Friday, November 14, 2008

தினம் தினம் ஒரு தினம்

ஆசிரியர் தினம் அன்று ஒரு பதிவு எழுதினேன். இன்று குழந்தைகள் தினம். இடையில் தினம் தினம் நான் எழுத வேண்டும் என்று நினைத்தாலும் முடியவில்லை.

ஒரு தினம் நெட் வேலை செய்யவில்லை. பி.எஸ்.என்.எல் க்கு போன் செய்து, மாலையில் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஒரு வாரம் தினம் தினம் போன் செய்தால், "முந்திய வாரம் பெய்த இடி மழையால் பல வீடுகளில் மோடம், டிவி எல்லாம் பழுதாகி விட்டது. உங்கள் மோடத்தை செக் பண்ணுங்கள்" என்றார்கள்.

மறுதினம் ரூ 1600 கொடுத்து புது மோடம் வாங்கினேன். அந்த தினம் தான் சீர்காழி அவர்கள் பாடியது போல என் சுபதினம் என்று எண்ணினேன்.

ஆனால் தினம் ஏதாவது ஒரு முக்கியமான வேலையாக வெளியே செல்ல வேண்டி வந்துவிடும். தினம் லேட்டாக வந்து, மறுதினம் எழுதலாம் என்று தூங்கிவிடுவேன்.

இந்த வாரம் நாட்டின் முதல் கல்வி அமைச்சர், மெளலானா அபுல் கலாம் ஆஸாத் அவர்கள் ஞாபகம் வந்து கல்வி தினம் என்றார்கள். நவம்பர் 14 ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினம். பல ஆண்டுகளாக குழந்தைகள் தினம் ஆக கொண்டாடுகிறோம். இன்று உலக டயபட்டீஸ் தினம் கூட.
நவம்பர் 15 அன்று என்ன தினம்? ஆண்டின் 320 வது தினம்தான். எண்ணிப்பார்த்து 319 வது தினம்தானே என்று சொல்லிவிடாதீர்கள். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 29 தினங்கள்.

2 comments:

நானானி said...

உங்களுக்கு மோடம்தான் ப்ராப்ளம்.
எனக்கு..?சோம்பல்தனம்தான் ப்ராப்ளம்.
நீ...ண்ட இடைவெளியாகி விட்டது.
இனி எல்லா தினமும் சுபதினமே!!

goma said...

மோடமும் இல்லை சோம்பலும் இல்லை ,நிகழ்ச்சிகள் நம்மை இதமாய் வருடினால் ,உசுப்பினால்,தாக்கினால்,எழுத்து துள்ளி வந்து விழும் ,அந்த சமயம் மோடமும் வேலை செய்யும் சோம்பலும் சோம்பலாகும்.'இனி எல்லா தினமும் சுபதினமே' என்றாக ,வாழ்த்துவது கோமா