோருமே அழகாக வாசிக்கிறார்கள். புல்லாங்குழல், வயலின், தபேலா வாசிப்பை முக்கியமான இடங்களில் கேமரா காட்டுவது ரொம்ப அழகு

Sunday, November 24, 2013

கிட்டிவல் (Kiddival)

ஆண்டு தோறும் நடக்கும்  LKG முதல் 5ம் வகுப்பு  குழந்தைகளுக்கான போட்டி நேற்று சாரா டக்கர் கல்லூரியில் நடந்தது

குழந்தைகளின் வயது, திறமைக்கு ஏற்றவாறு
திருக்குறள் ஒப்பித்தல்,  க்ரேயான் கலரிங்,  ஆங்கிலம்/தமிழில் பேச்சுப் போட்டியும்  கையெழுத்து போட்டியும்,  பெயிண்டிங்,  வாய்ப்பாட்டு
வாத்திய இசை,   பரதநாட்டியம்,  குழு நடனம்,
ஃபாஷன் - பாய்ஸ்/கேர்ல்ஸ்  என்று பல போட்டிகள்.



1600+ மாணவ மாணவிகள், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களிலிருந்து ந்து அசத்தினார்கள்.

காலை 9 மணிக்கு சீதாலக்ஷ்மி விஸ்வநாதன் அவர்கள்  தொடங்கி வைக்க, மாலை வரை நடந்த போட்டிகளில் சங்கர்நகர் ஜெயேந்திரா கோல்டன் ஜூபிலி, , இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மெட்ரிக், வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளிகள் முதல் மூன்று பரிசுகளை பெற்றன.
எல்லா போட்டிகளிலும் நாலாவது  மார்க் வாங்கிய  குழந்தைகள்.  ஆறுதல் பரிசாக ஒரு கப் பெற்றார்கள்.  பரிசளிப்பு விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத் துணைவேந்தர் திரு.ஏ.கே.குமரகுரு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்தி பேசினார்


குழந்தைகள் மேல் அளவற்ற பாசம் கொண்ட Rm.K..விஸ்வநாதன் 24 ஆண்டுகள் முன்பு தொடங்கிய கிட்டிவலை தொடர்ந்து, அவர் தம்பிகள் திருநெல்வேலி வெஸ்ட்,திருநெல்வேலி வேணுவனம் ரோட்டரி கிளப் மெம்பர்களுடன் சேர்ந்து நடத்துகிறார்கள்.


ஆர்ரெம்கேவி நிர்வாகிகள் திரு.கே.மகேஷ் கோவையிலிருந்தும், என்.மாணிக்கவாசகம் சென்னையிலிருந்தும் வந்திருந்தார்கள்.

க்விஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் வரிசையில் இருந்த என்னை பார்த்த  க்விஸ் மாஸ்டர் திரு ஜான் சுதாகர், இவர்தான் என் முதல் க்விஸ் மாஸ்டர் என்று என்னை அவைக்கு அறிமுகம் செய்தார். 1982ல் நான் நடத்திய க்விஸ்ஸில் அவர் முதலாக கலந்து கொண்டதை நினைவு கூர்ந்தார்