Wednesday, July 20, 2011

முக்கனி, முப்பால், த்ரீ ரோஸஸ்

1) விரும்பும் மூன்று விஷயங்கள்?
1.முக்கனி,
2.முப்பால் (குறள்)
3.த்ரீ ரோஸஸ் டீ (டிவி விளம்பரங்க. நான் காபி பிரியன்)

2) விரும்பாத மூன்று விஷயங்கள்?
1.மூணு சீட்டு ஆடுவது,
2.நான் பிடித்த முயலுக்கு மூணு கால் எனும் பிடிவாதம்
3.டிக்கெட் வாங்க ரெண்டு பேர்தான் கவுண்டரில் நிற்கிறோம்.
மூணாவது ஆள் முந்திச் செல்வது.

3) பயப்படும் மூன்று விஷயங்கள்?
1.மூணாம் உலகப் போர் வந்துவிடுமோ?
2.மரங்களை எல்லாம் வெட்டி வருகிறோம்.இனி காடுகளே இல்லாமல்ஆகிவிடுமோ?
இப்பவே யானை, சிறுத்தை எல்லாம் உணவு தேடி நகருக்குள் வருவதாக
தினம் பேப்பரில் படிக்கிறோம்
3.கார் ஓட்டவே பயமா இருக்கு.
யாருமே (என்னைத் தவிர)சாலை விதிகளை மதிப்பதில்லை.

4) புரியாத மூன்று விஷயங்கள்?
1.நியூட்டனின் மூன்றாம் விதி - நாம் செய்யும் நல்ல ஆக்ஷ்னுக்கு கூட
-ஈக்வல் இல்லை-மூன்று மடங்கு ஆப்போசிட் ரியாக்ஷன் வருவது.
2.மூன்றாம் மாடியிலிருந்து நாம் லிஃப்டில் இறங்கும் போது கதவு
திறந்ததும் நம்மை வெளியே வர விடாமல் நுழைபவர்களுக்கு என்ன அவசரம்?
3./ஒண்ணுமே புரியலே உலகத்திலே/
சந்திரபாபு பாடிய பாட்டுதான் ஞாபகம் வருது.

5) மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
1.மூணு ரூபாய் சில்லரை காசு
2.ஃபோன் ,
3.லாப் டாப்,

6) சிரிக்கவைக்கும் மூன்று விசயங்கள் அல்லது மனிதர்கள்?
1.டாம் அண்ட் ஜெர்ரி,
2.பேரக்குழந்தைகள்,
3.வடிவேலு.

7) தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
1.மூணு நாளா யோசிச்சு யோசிச்சு இந்த பதிவு டைப் செய்கிறேன்.
2.டாக்டர் தந்த மூன்று மாத்திரை, மூன்றவேளையும் விழுங்கிக் கொண்டிருக்கிறேன்.
3.வேறு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
அன்னிக்கு ஒருவர் என் கைரேகை பார்த்து, நீங்கள் 96 வயது
வரை இருப்பீர்கள் என்றார்.அடேயப்பா!
இன்னும் 26 வருஷமா? அப்படியானால்:
1.பேத்திகள் கல்யாணம் பார்க்கணும்,
2.கொள்ளுப் பேரக்குழந்தைகளுடன் விளையாடணும்
3.யாருக்கும் தொந்திரவு கொடுக்காமல்
என் வேலைகளை நானே பார்த்துக்கொண்டு,
இரவில் படுத்தார், காலையில் எழுந்திருக்கலை
என்று சொல்லுமாறு போய்விட வேண்டும்

9) செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
1.ஒண்ணு இல்லை 2.ரெண்டும் இல்லை 3.மூணும் இல்லை

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
1.பொது இடங்களில் அசிங்கமாக செல் போனில் பேசுவது.
2.பொய் சொல்லுவது
3.நம்மை இந்திரன், சந்திரன், (எந்திரன் - மூணாவதாக சேர்த்துக்கலாமா?)
என்று புகழ்வது. என் திறன் எனக்குத் தெரியாதா.

11) கற்றுக் கொள்ள விரும்(பிய)பும் மூன்று விஷயங்கள்?
1.தபேலா வாசிக்க.
2.ப்ளேன் ஓட்ட
3.டைப் அடிக்க.

