கல்யாண சமையல் சாதம்
காய்கறிகளும் பிரமாதம்
சாப்பிட்ட பிறகு பார்த்தால்
எல்லா இலையிலும் மீதம்.
முன்னெல்லாம் கல்யாண வீட்டில் முகூர்த்தம் முடிந்ததும் இலை போட்டு சாப்பிட அழைப்பார்கள். பாயில் உட்கார்ந்து நாமே தண்ணீர் விட்டு இலை கழுவியதும் உப்பு, ஊறுகாயில் ஆரம்பித்து பரிமாறுவார்கள். ஒரு "நாலு குழி சட்டி"யில் பொரியல், கூட்டு, அவியல், பச்சடி என்று கேட்டு அதனதன் இடத்தில் இடுவார்கள். சாப்பிடும்போதுஇலையைப் பார்த்து மீண்டும் பரிமாறுவார்கள். நாம் வேண்டியதை வாங்கிக் கொள்ளவும் பிடிக்காததை ஒதுக்கி விடவும் முடியும். இலையில் எதுவும் வீணாகாமல் போகும்.
எங்கள் வீட்டுக் கல்யாணப் பந்தியில் என் அருகே அமர்ந்த என் அண்னனின் நண்பர் திரு.கந்தசாமி அவர்கள் என்னிடம் சொன்னார், " உன் இலையில் மிளகாய், கரிவேப்பிலை, முருங்கைக்காய் தோல் ஆகியவைதான் இருக்கலாம். வேறு எதுவும் மிச்சம் வைக்கக்கூடாது" என்றார். அன்றிலிருந்து 45 வருடங்களாக அப்படித்தான் சாப்பிடுகிறேன்.
இன்று எதிலும் அவசரம்.முகூர்த்தம் முடியும் முன்பே இலையில் எல்லா கறிகளும் பரிமாறி, நாம் அமர்ந்தபின் சாதம் கொட்டுவார்கள். ஆமாம், பெரிய அகப்பையில் சாதம் இடுவார்கள். இரண்டாவது ரவுண்டு வர அவர்களுக்கு பொறுமை இல்லை. காரணம் பரிசாரகர்கள் யாருக்கும் இந்த வேலைக்கு வேண்டிய அனுபவமும் கரிசனமும் கிடையாது. சமையல் கான்ட்ராக்டர்களும் அவர்களுக்கு ட்ரெயினிங் கொடுத்து அனுப்புவது இல்லை. கடைசியில் எல்லா இலைகளிலும் எல்லா பதார்த்தங்களூம் மீதமாகி குப்பையாக வீசப்படுகின்றன. விருந்தினர்களும் வீணாக்காமல் சாப்பிடும் வழக்கம் கொள்ள வேண்டும்.
பஃபே ஸ்டைலிலும் இப்படித்தான். ஒருமுறை, சர்வர் அவியல் ஒரு பெரிய கரண்டியில் எடுத்தான். நான் கொஞ்சம் போதும் என்றால் அவன் கொஞ்சம்தான் விழும் என்றான். நான் கரண்டியை அவனிடமிருந்து வாங்கி முழுவதையும் சட்டியில் தட்டிவிட்டு பாதி கரண்டி மட்டும் எடுத்துக்கொண்டேன்..
எல்லா சமயமும் இப்படி உணவு வீணாவதைப் பார்க்கும் போது மிகவும் சங்கடமாக உள்ளது. அளவாகப் பரிமாறி எல்லோரையும் நிறைவாக சாப்பிட வைத்து, மிஞ்சும் உணவை அருகில் உள்ள அனாதை விடுதியிலோ, முதியோர் இல்லத்திலோ கொடுத்தால் அவர்களும் மணமக்களை வாழ்த்துவார்களே? ஏன் செய்யக்கூடாது?
Wednesday, December 5, 2007
Friday, September 28, 2007
கிரிக்கெட்- விளையாட்டா? வியாபாரமா?
