Sunday, September 20, 2009

"அண்ணா ஒரு பைத்தியமா ஆயிருச்சு"

நூற்றாண்டுக்கும் இதற்கும் சம்பந்தமில்லீங்க.
திகம்பர சாமியார்னு எம்.என்.நம்பியார் பல வேஷங்களில் நடித்து 50/51ல் வந்த படம்.

நரசிம்ம பாரதியும் திரொளபதியும் தான் ஜோடின்னு ஞாபகம்.

எத்தனையோ பழைய படங்களை தியேட்டரிலோ டிவியிலோ பார்க்க முடிகிறது. இது மாதிரி சில நல்ல படங்களை ஏன் பார்க்க முடிவதில்லை.
அதிலே ஒரு பாட்டு.

அண்ணா ஒரு பைத்தியமா ஆயிருச்சு
அண்ணி மேலே சொக்கி சொக்கி
ஓ அண்ணா சொக்கி சொக்கி
தூங்காம அண்ணாவையே சுத்தி சுத்தி
ஓடுராளே மக்கு மக்கு
ஓ அண்ணி மக்கு மக்கு.

எங்க வீட்டு ராஜாவை எங்கிருந்தோ
ராணி வந்து இழுத்து வளைச்சுக்கிட்டா பார்த்தியா
இது ரெட்டமாட்டு வண்டியாச்சு பாத்தியா
இனி வேளைக்கு நீ வீடு வந்து சேரணும்
சொந்த வேலையெல்லாம் மூட்டி கட்டி ஆகணும்
நாளுக்கொரு வேட்டி சட்டை மாத்தணும்
நடராஜா போல் நடை நடந்து காட்டணும்
டக்கு டக்கு டக்கு டக்கு
அண்ணா ஒரு பைத்தியமா.....

ஒண்ணோட் ஒண்ணு இங்கே ரெண்டாச்சு -இந்த
ரெண்டோட ஒண்ணு வந்து மூணாகும்
அண்ணியோட நீ தனியா பேசுவே- அப்போ
அந்த பையன் குடுகுடுனு ஓடுவான் -இனி
என்னை நீயும் ஏரெடுத்து பார்ப்பியா- எந்தன்
பாட்டையுமே நீ ரசிச்சு கேப்பியா
டக்கு டக்கு டக்கு டக்கு"
அண்ணா ஒரு பைத்தியமா ........

எங்க பெரிய அண்ணனுக்கு கல்யாணமான புதிது. அப்ப எனக்கு வயசு 12/13. நல்லாவே பாடுவேன். இந்த பாட்டை என்னை பாடச்சொல்லி என் அம்மா ஆசையா கேட்பாள்.
நாலு நாளுக்கு முன் இந்த படத்தைப் பற்றி யாரோ வலையில் நம்பியார் 10 வேஷங்களில் நடித்தது பற்றி எழுதி இருந்தார்கள். அதை க்ளிக் செய்தால் எனக்கு கிடைக்கவே இல்லை. அப்போதான் இந்த பாட்டு நினைவு வந்தது.
முதல் சரணத்தின் வரிகள் மறந்து போச்சு.யாராவது சொல்லுங்களேன் என்று எழுதி இருந்தேன். நான் எதிர்பார்த்தது போல நானானி சொல்லிட்டாங்க. நன்றியுடன் சேர்த்து எழுதி விட்டேன்.

6 comments:

goma said...

உங்கள் இளமைக் கால நினைவுகள் சீராக ஓடும் சின்ன நதி போல் பயணித்திருக்கிறது....அவ்வப்போது கால எந்திரத்தில் பின்னோக்கிச் சென்ரு வருவது தெரிகிறது.

நானானி said...

இந்தாங்க புடிங்க விடுபட்டதை,

"இனி ரெட்டமாட்டு வண்டியாச்சு பாத்தியா
இனி வேளைக்கு வீடு வந்து சேரணும்
சொந்த வேலையெல்லாம் மூட்டி கட்டி ஆகணும்
நடராஜா போல் நடை நடந்து காட்டணும்
டக்கு டக்கு டக்கு டக்கு"

சர்தானா வாத்தியாரே...சர்தானா?

நானானி said...

மற்றொரு பாட்டு நினைவிருக்கா?

"ஊசிப் பட்டாசு வேடிக்கையாய் தீ
வச்சாலே வெடி டமார் டமார்"

சகாதேவன் said...

நான் எதிர்பார்த்தது போல நானானி சொல்லிட்டாங்க. பதிவிலேயே சொல்லி எழுதிட்டேன். நன்றி.

நானானி said...

சகாதேவன்,
அந்த வரிகள் நான் சொல்லலை,
நானானியோட அக்காக்கிட்டே கேட்டுச் சொன்னது. எனக்கு அங்கங்கே கோடவுன் இருக்கு தெரியுமா?

நானானி said...

நன்றி அக்காவுக்கு, சேரியா?