அந்நாளில் எங்க ஊரில் ரிப்போர்ட்டர்ஸ் ஹோம் தான்
பெரிய டைப் இன்ஸ்டிட்டியூட்.. அதில் சேர்ந்து asdfgf ;lkjhj
என்ற முதல் பாடம் மட்டும் படித்தேன்

12) பிடித்த மூன்று உணவு வகைகள் ?
1.காலை டிபன் ஹோட்டலில் என்றால் பொங்கல், வடை
2.மதியம் வீட்டில் சொதி.
3.இரவில் இட்லி

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
1.மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது...
2.மூன்று தமிழ் தோன்றியது...( படம்-பிள்ளையோ பிள்ளை )
3.கூகுளில் தேடினேன் மூணாவது பாட்டு கிடைக்கவில்லை.)

14) பிடித்த மூன்று படங்கள்?
1.மூன்று முகம 2.மூன்றாம் பிறை 3.மூன்று முடிச்சு.
இது மூன்றுக்காக சொன்னது. பிடித்த 3 படங்கள்:
சந்திரலேகா, மலைக்கள்ளன், பராசக்தி

15)இல்லாம வாழமுடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்? 1.கம்ப்யூட்டர் 2.செல்போன் 3.ப்ளாக்(blog)

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?
அந்த மூவர், என் பதிவுகளுக்கு தவறாமல் பின்னூட்டம் இடும்
1.நானானி 2.கோமா 3. ராமலக்ஷ்மி

17 comments:

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

என் அருமை நண்பர் ,
கலக்கியுள்ளிர்கள்.........
யானைக்குட்டி ----நோட்டீஸ் போர்டு ---

ராமலக்ஷ்மி said...

1.வியந்து
2.ரசித்து
3.வாசித்து

முடிக்கையில் வைத்து விட்டீர்களே ‘ஆப்பு’ உங்களுக்குப் பிடித்த வடிவேலு சொல்வது போல:)! டஃபான கொஸ்டின் பேப்பரா இருக்கே:))! சரி பார்க்கிறேன். அழைத்த அன்புக்கு நன்றி.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
மனிதர்களுக்கு பொறுமை இருப்பது இல்லை.
நன்றி ஐயா.

goma said...

நான் பாட்டுக்கு தேமேன்னு இருக்கேன் ..
மூன்று பேர் சொன்னதும் ...
இது வரைக்கும் நல்லாத்தானே போய்ட்டு இருந்துச்சுன்னு போச்சு

goma said...

நாங்களும் மூணு முத்து போட்டோம்ல...
வந்து பாருங்கோ

நானானி said...

இப்பத்தான் பாத்தேன். வர்ரேன். 9-தாவதில் ஒண்ணுமே இல்லையா? இருக்கே சகாதேவன்! 11-ல் முதல் விஷயம் எனக்கும் ஆசை.

சுதா SJ said...

சூப்பர் பாஸ், பதிவை படித்து முடித்ததும் உங்களை முழுசாக படித்த உணர்வு, உங்களைப்பற்றி அறிய உதவியது, ஹும்ம் வித்தியாசமான மனிதர்தான் நீங்கள்.

Chitra said...

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது...
2.மூன்று தமிழ் தோன்றியது...( படம்-பிள்ளையோ பிள்ளை )
3.கூகுளில் தேடினேன் மூணாவது பாட்டு கிடைக்கவில்லை.)


..... உங்க நேர்மையை பாராட்டாமல் இருக்க முடியல. ஹி,ஹி,ஹி,ஹி....

Chitra said...

மூணு மூணா பிரிச்சு அசத்திட்டீங்க....

திவாண்ணா said...

//கார் ஓட்டவே பயமா இருக்கு.
யாருமே (என்னைத் தவிர)சாலை விதிகளை மதிப்பதில்லை. //
இதனால்தான் உங்க காரை பாத்தா எல்லாரும் பயப்படறாங்களாம்!

திவாண்ணா said...

