Thursday, September 30, 2010

அக்டோபர் 2 அன்று பிறந்த இருவர் பெயர் பெற்றவர்கள்

அக்டோபர் 1 - இன்று பிறந்த இவருக்கு கிட்டத்தட்ட 290க்கு மேல் பெயர்கள்.

எல்லா பெயர்களையும் எழுத ஆசைதான். நினைவில் உள்ள பெயர்களை எழுதுகிறேன். பாக்கியை நீங்கள் சொல்லுங்களேன்.

குணசேகரன், பரந்தாமன், மனோகரன், சுந்தராங்கதன், பார்த்திபன், விக்ரமன், அம்பிகாபதி, கட்டபொம்மன், ரஹீம்,சிதம்பரம், சுந்தரம்பிள்ளை, சண்முகசுந்தரம், கன்னையா, காளிதாஸ், பத்மநாபன், ரெங்கன், பாபு, பரதன், கோபிநாத், ப்ரேம்நாத், ரெங்கதுரை,

சில சந்தர்ப்பங்களில் ஒரு மூன்று மணி நேரத்தில் இரண்டு, மூன்று, நான்கு, ஏன் ஒன்பது பெயர்கள் கூடப் பெற்றிருக்கிறார். அப்பா விழுப்புரம் சின்னையாவும் அம்மா ராஜாமணி அவர்களும் இவருக்கு இட்டது பிள்ளையார் பெயர்.

21/07/2001ல் மறைந்த இவர் பிறந்தநாளை தமிழ்நாடு முழுதும் இன்று நினைவு கூர்ந்து விழா நடக்கும்.

4 comments:

ராமலக்ஷ்மி said...

சிவாஜி கணேசன்!

goma said...

வித்தியாசமான ஒரு பிறந்தநாள் வாழ்த்து.

அவர் பெயரில் ,எனக்குப் பிடித்த பெயர்,
பூங்காற்று திரும்புமா என்று பாடியவர்

சகாதேவன் said...

கண்டுபிடிச்சுட்டீங்களே ராமலக்ஷ்மி.

//பூங்காற்று திரும்புமா பாடியவர்//
பார்த்தீங்களா கோமா. அத்தனை பெயர்களும் ஞாபகமில்லை

நானானி said...

இது ராமலக்ஷ்மி மாதிரி ஆட்களிடம் கேட்க வேண்டிய கேள்வி.

ஆனாலும் நல்ல ரூட் எடுத்து ’ஏ வழி தனி வழி’ என்று காட்டிவிட்டீர்கள்!
சபாஷ்!!!