Monday, June 2, 2008

ஹீரோவுக்கு புதிய தோழர்கள்.

சந்தோஷ் சுப்பிரமணியம் படம் 50 நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.நேற்றுதான் திரையரங்கில் பார்த்தேன்.
தனி காமெடி ட்ராக், வில்லன், பாட்டு/டான்ஸ், எதுவுமில்லாமல் நம்மையும் சந்தோஷின் குடும்பத்தில் ஒருவராக 3 மணி நேரம் கட்டிப்போட்டு விட்ட கதை. நிச்சயிக்கப் பட்ட கல்யாணம் என்னாகும் என்ற டென்ஷன் நமக்கு.
ஹீரோவுக்கு தோழர்களாக விவேக், சார்லி, தாமு, வையாபுரி யாரும் இல்லாமல் மூன்று புதிய முகங்களைப் பார்த்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

4 comments:

ரசிகன் said...

//ஹீரோவுக்கு தோழர்களாக விவேக், சார்லி, தாமு, வையாபுரி யாரும் இல்லாமல் மூன்று புதிய முகங்களைப் பார்த்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.//

வழிமொழிகிறேன்:)

சகாதேவன் said...

வாருங்கள் ரசிகா,
நன்றி. மொழி படத்திற்கு பிறகு எனக்குப் பிடித்த படம்

ராமலக்ஷ்மி said...

நீங்கள் சொன்னால் படம் நன்றாகத்தான் இருக்கும். பார்த்து விட வேண்டியதுதான்.

ராமலக்ஷ்மி said...

//ஹீரோவுக்கு தோழர்களாக விவேக், சார்லி, தாமு, வையாபுரி யாரும் இல்லாமல் மூன்று புதிய முகங்களைப் பார்த்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.//

ரசிகன் said: //வழிமொழிகிறேன்:)//

நானும்..
விட்டால் இன்னும் 10 வருடங்கள் தலையில் 'விக்'கை மாட்டிக் கொண்டு ஹீரோவுக்கு தோழர்களாக வந்து கொண்டிருப்பார்கள். கஷ்டம்டா சாமி!