Saturday, October 24, 2009

உட்கார்ந்து யோசிக்க முடியலையே

நானும் நிறைய எழுத நினைக்கிறேன்.


உட்கார்ந்து எழுதலாம்னு வந்தா இந்த நாற்காலியே ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறது





இது எப்போ முடிக்க, நான் உட்காரன்னு தெரியலே. மாதப்பத்திரிகை ஒன்றில் என்னை கவர்ந்த விளம்பரம்.

Thursday, October 22, 2009

"எனை ஆளும் மேரிமாதா துணை நீயே மேரிமாதா

மிஸ்ஸியம்மா படம் பார்த்திருக்கீங்களா? இன்று கே டிவியில் பார்த்தேன்.
உடனே உங்களுக்கு, "பிருந்தாவனமும் நந்தகுமாரனும்.." ஞாபகம் வரும்.
அதில் எல்லா பாட்டுக்களுமே நன்றாக இருக்கும்.

ஜெமினியும் சாவித்திரியும் வேலை கிடைக்காமல் ஒரு பள்ளிக்கூடத்திற்கு ஆசிரிய/யை வேண்டும். தம்பதிகளாக இருக்கவேண்டும் என்ற விளம்பரத்தை பார்த்து இருவரும் வந்து, அப்படி சொல்லி சேர்ந்து கொள்வார்கள். பள்ளி நடத்தும் எஸ்.வி.ரெங்காராவின் மகள் மகாலக்ஷ்மிதான் மேரியாக கிறிஸ்துவ தம்பதியிடம் வளர்ந்தவள். தங்கவேலுதான் அதை கண்டுபிடிப்பார்.
நல்ல சிரிப்பு படம். நிறைய அருமையான பாடல்கள்.
படத்தில் சாவித்திரி (பி.லீலா பின்னணி) பாடும் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

"எனை ஆளும் மேரிமாதா
துணை நீயே மேரிமாதா, என்றும்
துணை நீயே மேரிமாதா

பரிசுத்த ஆவியாலே
பரபுத்ரன் ஈன்ற தாயே
பிரபு யேசுநாதன் அருளால்
புவியோடு புனிதம் அடைந்தாய்
எனை ஆளும் மேரிமாதா...

நெறி மாறி வந்ததாலே
நகைப்பானதே என் வாழ்வே
கணமேனும் சாந்தி இல்லையே
அனுதினமும் சோதியாதே
எனை ஆளும் மேரிமாதா...." .