Friday, June 19, 2009

கொஸ்டின் பேப்பர் அவுட் ஆயிருச்சு

என்னை யாராவது 32 கேள்விகளுடன் அழைப்பார்கள் என்று பார்த்தேன்.. பிரதாப் பெஸ்கி தன் பதில்கள் எழுதிவிட்டு, . வேற யாரையும் கூப்பிடும் அளவு பழகலே என்றார். பழகலாம் வாங்கனு எழுத நினைத்தேன். அப்புறம் மதுமிதா தன் தொடரில் யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்று சொல்லிவிட்டார். அப்போ கேள்வி வெளியான மாதிரிதானே. அதான் தொடர்கிறேன்.

1. உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

சகாதேவனா? ஐந்து சகோதரர்களில் நான் கடைக்குட்டி என்பதால் நானே வைத்துக்கொண்ட புனை பெயர்.

பி யு சி முதல் க்ளாஸில் தமிழ் ஆசிரியர் திரு.ஜகந்நாதன், மாணவ்ர்களை சுய அறிமுகம் செய்து கொள்ள சொன்னார். என் பேரைக் கேட்டதும், 'வடிவேல் முருகன் - அழகான பெயர்' என்றார்.

பள்ளியில் என் ஆசிரியர் நான் சேட்டை பண்ணினேன் என்று, 'நீ வெடிவால் முருகன் ' என்றார். அதுதான் வலைப்பூவுக்கு பெயர்.


2. கடைசியாக அழுதது எப்போது?

சினிமாவில் உருக்கமான காட்சிகளில் கூட கண்கள் பனிப்பது உண்டு.

3. உங்கள் கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

அப்ஸரா பென்சில் விளம்பரத்தில், கணக்கில் கையெழுத்துக்காக 105/100 வாங்குவானே, பார்த்தீர்களா?
நான் 3 வது ஃபார்ம் படிக்கும்போது ஹிந்தி உண்டு. வகுப்பு பரீட்சையில் 10 கேள்விகளையும் அப்படியே எழுதினேன். ஹிந்தி பண்டிட் திரு சர்மா, உன் அழகிய கையெழுத்துக்காக 8/100 மார்க்னு சொல்லி என் விடை(?) பேப்பரை தந்தார்.

4. பிடித்த மதிய உணவு என்ன?

மிளகுடன் முருங்கைக்காய் அல்லது பிஞ்சு கத்திரிக்காய், முருங்கைக்கீரை போட்டு வீட்டில் குழம்பு செய்வார்கள். புளியில்லாக்கறின்னு பேர். அது ரொம்ப பிடிக்கும். ரெசிபி வேணுமா? தாமரையை கேட்டு எழுதுகிறேன்.

5. நீங்கள் வேறு யாருடனும் உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

இப்பத்தான் பழகலாம் என்று பெஸ்கியை அழைத்திருக்கிறேன். நட்புக்கு வயது தடை இல்லையே. வலை நண்பராக வச்சுக்குவேன்

6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்க பிடிக்குமா?

ஷவரும் அருவிதானே.

7. முதலில் ஒருவரை பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

நடை, உடை, பாவனை. இதைத்தான் பாடி லாங்வேஜ் என்பார்களோ?


8.உங்க கிட்டே உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காதது என்ன?

எல்லோருக்கும் பிடித்தவனாக இருக்க நினைப்பது. ஆனால் முடிய வில்லை. பிடிக்காதது, எதையும் உடனுக்குடன் செய்யாதது. Procrastination.

9. உங்க சரிபாதி கிட்டே உங்களுக்கு பிடித்த விஷயம் எது. பிடிக்காத விஷயம் எது?

சரி பாதியா? நல்ல பாதி- better half. அவளுக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். பிள்ளைகளை வளர்த்தது போலவே பேரன்பேத்திகளை கவனித்துக்கொள்கிறாள். பிள்ளைகளை சாப்பிட வைப்பது போலவே எனக்கும் சாதம் பரிமாறும்போது சண்டைதான்.

10. யார் பக்கத்தில் இல்லாததற்கு வருந்துகிறீர்கள்?

