Tuesday, May 26, 2009

பொது வாழ்க்கை அது ஒரு உத்தியோகம் போலவும், பதவி, அதிகாரம்தான் முக்கியம்

நான் சொல்லலீங்க, பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அன்றே சொன்னது. நாளை அவரது நினைவு நாள். ஆண்டுக்கு இரண்டுமுறை அவரை நினைப்பதோடு அவர் சொன்னதையும் நினைத்துப் பார்ப்போம். 2008 மே என் பதிவின் ரிபீட் தான்


"நான் ஒரு நாளாவது பிரதமராக இல்லாமல் ஒரு இந்தியக் குடிமகனாக(பிரஜைதான்)என் தினசரி வேலைப்பளுவிலிருந்து ஓய்வு பெற நினைக்கிறேன்" என்று பிரதமர் நேரு, ஏப்ரல் 29, 1958 அன்று காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் கூறிவிட்டு தன் சக அங்கத்தினர்களிடம் ஐடியாவும் அனுமதியும் கேட்டார்.
நேரு மேலும் சொன்னார். "சில வாரங்களுக்கு முன் நான் மாற்றம் இல்லாத வேலை செய்வதாலும், களைப்பாலும் ஒரு மாற்றம் வேண்டி அவ்வாறு சொன்னேன். எல்லோரும் எனக்கு உடல் நிலை சரியில்லை என்று நினைத்து விட்டார்கள். பத்திரிகைகளும் தங்கள் ஊகங்களை எழுதின. உழைக்க வேண்டும், புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இன்னும் உண்டு. மக்களுடன் எனக்குரிய இணைப்பு உறுதியாக உள்ளதுடன் அவர்களுக்காக மேலும் உழைத்து, அவர்கள் குறை தீர்க்க வேண்டும் என்ற என் ஆசை தீரவில்லை. உடல் அளவில் நான் நன்றாகவே இருக்கிறேன். இன்னும் பல ஆண்டுகள் திறமையாக பணி புரிவேன் என்று நம்புகிறேன்".
மே 1, 1958 அன்று நடந்த காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் நேரு இவ்வாறு நினைக்க காரணம் என்ன என்று விவாதித்தார்கள்.
நேரு, தான் உடல் நிலை சரியில்லாததால் ஓய்வு விரும்பவில்லை என்றும், பல விஷயங்கள் காங்கிரஸ் கட்சியிலும் நாட்டிலும் வித்தியாசமாக நடப்பதுதான் என்றார். பொது வாழ்க்கை சரியான வழியில் செல்லவில்லை என்றும் அது ஒரு உத்தியோகம் போலவும், பதவி, அதிகாரம்தான் முக்கியம் என்று நினைப்பதால் அடிப்படை சேவை ஒதுக்கப் படுகிறது என்றார். காங்கிரஸ் கட்சியில் மட்டும் நான் சொல்லவில்லை நாடு முழுவதும்தான் என்று கூறி அதனால்தான் என் வழக்கமான தினசரி வேலையிலிருந்து ஓய்வு பெற்று அமைதியாக யோசித்துப் பார்க்கவே விரும்புகிறேன் என்றார்.
ஹிந்து நாளிதளில் This Day That Age பகுதி படிப்பீர்களா? 2008 மே 1, மே 3 இதழ்களில் நான் படித்ததுதான் இது.

Monday, May 18, 2009

ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன்





ஹெல்சின்கி, அகுரெய்ரி, ரெய்க்ஜாலிக் - இவங்கெல்லாம் யாருன்னு கேட்கிறீர்களா? எல்லாம் ஊர் பேருங்க. உச்சரிப்பு சரியான்னு தெரியலே