1983க்குப் பிறகு 2007ல் இந்தியா உலகக்கோப்பை வென்றது பெருமைதான்.ஆனால் அன்று உள்ள விதிகள் என்ன? பின் ஒன்டே மாட்ச் வந்தது. இன்று ட்வென்டி- 20. வியாழனன்று நாடு திரும்பிய கிரிக்கெட்டர்களுக்கு(வீரர்கள்/ஹீரோக்கள் அல்ல) அளிக்கப்பட்ட வரவேற்பும் பரிசளிப்பும் மிகையானது. 30 கிலோமீட்டருக்கு ட்ராஃபிக் ஜாம். மழையில் பைத்தியங்கள்(மக்கள்தான்) காத்து நின்று கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது. வான்கடே ஸ்டேடியத்தில் மேட்ச் பார்க்கக்கூட இவ்வளவு கூட்டம் வருமா என்று தெரியவில்லை.
ஆசியக்கோப்பை வென்ற ஹாக்கி ப்ளேயர்களுக்கு இத்தனை பரிசு தரப்பட வில்லையே என்று கேள்வி எழ, ஒரு முன்னாள் கிரிக்கெட்டர் டிவியில் விளக்குகிறார்- ஆசியக்கோப்பையை விட உலகக்கோப்பை பெரியதாம். செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாத், டென்னிஸ் சான்யா மிர்ஸா இவர்கள் எல்லாம் நாடு திரும்பிய போது இத்தனை வரவேற்பும் பரிசும் தரப்பட்டதா?
ஒரே ஒவரில் 6 சிக்ஸர் அடித்த ரவி சாஸ்திரி என்ன பரிசு வாங்கினார்? அது ரஞ்சி ட்ரோஃபி என்பதால் பேர் மட்டும்தானா. இன்று 1 கோடி ரூபாயாம், போர்ஷே காராம்.
பத்திரிகையும் "இந்தியா பாகிஸ்தானுடன் மோதல்" என்றும் "பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது" என்றும்தான் எழுதுகிறது. இது என்ன யுத்தமா? விளையாடுகிறது, ஜெயித்தது என்று எழுதினால் என்ன.
ரேடியோவில் ரன்னிங் கமென்டரி கேட்ட காலத்திலிருந்தே கிரிக்கெட் மக்களைக் கவர்ந்த கேம்தான்.பள்ளிக்கூடங்களில் இப்போது மைதானமே கிடையாது. கட்டிடங்கள்தான் உயர்ந்து கொண்டிருக்கின்றன.மற்ற விளையாட்டுகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து கல்வித்துறை மாணவர்களுக்கு விளையாட்டையும் கற்பித்து உடல்பயிற்சியுடன் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவதையும் வளர்க்க வேண்டும்.
ஆசியக்கோப்பை வென்ற ஹாக்கி ப்ளேயர்களுக்கு இத்தனை பரிசு தரப்பட வில்லையே என்று கேள்வி எழ, ஒரு முன்னாள் கிரிக்கெட்டர் டிவியில் விளக்குகிறார்- ஆசியக்கோப்பையை விட உலகக்கோப்பை பெரியதாம். செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாத், டென்னிஸ் சான்யா மிர்ஸா இவர்கள் எல்லாம் நாடு திரும்பிய போது இத்தனை வரவேற்பும் பரிசும் தரப்பட்டதா?
ஒரே ஒவரில் 6 சிக்ஸர் அடித்த ரவி சாஸ்திரி என்ன பரிசு வாங்கினார்? அது ரஞ்சி ட்ரோஃபி என்பதால் பேர் மட்டும்தானா. இன்று 1 கோடி ரூபாயாம், போர்ஷே காராம்.
பத்திரிகையும் "இந்தியா பாகிஸ்தானுடன் மோதல்" என்றும் "பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது" என்றும்தான் எழுதுகிறது. இது என்ன யுத்தமா? விளையாடுகிறது, ஜெயித்தது என்று எழுதினால் என்ன.
