Tuesday, November 26, 2013

          "பூப்பூவா பூத்திருக்கு.........

பூமியிலே ஆயிரம் பூ,  பூவிலே சிறந்த பூ

என்ன பூ?........."

 என்று அறிய, நாட்டார் வழக்காற்றியல் துறையும் அத்துறையின் ஆய்வு மையமும் தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியும் இணைந்து, பள்ளிகளுக்கான கிராமியக் கலைப் போட்டிகளை சவேரியார் கல்லூரியில் நடத்தினார்கள்  . இரண்டு நாட்களாக நடக்கும் "கிராமியம்- 2013" நிகழ்ச்சிக்கு இன்றுதான் என்னால் போக முடிந்தது.

 குழுப் பாடல், கதை சொல்லல், தனிப் பாடல்,கோலம், குழு நடனம், குறு நாடகம், மாறுவேடம் என்று பல போட்டிகள்.






கோலப்போட்டியில் பையன்களும் கலந்து கொண்டு ரங்கோலி வரைந்து வண்ணப்போடிகள் தூவினார்கள். கோலம் என்றால் எனக்கு புள்ளி வைத்துபோடுவதுதான் கோலம்.



புள்ளி கோலம் போட்ட பெண்ணிடம், "என் அம்மா போட்ட கோலம் மாதிரி இருக்கு" என்றேன். அவளுக்கு ஒரே சந்தோஷம்.

   பங்கேற்ற பள்ளி அணிகளுக்கு பூக்களின் பெயர்கள் தந்திருந்தார்கள். நடுவர்களுக்கு  எந்தப் பள்ளி  என்று  தெரியக்கூடாது  என   அணிகளுக்கு பெயர்கள்  அல்லது   1,2,3   என்று நம்பர்களாக   குறிப்பிடுவது    வழக்கம்

அல்லி,  தாமரை,  தாழம்பூ,  வாடாமல்லி,  மகிழம்பூ,  கனகாம்பரம்,  சூரியகாந்தி,  சங்குபுஷ்பம்,  பிச்சி,  சாமங்கி,  மனோரஞ்சிதம்,  செம்பருத்தி, நித்யகல்யாணி,  மகரந்தம்,  ரோஜா,  நீலாம்பரி,  அந்திமந்தாரை,  பூவரசு.

 ஆகா, இத்தனை பூக்களா? அமைப்பாளர்களின் ரசனைக்கு என் பராட்டுக்கள்.
  இன்று மாலை 4 மணிக்கு  சிறந்த மூணு பூக்களுக்கு, முதல், இரண்டாம்,      மூன்றாம் பரிசுகள் தருவார்கள்

   என் கல்லூரிக்குள் நுழைந்ததும் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது.

1962ல் இப்படி இருந்த நான் இப்போ எப்படி ஆயிட்டேன்னு பாருங்க. சினிமாவிலே ஃப்ளாஷ்பேக் என்றால்  B/W தானே. எதிரில் படி ஏறி வந்த மாணவனிடம் கேமரா தர, அவன் எடுத்த படம்

2 comments:

ராமலக்ஷ்மி said...

எல்லாப் பூக்களுமே அழகுதான்:)! போட்டிகள் ஊக்கம் தரவே. பகிர்வுக்கு நன்றி.

அன்றும் இன்றும் படங்கள் அசத்தல்:)!

goma said...

Smile remains same