Wednesday, February 16, 2011

மெய் மறந்தேன் ராஜா

வினாடிகள் மட்டும் ஓடும் டிவி விளம்பரங்கள் சில நம்மை மெய் மறக்க வைக்கின்றன.
ஜுவல்லரி விளம்பரத்தில் அந்த பெண் கோவிலில் பாடிக்கொண்டிருக்கிறாள். அழகாக கம்பீரமாக நடந்து வரும் இளையராஜா -மெய் மறந்தேன் கண்ணா- என்று முடிப்பார். தன்னை வணங்கும் அப்பெண்ணை ஆசீர்வதித்து ஆட்டோகிராப் போடுகிறார். நிஜமாக நான் மெய் மறந்தேன். இந்த வார குமுதத்தில் டைரக்டர் கிருஷ்ணா ராஜா தன்னிடம் எனக்கு எதற்கு மேக்கப். கறுப்பு போதாதா என்றும் கேமரா கோணங்கள் பற்றியும் கேட்டாராம். பாட்டும் ராஜாதான் எழுதினாராம். ஒளிப்பதிவு P.C.Sriram.

.

வீட்டு மொட்டை மாடியில் ஆவலுடன் காத்திருக்கும் சிறுமி கார் வருவதைப் பார்த்து இறங்கி ஓடி வருகிறாள். புதிய நானோவைப் பார்த்ததும் அவள் பிரமிப்பதும் தங்கள் காரை எல்லோரும் பார்க்கிறார்களே என்று தன் கண்ணில் இருந்து கண்மை எடுத்து காருக்கு திருஷ்டிப் பொட்டு வைக்கிறாள். அருமையான நடிப்பு.
அப்போ எனக்கு எட்டு வயது. எங்கள் வீட்டுக்கு புது கார் இன்று டிவிஎஸ்ஸிலிருந்து வரும் என்று அப்பா சொன்னார். அந்த கார் வரும் வரை நான் வாசலில் காத்திருந்த நினைவுதான் வந்தது.

3 comments:

goma said...

அழகான சின்னச் சின்ன நிகழ்சிகளை ஆழமாக அனுபவித்து எழுதிருக்கிறீர்கள் .

நானானி said...

அது எந்த கார்?
1950-ல் எது வந்தது...ம்ம்?

சகாதேவன் said...

நன்றி கோமா. சினிமா தவிர விளம்பரங்கள் விரும்பிப் பார்ப்பேன். அப்பா பஜ்ஜி தர சிறுமி அம்மாவைப் பார்ப்பாளே (நோ டென்ஷன்) குழந்தைகள் எல்லோரும் நன்றாக நடிக்கிறார்கள்.

வாங்க நானானி.1948ல் வந்த அந்த கார்-ஷெவர்லெ ஃப்ளீட்மாஸ்டர்.