ரேடியோவில் ரன்னிங் கமென்டரி கேட்ட காலத்திலிருந்தே கிரிக்கெட் மக்களைக் கவர்ந்த கேம்தான்.பள்ளிக்கூடங்களில் இப்போது மைதானமே கிடையாது. கட்டிடங்கள்தான் உயர்ந்து கொண்டிருக்கின்றன.மற்ற விளையாட்டுகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து கல்வித்துறை மாணவர்களுக்கு விளையாட்டையும் கற்பித்து உடல்பயிற்சியுடன் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவதையும் வளர்க்க வேண்டும்.
Thursday, August 23, 2007
400 மில்லியன் காரணங்கள்.
அமெரிக்கர்கள் ஏன் தங்கள் காரை நிறுத்திவிட்டு பப்ளிக் ட்ரான்ஸிட் (பஸ், ரயில்) உபயோகிக்க வேண்டும் ?
பாட்டில்,கேன், காகிதம்,ப்ளாஸ்டிக் எல்லாம் ஏன் ரீசைக்கிள் செய்ய வேண்டும் ?
இந்த இரு கேள்விகளுக்கும் தன்னிடம் 400மில்லியன் காரணங்கள் உண்டு என்கிறார், ப்ராங்க் டி ஜியகோமோ, தன்னுடைய பதிப்பான மெட்ரோ-மேகஸினில்.
2006ல் யு.எஸ் ஜனத்தொகை 300மில்லியன் அடைந்து விட்டதாம். இன்னும் 36 ஆண்டுகளில் 400 மில்லியன் ஆகும் என டிமோக்ராஃபர்கள் சொல்கிறார்கள். இந்த 100மி கூடுதல் மக்கள் காற்று, தண்ணீர் தவிர ஏற்கனவே நெருக்கடியான சாலைகள், ஹைவே எல்லாவற்றிலும் பங்கு கேட்பார்கள்.
பப்ளிக் ட்ரான்ஸிட்களில் பயணிகள் எண்ணிக்கை கூடிவருகிறது. ஆனாலும் மக்கள் கார் ஒட்டுவதைக் குறைப்பதில்லை. 2043ல் தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நீர்,காற்று,சுத்தமான உணவுக்காக போட்டி போடுமே என உணர மறுக்கிறார்கள்.
2006ல் பயணிகள் எண்ணிக்கை கடந்த 49 ஆண்டுகளில் 10 பில்லியன் ஆனதாம். இதை வரைபடமாக சித்தரித்தால் 1 கேலன் கேன்களை உயரமாக அடுக்கினால் பூமியிலிருந்து சந்திரனைத் தொடுமாம். எரிபொருள் எவ்வளவு மிச்சம் ?
ஹாஃப்மன் எஸ்டேட்டிலிருந்து எல்ஜின் அல்லது ஷாம்பர்க் செல்ல ட்வுன் பஸ் இல்லையே என்று எனக்கு வருத்தம் தான். ஊரில் செய்யும் அந்த தொழிலை இங்கே செய்தால் என்ன என்று கூடத் தோன்றுகிறது.
பாட்டில்,கேன், காகிதம்,ப்ளாஸ்டிக் எல்லாம் ஏன் ரீசைக்கிள் செய்ய வேண்டும் ?
இந்த இரு கேள்விகளுக்கும் தன்னிடம் 400மில்லியன் காரணங்கள் உண்டு என்கிறார், ப்ராங்க் டி ஜியகோமோ, தன்னுடைய பதிப்பான மெட்ரோ-மேகஸினில்.
2006ல் யு.எஸ் ஜனத்தொகை 300மில்லியன் அடைந்து விட்டதாம். இன்னும் 36 ஆண்டுகளில் 400 மில்லியன் ஆகும் என டிமோக்ராஃபர்கள் சொல்கிறார்கள். இந்த 100மி கூடுதல் மக்கள் காற்று, தண்ணீர் தவிர ஏற்கனவே நெருக்கடியான சாலைகள், ஹைவே எல்லாவற்றிலும் பங்கு கேட்பார்கள்.
பப்ளிக் ட்ரான்ஸிட்களில் பயணிகள் எண்ணிக்கை கூடிவருகிறது. ஆனாலும் மக்கள் கார் ஒட்டுவதைக் குறைப்பதில்லை. 2043ல் தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நீர்,காற்று,சுத்தமான உணவுக்காக போட்டி போடுமே என உணர மறுக்கிறார்கள்.
