Friday, May 8, 2015

   09/05/2015. இன்று எங்கள் அப்பா  நினைவு நாள்,

 அப்பாவை சந்தோஷமாக வைத்திருந்தால் அப்பாவும் நம்மை சந்தோஷமாக வைத்திருப்பார் என்று டெலிபோன் விளம்பரத்தில் பார்த்தோம்.
    அப்பாவை நாங்கள் சந்தோஷமாக வைத்திருந்தோமா தெரியலை. ஆனால் அவர் எங்கள் எல்லோரையும் மிக சந்தோஷமாகவே வைத்திருந்தார்.
 தன் மணிவிழாவுக்கு முன்னே மறைந்த அம்மாவை நினைத்து சோர்ந்து விடாமல் பிள்ளைகள் படிப்பு, கல்யாணம் எல்லாம் பார்த்து பார்த்து செய்து வைத்தார்.
    பெளர்ணமி அன்று இரவு ஆபீஸிலிருந்து வந்ததும் குளித்து விட்டு,  ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்வார்.பேரக்குழந்தைகளிடம் பிரியமாக விளையாடுவார்.
      டி.வி.எஸ் அதிபர்கள், ராஜம், கிருஷ்ணா, ரத்னம், ராமச்சந்திரன், யாரும் திருந்நெல்வேலி வந்தால் அவர்கள் வீட்டுக்கு வந்து சந்திப்பதோ, அப்பா டி.வி.எஸ் போய் பார்ப்பதோ தவறியதில்லை. புதிய மாவட்ட கலெக்டர் வந்து பதவி ஏற்ற அன்றே அவரை சந்திப்பார்.
      நெல்லை சங்கீத சபா, மெசானிக் லாட்ஜ், ரோட்டரி க்ளப், போன்ற அமைப்புகளில் தலைவர் செயலர் பதவிகள் வகித்து திறம்பட நடத்தினார்..
        அவர் நினைவில் வாழும்,
 
        சுப்பிரமணியன், பொன்னம்மாள், வடிவேல்முருகன், கல்யாணி . 

.


.

.