Tuesday, September 4, 2012

செப்டம்பர் 5 - இன்று ஆசிரியை தினம்

சமீப காலமாக ஆசிரியர்களைப் பற்றிய செய்திகளைப் படித்ததனால் என்ன எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். 5/9/2012 ஆனந்தவிகடன் இதழ் பார்த்தீர்களா? ஆசிரியர் தகுதி தேர்வில் 6,72,204 பேர் பரீட்சை எழுத 2,448 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றார்களாம். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெண்கள். அதனால்தான் ஆசிரியை தினம் என்றேன்.
திவ்யா
அரசுப் பள்ளிகளில் தமிழ் மீடியத்தில் படித்து, எம்.எஸ்ஸி, பி.எட் படித்த திவ்யா +2 முடித்ததும் "டீச்சிங்தான் தன் ரூட்" என்று முடிவெடுத்து, தன் நோட்டில் 10/12 வகுப்புகளுக்கு மேத்ஸ் டீச்சர் ஆகணும் என்று இம்போஸிஷன் போல ஆயிரம் தடவை எழுதினாராம். சமச்சீர் கல்வி புத்தகங்களை முழுவதும் புரிஞ்சு படிச்சா ஆசிரியர்களும் ஆல் பாஸ்தான் என்கிறார்.

சித்ரா
தன் அப்பா, அண்ணன், கணவர் போல சித்ராவுக்கு தானும் ஆசிரியர் ஆக வேண்டும் என்பது லட்சியமானதாம். வீட்டு வேலைகள் முடிந்ததும், "சீரியல், தூக்கம், அரட்டைனு நேரத்தை வீணாக்காமல்" மகளின் 10ம் வகுப்பு பாடம் சொல்லிக் கொடுக்கும்போதே தானும் பாடம் படிச்சாராம். "120 மார்க் நிச்சயம்னு நினைச்சேன். ஆனா இப்படி முதல் மார்க் வாங்குவேன்னு சாமி சத்தியமா நினைக்கலே" என்கிறார்.

அருள்வாணி
காலேஜ் முடிந்ததும் கல்யாணம்னு அப்பா சொன்னதும், வாத்தியார் மாப்பிள்ளைதான் வேணும்னு பிடிவாதம் பண்னி ஹரிபாஸ்கரை கட்டிக்கிட்டாராம். சின்ன வயசிலே பிள்ளைகளுடன் ஸ்கேலை கையில் வைத்துக் கொண்டு டீச்சர் விளையாட்டு விளையாடுவாராம். _ஹரி சொன்னபடி பரீட்சைக்கு முன் 6 முதல் 10ம் வகுப்பு சமச்சீர் புத்தகங்களை, சொந்த பந்தங்களின் கல்யாணம் காட்சிகளுக்குக்கூட போகாமல் படிச்சது கஷ்டமே இல்லை என்கிறார்.



மூவரையும் பேட்டி கண்டு, அவர்கள் சொன்னதை நாமே கேட்பது போல அதே நடையில் எழுதிய, நிருபர்கள் - ஷக்தி, முத்து, சரவணக்குமார் அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

என்ன ஆசிரியை தினம்னு சொல்லிட்டீங்க? நல்ல ஆசிரியர் இல்லையா என்ற் நீங்கள் கேட்பது புரிகிறது.

எனக்கும் பிடிச்ச சார் ஸ்டாலின் சார்தான்.
7ம் வகுப்பு C பிரிவில் (நான் விரும்பிப் பார்க்கும் ஒரே சீரியல்) நேற்று DEO
வருகிறாரே என்று ஸ்டாலின் டென்ஷனாக இருக்க, மாணவர்கள் பயப்படாதீங்க சார், அவர் என்ன கேள்வி கேட்டாலும் நாங்கள் சரியான பதில் சொல்வோம்னு சொல்லி கட்டிப்பிடி வைத்தியம் தந்தார்கள்.
க்ரூப் போட்டோ எடுத்த போட்டோகிராபரிடம், ஸ்டாலின், ஒரே மாதிரி இல்லாமல் வித்தியாசமாக படம் எடுங்கனு சொல்லி பிள்ளைகளை அழைக்க,



அவரகள் ஸ்டாலினை சூழ்ந்து கொள்ள, எல்லோர் முகத்திலும் சிரிப்புடன் வந்த போட்டோவின் அழகு நேற்று பார்த்தவர்களுக்கெ புரியும்.

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தன்னை மெழுகுவர்த்தியாக ஆக்கி வாழ்ந்த / வாழ்கின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும்...

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்... நன்றிகள்...

வெங்கட் நாகராஜ் said...

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நானும் அந்த செய்தியைப் படித்தேன். பகிர்வுக்கு நன்றி.
ஆசிரியர் தின சிறப்புக் கவிதை
என் வலைப்பக்கத்தில்
ஞாபகம இருக்கிறதா?

Ranjani Narayanan said...

மூன்று எதிர்கால ஆசிரியர்களின் அறிமுகம் நன்றாக இருந்தது.

இளைய தலைமுறைகள் நல்ல ஆசிரியர்களாக உருவாக வேண்டும்.

அதுதான் நம் நாட்டை உயர்த்தும்.

பாராட்டுக்கள்.

nanaani said...

me too like stalin sir. he set an example to present day teachers.
nice post.