2006ல் பயணிகள் எண்ணிக்கை கடந்த 49 ஆண்டுகளில் 10 பில்லியன் ஆனதாம். இதை வரைபடமாக சித்தரித்தால் 1 கேலன் கேன்களை உயரமாக அடுக்கினால் பூமியிலிருந்து சந்திரனைத் தொடுமாம். எரிபொருள் எவ்வளவு மிச்சம் ?
ஹாஃப்மன் எஸ்டேட்டிலிருந்து எல்ஜின் அல்லது ஷாம்பர்க் செல்ல ட்வுன் பஸ் இல்லையே என்று எனக்கு வருத்தம் தான். ஊரில் செய்யும் அந்த தொழிலை இங்கே செய்தால் என்ன என்று கூடத் தோன்றுகிறது.
மேட் இன் யு எஸ் ஏ
நாங்கள் சீனியர் சிட்டிசன்ஸ் கூடினால் பேசுவதே அந்த நாளில் நாம் வாங்கிய வீட்டு உபயோகப் பொருட்கள்,கார்கள், உடைகள், டூத் பேஸ்ட்,பொம்மை,என்று எல்லாமே மேட் இன் யு.எஸ்.ஏ சீட்டுடன் கூடிய தரமான பொருட்கள் பற்றியே என்று எம்.வி.ரைட் சிகாகோ ட்ரிப்யூனுக்கு எழுதுயுள்ளார்.
இன்னொரு செய்தி, கடந்த 12 மாதங்களாக நாங்கள் மேட் இன் சைனா என்றால் எந்தப் பொருளையும் வாங்குவதில்லை என்று ஒரு குடும்பமே பேட்டியில் சொல்கிறது.
இன்னொரு செய்தி, கடந்த 12 மாதங்களாக நாங்கள் மேட் இன் சைனா என்றால் எந்தப் பொருளையும் வாங்குவதில்லை என்று ஒரு குடும்பமே பேட்டியில் சொல்கிறது.
Wednesday, August 15, 2007
பவுண்டில் அடைபட்ட கார்கள்.

நம்மூரில் தவறான இடத்தில் மேய்ந்த மாடுகளை பவுண்டில் அடைப்பார்கள்.
ஷிகாகோவில் தவறான இடத்தில் நிறுத்தப்பட்ட கார்களை ட்ரக் கொண்டு இழுத்து ஒரு பவுண்டில் அடைத்து, நிருத்தி விடுகிறார்கள். $ 160 கட்டித்தான் காரை மீட்க முடியும்.அதிக வேகம்,சிகப்பு சிக்னலைத் தாண்டி செல்லுதல் எல்லாவற்றிற்கும் காப்ஸ்(cops )டிக்கெட் கொடுத்துவிடுவார்கள். குற்றத்தைப் பொறுத்து ஃபைன் $90 வரை ஆகும். சென்ற ஆண்டு இப்படி வசூலான தொகை $ 210 மில்லியன். டிக்கெட் பெற்றவர்கள் ஒரு க்ளாஸ் வேறு அட்டெண்ட் பண்ணணுமாம்.
ஒரு பெண்மணி தன் காரைப் பார்க் செய்த இடத்தில், ஒரு ஆபீசர் வந்து 4 முதல் 6 p.m. வரை பார்க் செய்ய தடை என்று டிக்கெட் எழுதினார். அப்படி ஒரு சைன் இங்கு இல்லையே என்றால் அவர்,"முன்பு இருந்தது, ஆனால் 2 ஆண்டுகளாக இல்லை" என்றாராம். பிறகு ஏன் டிக்கெட் எழுதினீர் எனக்கேட்டால்,"என் அதிகாரி தினமும் நான் டிக்கெட் எழுத வேண்டும் என்கிறார், நீங்கள் அப்பீல் செய்யுங்கள்" என்றார். $93 கோர்ட் ஃபீஸ் கட்டுவதை விட $50 ஃபைன் கட்டுவது என்று முடிவெடுத்தார்.