நான் நினைப்பவர்கள் எல்லோரும் என் பக்கத்தில்தான் (மனதில்) இருக்கிறார்கள்

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்

நான் வீட்டிலிருந்துதான் எழுதுகிறேன். வேஷ்டி, நீலச்சட்டை.

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்கிறீங்க?

பேத்தி மதுமிதா டிவி பார்க்கிறாள். தாமரை யு ட்யூபில் சங்கீதம் கேட்கிறாள்.
நான் டிஸ்னி சானல் பார்த்து, ராதா ஜயலக்ஷ்மி பாடும் 'பண்டு ரீதி..' கீர்த்தனை கேட்டுக்கொண்டு எழுதுகிறேன். நான் எப்பவும் பேப்பரில் எழுதி, திருத்தி, எடிட் பண்ணித்தான் டைப் செய்வேன்.

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

என்ன கலர் பிடிக்கும் என்று நேராக கேட்டிருக்கலாம். மெல்லிய க்ரே(சிமெண்ட் கலர் சொல்லலாமா) எப்ப சட்டை பாண்ட் துணி வாங்கினாலும் இந்த கலரில் ஒன்று எடுப்பேன்.

14. உங்களுக்கு பிடித்த மணம்

புது புத்தக மணம்

15. நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? அவர்களை ஏன் பிடிக்கும்? அழைக்க காரணம் என்ன?

அ) நானானி - நான் ப்ளாக் எழுத ஆரம்பித்ததே அவரது ஆர்வம் பார்த்து தான்.
ஆ) கோமா - எதையும் எட்டி யோசித்து எழுதுபவர்.
இ) ராமலக்ஷ்மி - என் அம்மா பெயர். நல்ல எழுத்தாளினி
மூவரும் என் பதிவுகளில் தவறாது பின்னூட்டம் எழுதுவார்கள்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் பிடித்த பதிவு எது?

கொஸ்டின் அவுட் ஆக்கிய பெஸ்கி, மதுமிதா( என் பேத்தி பேரும் அதுதான்) பதிவுகளை இனி படிக்கணும்

17. உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?

இப்பல்லாம் இன்டோர் தான். SCRABBLE ரொம்ப பிடிக்கும். என் அண்ணன் மகளை இன்னும் ஜெயிக்க முடியவில்லை

18.நீங்கள் கண்ணாடி அணிபவரா?

படிக்கவும் எழுதவும் தேவை.

19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

ஆனந்தம், ஆஹா மாதிரி குடும்பப் பாங்கான கதை உள்ள படங்கள்

20. கடைசியாக பார்த்த படம் எது?

தியேட்டரில் பார்க்கத்தான் பிடிக்கும். இரண்டு நாள் முன்னால் டிவியில் சரத்குமார் நடித்த அரசு பார்த்தேன். கடைசியில் 'தியேட்டரில் பார்த்ததற்கு நன்றி' என டைட்டிலில் வந்தது.

21. உங்களுக்கு பிடித்த பருவ காலம் எது?

நம்மூரில் எல்லாம் HOT, HOTTER, HOTTEST என்று மூன்று பருவங்கள்தானே?

22. இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் எது?

மதுமிதாவுடைய Tinkle Digest புத்தகங்கள். தந்திரி-மந்திரி கதை நல்லாவே இருக்கு.

23. உங்கள் டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?

தெரியாது. கம்ப்யூட்டர் பள்ளியில் முதியோர் கல்வி உண்டா என்று கேட்டு இப்போதான் சேர்ந்தேன். D T P படிக்க ஆசை.

24. உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பாம் பாம் என்று அடிக்கும் கார் ஹார்ன். எங்க தாத்தா கார் டிரைவர் ராமலிங்கம் பிள்ளை தேவையான போது மட்டுமே பாம் பாம் என்று அழகாக அடிப்பார். பிடிக்காதது இப்போது பா.............ம்...ம் என்று பஸ்களில் கேட்கும் கதைத் துளைக்கும் ஏர் ஹார்ன்

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

தி-லி டு சிகாகோ

26.உங்களுக்கு தனித்திறமை ஏதாவது இருக்கிறதா?