சென்ற சனிக்கிழமை, மே 9 அன்று திருவனந்தபுரத்திலிருந்து நானும் தாமரையும் கத்தார் ஏர்வேஸ்ஸில் சிகாகோ புறப்பட்டோம். கத்தாரின் தோஹா விமான நிலையத்தில் ஒரு பெரிய விமானம் மாறி வாஷிங்டனுக்கு நான் -ஸ்டாப் பயணம். டிவி ஸ்கிரீனில் எங்கே பறந்து கொண்டிருக்கிறோம் என்று தெரிந்தது. உலக வரை படத்தில் மேலே ஏறி, ரஷ்யா, ஃபின்லாண்ட், ஸ்வீடன், நார்வே, ஐஸ்லண்ட், கனடா எல்லா நாடுகளின் மேலேயும் பறந்து வந்து வாஷிங்டனில் இறங்கினோம். ஸ்கிரீனில் நான் பார்த்த, கேட்டிராத, இப்போ தெரிஞ்சுக்கிட்ட ஊர்கள்தான், HELSINKI (Finland), AKUREYRI, REYKJAVIK (Iceland)

ஒரு நான் -ஸ்டாப் பயணம் ஏன் இவ்வளவு தூரம்? சென்ற முறை நாங்கள் வந்தபோது ஏர் இந்தியா விமானம் ஃப்ராங்க்ஃபர்ட், லண்டன் வழியாக

நியூ யார்க் வந்தது. லண்டனில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டதாக கூட ஞாபகம். கத்தாரில் எண்ணைக் கிணறுகள் நிறைய இருப்பதால் இது அவர்களுக்கு ஒரு பொருட்டில்லையோ? ஆனால் இந்த விமானம் எவ்வளவு மைல்/காலன் (mpg) தரும். ஏன் இப்படி சுற்றி செல்லவேண்டும் என்று எனக்கு ஒரே கவலை.


சிகாகோ வந்ததும் என் பேத்தியின் அட்லஸ் புத்தகத்தை புரட்டிப் பார்த்தபோதுதான், பூகோள வகுப்பில் உலகம் உருண்டை என்று நான் படித்ததும், சன் டிவியில் செய்திக்கு முன் பூமி சுற்றுமே அதெல்லாம் ஞாபகம் வந்தது. இத்தனைக்கும் என்னுடைய க்விஸ் கேள்வி வங்கி யில் ஒரு கேள்வி - "ரஷ்யா எல்லைக்கு மிக அருகாமையில் உள்ள யுஎஸ் ஸ்டேட் எது?"-- சொல்லுங்கள் பார்க்கலாம்.


எப்படி ஒரு குறுகிய நேர்வழியில் உலகைச் சுற்றினோம் என்று புரிஞ்சுக்கிட்டேன்










Tuesday, May 12, 2009

மயிலே மயிலே இறகு போடு,


என்று நாம் கேட்டாலும் போடாது. முருகா முருகா கடலை போடு (நிஜக்கடலைதாங்க- இப்போது கடலைபோடுதல் என்றால் அர்த்தம் வேறு) என்று தினமும் எங்கள் வீட்டு வாசலில் வந்து, கேட்டு சாப்பிட்டு விட்டு என்றைக்காவது ஒரு இறகு போட்டுச் செல்லும். பேத்திகளும் அதை எடுத்து சாமி படத்திலும் புத்தகத்திலும் வைத்திருக்கிறார்கள்.

நண்பர்கள் என்னிடம், "எல்லார் வீட்டு வாசலிலும் அவர்கள் கார், பைக் நிற்கும். உங்கள் வாகனம் அருமை" என்கிறார்கள்.