மூன்றாம் மாடியிலிருந்து நாம் லிஃப்டில் இறங்கும் போது கதவு
திறந்ததும் நம்மை வெளியே வர விடாமல் நுழைபவர்களுக்கு என்ன அவசரம்? //

மூணு நிமிஷத்துல மூணு லக்ஷம் சம்பாதிக்கலாம்ன்னு..

திவாண்ணா said...

96 வயது வரை //
இதும் மூணுதானா? 3*3, 3*2

திவாண்ணா said...

//சந்திரலேகா, மலைக்கள்ளன், பராசக்தி //
ஹும் ஜெனெரேஷன் கேப்!

திவாண்ணா said...

//16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்? //
இன் ஹௌஸ் ஆவே வெச்சுட்டீங்களா? சரி சரி சரி...

சகாதேவன் said...

யானைக்குட்டி,
//வெடிவால்-வடிவேல்.சும்மா இளமையான உள்ளம்..அருமையான மனிதர்..//
பதிவர் சந்திப்பு பற்று உங்கள் பதிவில் என்னைக் குறிப்பிட்டமைக்கு நன்றி.

ராமலக்ஷ்மி
வியந்து ரசித்து வாசித்த நீங்கள் ரெஸ்ட் எடுத்து மீண்டும் கீபோர்டுக்கு வரும்போது எழுதுங்கள்.

ரத்னவேல் ஐயா
பாராட்டுக்கு நன்றி.

கோமா,
//இது வரைக்கும் நல்லாத்தானே போய்ட்டு இருந்துச்சுன்னு போச்சு//
நீங்களும் மூணு முத்து போட்டுட்டீங்கள்ல. பலே.

நானானி,
//இப்பத்தான் பாத்தேன். வர்ரேன்//
சீக்கிரம் வாங்க

துஷ்யந்தா,
//வித்தியாசமான மனிதர்தான் நீங்கள்//
நானும் எல்லொரையும் போலத்தான்.என் இந்த பதிவையும் பாருங்களேன்
http://vedivaal.blogspot.com/2009/06/blog-post_19.html

சித்ரா,
//.. உங்க நேர்மையை பாராட்டாமல் இருக்க முடியல. ஹி,ஹி...//
நான் பொய் சொல்லவே மாட்டேங்க

திவா,
//இதனால்தான் உங்க காரை பாத்தா எல்லாரும் பயப்படறாங்களாம்//
இல்லை. என் காரைப் பார்த்தால் இவன் கட்டாயம் நிற்பான் என்று க்ராஸிங் இல்லாத இடத்திலும் கை காட்டி விட்டு கடந்து செல்கிறார்கள்.என் அண்ணன் நான் லைசென்ஸ் எடுத்ததும் சொன்னார்.சாலையில் மற்ற யாருமே ரூல் படி ஓட்ட மாட்டார்கள் என்று நினைத்தே நீ கார் ஒட்டு என்று.

//96 வயது வரை..இதும் மூணுதானா? 3*3, 3*2// நான் நினைக்கலை.தானா அமைஞ்சுது.

//ஹும் ஜெனெரேஷன் கேப்!// கே-டிவியில் இந்த படங்கள் வரும்.பாருங்கள் உங்களூக்கும் பிடிக்கும்

//இன் ஹௌஸ் ஆவே வெச்சுட்டீங்களா? //
நாங்கள் இன் ஹௌஸ்தான். முதல் இருவரும் என் தங்கை, மூன்றாமவர் என் நீஸ்

எல்லோருக்கும் என் ந்ன்றி

திவாண்ணா said...

//கே-டிவியில் இந்த படங்கள் வரும்.பாருங்கள் உங்களூக்கும் பிடிக்கும்//
பிடிக்காதுன்னு சொல்லலை சார்.
ஆனா டிவி பார்க்க ஏது நேரம்?? இந்த படங்கள் அத்தனையும் என் இளமை காலத்துக்கு முந்தியவை. அப்ப பார்க்கவில்லை. இப்ப பார்க்க கொடுத்து வைக்கலை! :-)

திவாண்ணா said...

சரி சரி நீங்க ஆரம்பிச்ச விளையாடோட பலனை அனுபவிக்க வேண்டாமா? பாத்து படிச்சு கமென்டுங்க!
http://kathaikathaiyaam.blogspot.com/2011/08/blog-post.html