அப்படி சொல்லும்படி ஏதுமில்லை. சுமாராக படம் வரைவேன்

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியத ஒரு விஷயம்

கம்ப்யூட்டர் வந்தால் ஆபீசில் 10ல் 4 பேருக்கு வேலை போய்விடும் என்று முதலில் பயந்தார்கள். இப்போ எல்லா துறைகளிலும் திறமை உள்ளவர்களுக்கு வேலை இல்லாமல் போய்க் கொண்டிருப்பது. டிஜிட்டல் கேமரா வந்ததும் ஸ்டூடியோக்களில் டெவலப் செய்தவர்கள், ப்ரிண்ட்/என்லார்ஜ்மெண்ட் போட்டவர்கள். ஃப்ளெக்ஸ் வந்ததும் ஹோர்டிங்-ல் படம் வரைந்தவர்கள், எழுதியவர்கள். இப்படி எத்தனை பேர்.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்

சாதுதான் நான்.

29. பிடித்த சுற்றுலா தலம்.

எல்லா தலங்களும் பிடிக்கும்

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்படியே இருந்தால் போதுங்க.

31. மனைவி/கணவர் இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்

ஒரு ரவுண்ட். காரில்தாங்க. நண்பர்களை பார்க்க போவேன்

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.

தீபா வெங்கட் அன்று ராணி, மகா ராணி நிகழ்ச்சியில் சொன்னார்.

Life is the most wonderful gift. Make the most of it.

இ மெயிலில் வந்த வரிகள்.

10% of life is made up of what happens to you. 90% of life is decided by how you react.

ஒருவரை பேட்டி எடுக்கும் போது அந்த நபர் ஒரு கேள்வியை, 'இது நல்ல கேள்வி' என்று தவறாமல் சொல்வார். 32 கேள்விகளுமே நல்ல கேள்விகள். பதிவரின் குணம், விருப்பு வெறுப்புகள், ரசனை, என்று எல்லாம் சொல்ல வைக்கின்றன. தொடரை தொடங்கியவருக்கு பாராட்டுக்கள்.

Wednesday, June 17, 2009

பீலியெய் சாகாடும்...........மிகுத்துப் பெயின்

மயிலிறகுதான் என்றாலும் அதை அளவுக்கு மேல் ஏற்றினால் வண்டி அச்சு முறிந்து விடும் என்ற வள்ளுவர் (குறள் 475) சொல்லைக் கேட்காமல் வைக்கோல் லோடு ஏற்றிச் செல்லும் நம்மூர் லாரியின் படம், கோமா தன் பதிவில் ( valluvam-rohini.blogspot.com அதையும் பாருங்கள் ) விட்டிருந்தார்.



கன்டெயினர் லாரியிலிருந்து எடுத்தது போலிருக்கும் இந்த வைக்கோல் லாரியைப் பார்த்ததும் படம் எடுத்தேன். இது சிகாகோவிலேங்க. வள்ளுவர் சொல்லை அமெரிக்கர்கள் எப்படி கேட்கிறார்கள் பாருங்கள்.


Tuesday, June 16, 2009

கிரியேட்டிவ் ஹெட்களே கொஞ்சம் மாத்தியோசிங்க

உறவுகள், கல்யாணம், திருமதி செல்வம், மெட்டி ஒலி, மகள், கண்மணியே, வசந்தம், திருப்பாவை. பெயர்கள் எல்லாம் மங்களகரமாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த மெகா சீரியல் எல்லாத்திலும் குடும்பச்சண்டை, பழிவாங்கல், பொறாமைதான் தீம்.

நான் ஊரில் இருக்கும்போது சீரியலே பார்க்கமாட்டேன். டிவியில் நியூஸ், சினிமா பார்ப்பேன். ஒரு மாதமாக சிகாகோவில் மகள் வீட்டில், பேரன், பேத்தி, ப்ளாக், டிவி நியூஸ் சன்/சி.என்.என் என்று இருந்தாலும் சன் டிவியில் சீரியல் பார்க்க பழகிவிட்டேன். என் இரண்டு வயது பேரன், சன் டிவி பார்க்கையில் சேனல் மாத்தவே விட மாட்டான்.பாடல் காட்சிகளுடன் டைட்டில் ஓடும்போதுதான் திரையில் எல்லோரும் சிரிக்கிறார்கள். சில சீரியலில் அதிலும் சண்டையும் கோபமும்தான்.