எங்கள் பகுதியில் சில மயில்கள், வாழ்கின்றன என்றே சொல்லலாம். பூட்டியுள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில்தான் வாடகையில்லாமல் இரவு வாசம். பகலில் இரை தேடி செல்கின்றன.ஒரு நாள் அரிசி, பொட்டுக்கடலை என்று தாமரை போட்டதால் அவை தினமும் வாசலில் வந்து நிற்கும். தாமரையும் வாடா, வாடா என்று சொல்லி ஒரு கை பொட்டுக்கடலை போடுவாள். பேத்திகளுடன் நானும் வாசல் படியில் உட்கார்ந்து பார்ப்பேன்

ஒருநாள் மேகமூட்டமாக இருந்ததால் தோகை விரித்து அழகாக ஆடியது. கேமராவை எடுத்து வருவதற்குள் மயிலுக்கு மூட் போய்விட்டது போல. பறந்து விட்டது. மயில்களை நிறைய படங்கள் எடுத்தேன். பிட் மே மாதப்போட்டிக்கு சப்ஜெக்ட் பறவைகள் என்றதும் செலக்ட் செய்து இந்த படம் அனுப்பினேன்

Wednesday, April 22, 2009

அரசியலில் மட்டும் வாரிசுகள்,

பதவி, புகழ் எல்லாம் பெறுகிறார்கள். இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, சோனியா காந்தி - இப்போது ராகுலும் தேர்தலில் நிற்கிறாராம்.

இங்கே ஸ்டாலின், கனிமொழி, அழகிரி என்று அவர்கள் ராஜ்யம்தான். கலை உலகில் மட்டும் ஏன் வாரிசுகள் திறமை இருந்தும் புகழ் பெற முடிவதில்லை?

எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான்" என்று பாடி சிகரம் தொட்ட டி.எம்.செள்ந்த்ர்ராஜனின் மகன் (51) 25 வருடங்களாக இரு தலைமுறை இசை அமைப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார் அவர் மகன் டி.எம்.எஸ்.செல்வகுமார் என்று (9/4/09 குங்குமம் இதழில் ஆர்.எம்.திரவியராஜ் எழுதிய செய்தியை படித்ததும் ரொம்ப சங்கடமாக இருக்கிறது.

தூக்குதூக்கி படத்தில் சிவாஜிக்கு பின்னணி பாட சி.எஸ் ஜெயராமன் தான் சரி என படக்குழுவில் எல்லோரும் சொல்ல, இசை அமைப்பாளர் ஜி.ராமனாதன் சிவாஜியிடம், 'மதுரை பையன் ஒருவன் இருக்கிறான்.நம் படத்தின் ஒரு பாடலை பாடச் சொல்கிறேன். கேட்டுப் பாருங்களேன்' என்று சொன்னதால் பாடி பிரபலமானவர் செளந்தர்ராஜன். டி.எம்.எஸ். செல்வகுமாரை அப்படி தூக்கிவிட யாரும் இல்லாமல் போனது ஏன்?

இப்ப எல்லாம் பின்னணி பாடகர்கள் ரொம்ப பிஸி. அவர்களுக்கு நேரம் கிடைக்கும் போதுதான் ரிகார்டிங்க்கு வருவார்களாம். ரிகர்சல் பாடி பின் ரிகார்ட் செய்ய முடியாததால் ஒரு ஜூனியர் பாடகர் ட்ராக் பாட, டேப் செய்து வைத்திருப்பார்களாம். அதைக் கேட்டு முன்னணி பின்னணிப் பாடகர் பாடுவாராம். "வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா" - காதல் கோட்டை படத்துக்காக இதை ட்ராக்கில் கேட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ரொம்ப நன்றாக பாடியிருக்கிறாரே, இவரே இந்த பாட்டை பாடட்டும் என்று சொன்னதால் அந்த ஜூனியருக்கு சான்ஸ் கிடைத்ததாக படித்த ஞாபகம்.

"துள்ளாத மனமும் துள்ளூம்" என்று தூர்தஷ்னிலும், "சொக்குதே மனம்" என்று ஜெயா டிவியிலும் சினிமா பாடல் நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன அதில் கூட டி.எம்.எஸ் பாடிய பாடல்களை பாட அவர் பிள்ளைகளை அழைப்பதில்லை. அப்பா பாடிய எம்.ஜி.ஆர் பாட்டுக்களையும் சிவாஜி பாட்டுக்களையும் டி.எம்.எஸ் செல்வகுமாரும் டி.எம்.எஸ் பால்ராஜும் தங்கள் ரிதம் ஆர்கெஸ்ட்ரா குழுவுடன் மேடைகளில் பாடுகிறார்களாம். என் பாட்டுக்கள் என் பிள்ளைகளை வாழ வைக்கும் என்று வேதனையுடன் சொல்கிறாராம் டி.எம்.எஸ்.

டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகரான அழகிரி, அவருக்காக மதுரையில் ஒரு விழா நடத்தினார். அத்துடன் அவர் பிள்ளைகளை சினிமாவில் பாடவைக்க அவர் ஆணையிட்டால், அது நடந்து விட்டால் டி.எம்.எஸ் இனி வேதனைப் படமாட்டார்.

Monday, April 13, 2009

காந்திமதி இசைப்பள்ளி மாணவிகளின் கச்சேரி

வெள்ளிக்கிழமை ஹிந்து நாளிதழில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சியிலெல்லாம் நடந்த இசை நிகழ்ச்சி பற்றிய விமர்சனம் படிக்கையில் திருநெல்வேலியில் நல்ல சங்கீதம் கேட்க முடியவில்லையே என்று நினைப்பேன். நேற்று ஞாயிறு தினமலரில் நெல்லை சங்கீத சபா விளம்பரத்தில், சபாவின் இசைப்பள்ளி மாணவிகளின் கச்சேரி என்று பார்த்ததும் நானும் தாமரையும் மாலை சென்றோம்.

இசை ஆசிரியர் மணி பாகவதரின் (85+) விருப்பப்படி செல்விகள் சுப்புலக்ஷ்மி, ஸ்ரீதேவி, விகாசினி மூவரும் இசை மழை பொழிந்தார்கள். பக்க வாத்தியம் வாசிக்க பெண் பாடகிகள் என்றால் பெரிய சபைகளில் வரத் தயங்குவார்களாம். ஆனால் இந்தக் குழந்தைகளுக்காக திரு என்.ரவீந்திரன் - வயலின், ஆல் இந்தியா ரேடியோ வித்வான் திரு.ராமநாதன் - மிருதங்கம், வீரவநல்லூர் திரு.எஸ்.கோதண்டராமன் கடம் வாசித்து உற்சாகப் படுத்தி ஒரு நல்ல கச்சேரி நடத்தினார்கள்."மகா கணபதி", "மருகேலரா, ஓ ராகவா", என்று கீர்த்தனைகளை சேர்ந்து பாடினார்கள். தனித்தனியாகவும் கீர்ததனை பாடினார்கள். "காந்திமதி சங்கர யுவதிம்" எனும் தீக்ஷிதர் கீர்த்தனை முக்கிய நிகழ்ச்சியாக அமைந்தது. சிறுமிகளால் சிட்டை ஸ்வரம் பாடமுடியாது என்று வயலின் வித்வான் தானே ஸ்வரம் வாசித்து, மிருதங்கம், கடம் இருவரும் தனி வாசித்தது அருமையாக இருந்தது.

சபையின் காரியதரிசி திரு.ஏ.நடேசன் கடம் வாசித்த கோதண்டராமனின் தந்தை அந்நாளில் பிரபலமான திரு வி.வி.சடகோபனின் சிஷ்யன் என்று கூறி, குழந்தைகளை (மூவருக்கும் 12/13 வயது) கெள்ரவிக்க சபையின் அங்கத்தினர்களான திருமதி லோகா, திரு.சுப்பிரமணியன் தம்பதியை அழைத்தார். திருமதி லோகா பேசுகையில் மூவரையும் பாராட்டி சுப்புலக்ஷ்மி, "சம்போ சிவ சம்போ" கீர்த்த்னையை ரொம்ப நன்றாக பாடினார் என்று கூறி குழந்தைகளை ஆசீர்வதித்து சபையின் வெகுமதியான குத்துவிளக்கையும் தான் கொண்டுவந்த பரிசையும் அவர்களுக்கு வழங்கினார்.