நம்ம ஊர் மாதிரி இருக்கிறதே எனத் தோன்றுகிறது. ஆனால் வசூல் எல்லாம் ட்ரெஷரி சென்றடைகிறது.
நம்ம மரப்பாச்சி, செப்பு, தலையாட்டி பொம்மைகளை எக்ஸ்போர்ட் செய்வோமா?
சைனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மைகள் எல்லாம் அமெரிக்காவில் திரும்பப் பெறப் படுகின்றன. பெயிண்டில் ஈயம் அதிகம் காணப்படுகிறதாம். சில வகை பொம்மைகளில் உள்ள சின்ன காந்தங்களை குழந்தைகள் விழுங்கிவிட்டால் வயிற்றைக் கிழித்துவிடுமாம். என்ன பயங்கரம்?
நான் ஊருக்குச் செல்கையில் என் பேத்திகளுக்கு துணியால் ஆன ஸாப்ட் டாய்ஸ்தான் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.
சீன அரசும் இப்போது தரக்கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறதாம். நம் ஊரில் செய்யப்படும் மரப்பாச்சி, செப்பு, தலையாட்டி பொம்மைகளை எல்லாம் பெயிண்ட் அடிக்காமல் (நம்ம பெயிண்டில் ஈயம் அளவு தெரியாதே) ஏற்றுமதி செய்தால் என்ன என்று தோன்றுகிறது.இங்கு வாழும் இந்தியக் குழந்தைகளுக்குக் கூட அவை தெரியாது.
நான் ஊருக்குச் செல்கையில் என் பேத்திகளுக்கு துணியால் ஆன ஸாப்ட் டாய்ஸ்தான் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.
சீன அரசும் இப்போது தரக்கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறதாம். நம் ஊரில் செய்யப்படும் மரப்பாச்சி, செப்பு, தலையாட்டி பொம்மைகளை எல்லாம் பெயிண்ட் அடிக்காமல் (நம்ம பெயிண்டில் ஈயம் அளவு தெரியாதே) ஏற்றுமதி செய்தால் என்ன என்று தோன்றுகிறது.இங்கு வாழும் இந்தியக் குழந்தைகளுக்குக் கூட அவை தெரியாது.
Tuesday, August 14, 2007
ஆக, பதினைந்தன்று என்ன செய்வீங்க?
வருடாவருடம் தீபாவளி போல சுதந்திர தினமும் விடுமுறையும் வந்து விடும். எல்லா டிவியிலும் எதைப் பார்க்க என்று நம் சுதந்திரத்தைப் பறிக்கும் அளவு நிகழ்ச்சிகள்.
முன்னெல்லாம் சுதந்திர தினத்தன்று சென்னை கடற்கரையில் கவர்னரும் நெல்லை வ உ சி மைதானத்தில் கலெக்டரும் கொடியேற்றுவதைப் பார்க்க கூட்டம் அலைமோதும். இப்போது கிரிக்கெட் மாட்ச்கூட வீட்டிலிருந்தே பார்க்கலாம்.
எங்கள் வீட்டில் நான் டிவி பார்க்கையில் தேசீய கீதம் இசைக்கும் போது எழுந்து நிற்பேன். வீட்டில் எல்லோரும் முதலில் சிரித்தாலும், இப்ப எழுகிறார்கள்.
அப்ப நீங்க?
முன்னெல்லாம் சுதந்திர தினத்தன்று சென்னை கடற்கரையில் கவர்னரும் நெல்லை வ உ சி மைதானத்தில் கலெக்டரும் கொடியேற்றுவதைப் பார்க்க கூட்டம் அலைமோதும். இப்போது கிரிக்கெட் மாட்ச்கூட வீட்டிலிருந்தே பார்க்கலாம்.
எங்கள் வீட்டில் நான் டிவி பார்க்கையில் தேசீய கீதம் இசைக்கும் போது எழுந்து நிற்பேன். வீட்டில் எல்லோரும் முதலில் சிரித்தாலும், இப்ப எழுகிறார்கள்.
அப்ப நீங்க?
Subscribe to:
Posts (Atom)