Tuesday, July 31, 2007

தண்ணீர் தண்ணீர் - இங்கேயுமா?

தாமிரபரணியில்தான் ஆலைக்கழிவுகள், சாக்கடை எல்லாம் வந்து சேர்கின்றன என்றாலும் கொதிக்கவைத்து வடிகட்டி குடிக்கிறோம். ஷிகாகோ ட்ரிப்யூன் பத்திரிகையில் ஒரு செய்தி: இன்டியானா மாநிலத்தில் BPயின் வொய்ட்டிங் ரிபைனரி (நம்மூர் பாரத் பெட்ரோலியம் இல்லீங்க-முன்னாள் ப்ரிட்டிஷ் பெட்ரோலியம், இப்போது BP மட்டும்தான் - கே.கே நகர் மாதிரி)யிலிருந்து கழிவுகள்,மெர்க்குரி,அமோனியா போன்ற கெமிக்கல்ஸ் மிஷிகன் ஏரியில் விடப்படுகிறதாம்.மிஷிகன் ஏரியிலிருந்துதான் இல்லிநாய் (ஸ் சைலன்ட், எந்த ப்ரீடும் அல்ல) இன்டியானா, மிஷிகன் மாநிலங்கள் மூன்றும் குடிநீர் சப்ளை பெறுகின்றனவாம்.எத்தனையோ எதிப்புகள் செய்தியாகவும், லெட்டர் டு எடிட்டரிலும் வந்தாலும் BP பேப்பரில் தன் முழுபக்க விளம்பரத்தில், ஆயிரக்காணக்கான தங்கள் தொழிலாளர்கள் மிஷிகன் லேக் பகுதியில்தான் வசிக்கிறார்கள்.நாங்களும் வாட்டர் ட்ரீட்மென்ட்க்கு எல்லா முயற்சியும் செய்கிறோம் என்று கூறுகிறது. என்ன ஆகுமோ.

நான் படித்த ஒரு செய்தி. அமெரிக்காவில் உள்ள தமிழர்களுக்காக கயாவிலிருந்து (ஆங்கிலத்தில் CA என்றால் தமிழில் கயா தானே) வெளியாகும் "தென்றல்" மாத இதழில் சன்தில் க்ரூப் நிறுவன இயக்குனர் எம்.ஆர்.ரங்கஸ்வாமி ஒரு பேட்டி. அதில் அவருடைய கருத்துக்கள்:

1.சுற்றுச்சூழல் நமது மிகப்பெரிய பொறுப்பு. இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நம் குழந்தைகளுக்கு நல்ல வழிடம் அமைய சூழலில் கவனம் செலுத்தவெண்டும்.

2.தமிழ்நாட்டின் மிகப்பெரிய பலம் அதன் பொறியியல் பட்டதாரிகள்தான். பெங்களூரில் திறமையிருந்தாலும் விலைவாசி உயர்வால் அங்கு ஆள் கிடைப்பதில்லை. தொழில்நுட்பத் துறையில் முன்னேற வருகின்ற நிருவனங்களைத் திறந்த மனத்தோடு வரவேற்க வேண்டும்.

சென்னை சட்டக்கல்லூயில் பயின்ற எம்.ஆர்க்கு அதில் ஆர்வம் இல்லை என்று அறிந்த அவர் அண்ணா தன்னோடு யுஎஸ்க்கு வந்து எம்.பி.ஏ படிக்க அழைத்ததுதான் ஒரு மாபெரும் திருப்பம். படித்து முடித்ததும் சின்ன கம்பெனியில் சேர்ந்து முன்னேறி இன்று கணிணித்துறையில் பிரபலமான 20 பேர்களில் ஒருவர் என்று பத்திரிகைகள் எழுதும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.

1 comment:

நானானி said...

சகாதேவன்!
CA என்றால் கலிபோர்னியா.
அங்கிருந்தவரை எனக்குப்படிக்க கிடைத்த ஒரே தமிழ் பத்திரிக்கை
அதில்வரும் குறுக்கெழுத்துப்போட்டியை முயன்று பார்த்தீர்களா? மண்டை காய்ந்துவிடும்.