திரு சுப்பிரமணியன் வாத்தியக்காரகளுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்ததுடன் வி.வி.சடகோபன் தான் நெல்லை ச்ங்கீத ச்பாவின் முதல் கச்சேரி செய்தார் என்ற தகவலையும் சொன்னார்.இந்தச் சிறுமிகள் பாடங்களுடன் பாடல்களையும் ஆர்வத்துடன் படிப்பதை எல்லோரும் பாராட்டி பேசினார்கள்.

பின்னர் துக்கடா பாடி திருப்புகழுடன் நிறைவு செய்தார்கள். என் கேமராவை எடுத்து செல்லாமல்போய்விட்டேன். நல்ல படங்கள் தந்திருப்பேன். இனி எப்போதும் கேமராவுடன் தான் செல்ல வேண்டும்

Wednesday, December 31, 2008

அடுத்த 12 மாதங்கள், 52 வாரங்கள், 365 நாட்கள்

இவைதான் புது வருடம். என்ன வித்தியாசம்? நாளை காலையும் சூரியன் வழக்கம் போல கிழக்கில்தான் உதிக்கும். பால்காரர் வருவார், பேப்பர் வரும். டிவியில் குடியரசு தலைவி, பிரதமர், முதலமைச்சர், நடிகநடிகையர், மற்றும் பலர் வாழ்த்து சொல்வார்கள். இன்று இரவு 12 மணி வரை கொண்டாட்டம் என்று கூத்து நடக்கும். நாமும் பார்க்கும் எல்லோருக்கும் ஹாப்பி நியூ இயர் சொல்வோம். ஏன் வருடம் முழுதும் தினம், ஹாப்பி டுடே சொல்லக்கூடாது.

புத்தாண்டு தீர்மானம் என்று ஏதாவது நினைத்து மறுநாளே மறந்து விடுவோம். புது டைரி வாங்கி மார்ச் மாதம் வரை எழுதுவோம்.

என் தீர்மானங்கள்:

தினம் முடியாவிட்டாலும் வாரம் ஒரு பதிவு எழுத வேண்டும். விசேஷ வீடுகளில் மட்டுமே சந்திக்கும் உறவினர்கள் வீட்டுக்கு மாதம் ஒரு முறையாவது சென்று வரணும். கடிதம் எழுதும் பழக்கம் அடியோடு போய்விட்டது. நிறைய எழுதணும். நம்மிடம் வேலை பார்ப்பவர் யாரும் சொன்னதை செய்யவில்லை அல்லது தப்பாக செய்தாலோ கோபப் படக்கூடாது.இப்போது ஆள் கிடைப்பதே அரிது. தினம் குட் மார்னிங் போல ஹாப்பி டுடே சொல்லணும். இந்த தீர்மானங்களை நாளை மறந்துவிடக் கூடாது

ஹாப்பி டுடே

Monday, December 29, 2008

A reque$t and an ackNOwledgement




One day an employee sends a letter to his boss asking for a raise in his salary!

Dear Bo$$.
In thi$ life, we all need $omething
mo$t de$perately. I think you $hould
be under$tanding the need$ of u$.
We are worker$ who have given
$o much $upport including
$weat and $ervice
to your company.
I am $ure you will gue$$
what I mean and re$pond $oon.

Your$ $incerely,

The next day the employee received this letter of reply.

Dear,
I kNOw you have been working very hard.
NOwadays NOthing much has changed.
You must have NOticed that our company
is NOt doing NOticably well. NOw the
newspapers are saying the world’s leading
ecoNOmists are NOt sure if the United States
may go into aNOther recession.
After the NOvember presidency elections
things may turn bad. I have NOthing more
to add NOw. You kNOw what I mean.

Your boss.


courtesy: "Coral Voice" - weekly bulletin of Rotary Club of Pearl City,

Thoothukudi