உறவுகளில் கிருஷ்ணனை (ஆஹா படத்தில் ஸ்ரீராமை, உதவாக்கரை,உதவாக்கரை என்று அப்பா திட்டுவது போல) தினம் தற்குறி, தற்குறி என்று அவர் அப்பா திட்டுகிறார். அண்ணன் முகுந்தனுக்காக காயத்ரியை பெண் பார்க்க கிருஷ்ணன் போய் அவளிடம் ( படித்தால் மட்டும் போதுமா சிவாஜி அண்ணனுக்காக பார்க்கச் சென்று ராஜசுலோசனாவிடம் பேசியதுபோல) தட்டுத்தடுமாறி ஆங்கிலம் பேசினார்.


அண்ணன் முகுந்தனோ (ப.ம.போதுமா அண்ணன் பாலாஜி மொட்டைக்கடிதம் எழுதியது போல)தன்னைப் பற்றி விசாரிக்கும் பெண்ணின் அப்பாவிடம், கெட்டவன் என்று டீக்கடைக்காரரை சொல்ல வைக்கிறார். கடைசியில் கிருஷ்ணனுக்கும் காயத்ரிக்கும் ( ப.ம.போதுமா சிவாஜி-ராஜசுலோசனா போல) இன்று கல்யாணம் ஆகிவிட்டது.

கிரியேட்டிவ் ஹெட்களே கொஞ்சம் மாத்தியோசிங்க.

ஊரில் சீரியல் நடக்கும் நேரத்தில் யார் வீட்டுக்கும் செல்ல முடிவதில்லை. அவர்களுக்கு தொந்திரவு வேண்டாமே என்று ஃபோன் பண்ணி, ஃப்ரீயான்னு கேட்டுத் தான் போவேன்.


தூர்தர்ஷன் மட்டும் இருந்த நாளில் நான் பார்த்த சீரியல்கள், பத்திரிகை தொடர்கதை போல வாரம் ஒருநாள்தான். பாலச்சந்தரின் 'ரயில் சினேகம்' (நி.ரவி-இந்திரா), 'பெண்' என்று வாரம் ஒரு பெண்ணின் வெற்றிக் கதையை சுகாசினி இயக்கி வந்தது. 'பரமார்த்தகுருவும் சீடர்களும்' சீரியலை விடியோ காஸட்டில் ரிகார்ட் செய்து அடிக்கடி பார்ப்பேன். நல்ல காமெடி.


பத்திரிகைகளில் ஒருபக்கக் கதை வருவது போல அரைமணி நேரக்கதை என்று தினம் ஒரு கதை படமாக்கலாம். தனி காமெடி, குழந்தைகளுக்கான சீரியல் என்று வகைப் படுத்தி எடுத்தால் எல்லா சீரியலும் மகா சீரியல்தான்

Monday, June 15, 2009

இப்போ வீட்டிலே கிடைக்கும்

மெல்லிய சருமம், புன்னகை, தன்னம்பிக்கை எல்லாம். இதையெல்லாம் பெண்கள் வெளியே வாங்கிக் கொண்டிருந்தார்களா? முன்பு அம்மா சொல்லியபடி குளித்து மஞ்சள் பூசி, வாரம் இருமுறை எண்ணை தேய்த்து சியக்காய் போட்ட போதும் மேலே சொன்னதெல்லாம் பெண்களுக்கு வீட்டிலேயே கிடைத்ததே.

டிவியில் ஒரு விளம்பரம். வீட்லே கிடைக்கும். VEET புதிதாக வந்த ஒரு க்ரீம்.
எத்தனை க்ரீம், ஷாம்பூ, எத்தனை டூத் பேஸ்ட்?

உங்கள் டூத் பேஸ்டில் உப்பு இருக்கா? விமானத்துக்குள்ளே காமிரா, வீடியோவுடன் ஒரு பெண் வந்து பயணியிடம் கேட்டார். அடுப்புக்கரியில் உப்பை பொடித்து கலக்கி அம்மா/பாட்டி தந்தார்கள் பல் தேய்க்க.