Wednesday, March 18, 2015

ஸ்கூல் பஸ்ஸில் ஏறினதும் வகுப்பு தோழிகள் எல்லோரும்
ராஜகுமாரி வந்துவிட்டாள் என்று கேலி செய்ய, வீட்டுக்கு
 வந்ததும், கோபமாகஅம்மாவிடம்,  ஆயிரம் பெயர்கள் இருக்க "ராஜகுமாரி"தான் எனக்கு வைக்க கிடைச்சுதா என்று   கேட்கிறாள்,
 நூடுல்ஸ் விளம்பரத்தில்.

 என் அண்ணன் இசக்கி,  அம்மாவிடம் கேட்டதாக மணி அண்ணன்
சொன்ன தகவல்:- அண்ணன் தம்பிக்கெல்லாம், முத்துவேல், சுப்பிரமணியன், சண்முகம், வடிவேல்முருகன் என்று முருகன் பேரா வைச்சு எனக்கு மட்டும் ஏன் இசக்கி"ன்னு பேர் வைச்சே?
 
இசக்கி அண்ணன்

        அம்மா சொன்னாராம் - "அப்போ நீ என் வயிற்றில் இருந்தாய். அப்பாவுடன் தேவநல்லூர் போய் விட்டு வரும்போது வழியில் பயங்கர வலி.  குழந்தை நல்லபடியாக பிறக்கணும், உன் பேரை வைக்கிறேன் என்று  நம்ம குலதெய்வமான இசக்கி அம்மனிடம் வேண்டிக் கொண்டே வர,  கோவில் தாண்டியதும் வலி பறந்தது. அதான் உனக்கு அந்த நல்ல பெயர்."
   
 'ஆனந்தம்' படத்தில் இங்கே தவசி யாருங்க? ரிஜிஸ்டர் தபால்.அவர் கையெழுத்து போடணும் என்று கேட்டு வரும் தபால்காரரிடம், விஜயகுமார்(தவசி) ரொம்ப நாளைக்கு அப்புறம் என்னை பேர் சொல்லிக் கூப்பிட்டது நீதான் என்று சொல்வாரே அது போல எங்க அப்பாவை "சோமு" என்று பெயர் சொல்லி கூப்பிடுபவர், தாத்தா தவிர, அப்பாவின் பள்ளித் தோழர் ஐயாக்குட்டி முதலியார் மட்டும்தான்.
   ஒருநாள் போன் மணி அடிக்க இசக்கி அண்ணன் எடுத்து -ஹலோ சொல்ல, "சோமு இருக்கானா?" என்று அவர் கேட்க, "சோமு இருக்கானே" என்று வேடிக்கையாக சொல்ல, அப்பாவும் அங்கே வர, பயந்து ஓடி விட்டானாம். அப்பாவுக்கு ஒரே சிரிப்பு.
அன்றாடம் சினிமாவிலும் டிவியிலும் நாம் பார்க்கும் நிகழ்ச்சி, நம் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவூட்டுவதாகவே அமைகிறது பாருங்கள்.

No comments: